Quantcast
Channel: ஜோஸபின் கதைக்கிறேன்!
Viewing all 358 articles
Browse latest View live

பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை

$
0
0
முதல் காட்சியே நெற்றி பொட்டில் அடித்தது போல் நாயை இரெயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியுடன் துவங்குகின்றது. பின்பு சமூக அவலத்தை எடுத்து சொல்லும் கருத்துள்ள சோகத்தை அள்ளிகொட்டும்  பாடல். 
அப்புறம் ஆங்கில மீடியம், தமிழ் மொழிகல்வி என கல்லூரி வாழ்க்கையுடன் நம்மை அழைத்து செல்கின்றனர். அங்கு கிடைக்கும் பெண் நட்பு கதாநாயகனுக்கு சிறப்பாக  படிக்கும்   உந்து சக்தியை தருகிறது. 

பின்பு கல்யாணத்திற்கு அழைப்பது , கதிர் அடிபடுவது , அவர் அப்பா அவமானப்படுத்தப்படுவது என கதை இறக்கு முகமாக பயணிக்கின்றது. எல்லா படத்திலும் இருந்து மாறுபட்டு, வலுகட்டாயமாக பெண்ணை  கடத்தி செல்லும் கதாப்பாத்திரப்படைப்பில் இருந்து மாறுபட்ட ஆளுமையான கதிராக பேசவைப்பதுடன் படம் நிறைவு பெறுகின்றது. 
 முதன்மை கதாப்பாத்திரத்தை இரெயில் கட்டிவைத்து கொலை முயற்சி செய்வதும் நாயை இரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை செய்வதும் விழுப்புறத்தில் கொலையுண்ட இளவரசனை நினைவூட்டாது இருக்க இல்லை.

எல்லா கல்லூரி  சீனுகளிலும் எங்கள் கடந்த மூன்றாம் ஆண்டு விஸ்காம்  மாணவர்கள் பால் பாண்டி, பால  முரளிகிருஷ்ணன், வள்ளிநாயகம், கமலக்கண்ணன், ஜேசு போன்றவர்கள் நடித்திருந்தது பெருமையும் மகிழ்ச்சியுமாக  இருந்தது.

மண்ணின் கலைகள், மண்ணின் மனிதர்களின் இயல்பான உரையாடல்கள் கலைகள் உருவகப்படுத்திய விதம் அருமை. கதிரின் நடிப்பும் அருமை. கதைத்தளத்திற்கு பொருந்தும் பாடல் வரிகள், பாடல்கள் வரிகள் இசை அழகு.

நெல்லையை சுற்றிய ரோடுகள், எங்கள் தூயசவேரியார் கல்லூரி விடுதி சாலை, ஜான்ஸ் கல்லூரி போன்ற இடங்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.பரியன் தந்தை யாக நடித்த நடிகரின் நடிப்பு அபாரம்.பரியன் அப்பா

முரண்கள் கொண்ட இடங்கள். 
  • முதன்மை பெண் கதாப்பாத்திர படைப்பு
படிப்பில் கெட்டி ஆனால் சமூக அறிவில் சூனியம்.  90 களிலுள்ள பெ?ண்களை போல் உணர்ச்சிவசப்படுகின்றார். பையன் பிரச்சினையில் உச்சத்தில் உயிர் போகும் போராட்டத்தில் உள்ளார்; பெண் கதாப்பாத்திரமோ முட்டாய் வாங்கி கொடுத்து சின்னபுள்ளையா உருகுகிறது, அழுகின்றது, சிரிக்கின்றது, சினுங்குகின்றது.!!!

  • கல்லூரி முதல்வர்
படிப்பு நம்மை உயர்த்தும் என்ற நல்ல கருத்தை முன் வைய்ப்பவர்.  அடுத்தவன் நம் முன் கைகட்டி நிற்பான் என போதிக்கின்றது;  கைகட்டி நிற்பதும் கைகட்டவைத்து நிற்க வைக்கப்படுவதும் இழிவு நிலையே.
மாணவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றதும் சரியான நிலைபாடு எடுக்காது “ நம்மால் அவன்களை அடக்க இயலாது, இவன் அடக்கட்டுமே, போராடி சாகட்டும் போன்ற வசனங்கள் சமூக வளர்ச்சிக்கு என்ன சொல்ல வருகிறது. 
 கல்லூரி முதல்வர் பதைவியை தன்னால் திரன்பட நேரடியாக செயல்படுத்த இயலாது மறைமுகமாக ஒரு கோஷடிக்கு இடம் கொடுத்து இன்னொரு கோஷ்டியை அடக்க நினைக்கும் நிர்ஜீவனான அதிகார நிலை.
கதிரை பெண்கள் கழிவறையில் தள்ளி விட்டது எதிர் அணி என்று அறிந்தும் கதிர் பெற்றோரை மட்டும் வரவைப்பது முதல்வர் என்ற அதிகாரத்தை வலிமையானவர்களுக்காக வணங்குவது போல் தான் உள்ளது,

  • அடுத்து பேராசிரியை என்ற கதாப்பாத்திரம்

இரு மாணவர்களுக்கு ஏதோ பிரச்சினை என்றால், சரியாக பிரச்சினையை புரியவைக்காது பெண் மாணவியிடம் ”அவன் உன்னை காதலிக்கான்”  என கல்யாணத் தரகர் வேலை செய்யும் அவலம்.


  • பேராசிரியை : மாணவரும் மாணவியும் பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கரடி மாதிரி புகுந்த ஆசிரியையை கண்டதும் மாணவர்கள் எழுந்து ஒரு பேருக்குக்கூட வணக்கம் செலுத்தவில்லை. ஆசிரியையோ, ”நான் உனக்கு தேவதையா, எத்தனை தேவதை உண்டு என வினவும்  ,  வழியும் உரையாடல்
  • அப்பா கதாப்பாத்திரம். நல்லவரா கெட்டவரா? கல்யாணத்திற்கு வந்த பையனை  தேவையில்லாது விசாரிப்பது , அறையில் பூட்டி வைத்து அடிவாங்க காரணமாக இருப்பது, அப்புறம் கெஞ்சுவது, கடைசி எல்லாம் முடிந்த பின்பு போய் வழிந்து கொண்டு ”என்ன நடக்குமோ தெரியாது அப்ப பாப்போம்”ன்னு எதிர்பார்ப்பை உருவாக்குவது. இவ்வளவு நேர்மறையான  தகப்பன் தன் பெண் பிள்ளைக்கு அறிவுரை வழங்காது  இன்னொரு பெற்றோரின்  மகனை அடிக்கும் மன நிலை என்னது.
  • பல ஆணவக்கொலைகள் செய்யும் முதியவர் கதாப்பாத்திரம்! எந்த படத்திலும் காணாத வித்தியாசமான வில்லன்.  இரக்கத்தோடு மதிப்புடன் காண வேண்டிய முதியவர்களை கண்டாலே இனி பயம் தான் வரும். 
  • அரசியல்சட்டம் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே ஜாதிய கட்டமைப்பில் நின்றுகொண்டு படித்தால், வாழ்க்கையை எதிர் கொண்டால் கலைக்கல்லூரி பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் இருந்து என்ன அரசியல் மாற்றத்தை எதிர் நொக்க இயலும்.
  • சமூகத்தில் புரையோடிகொண்டிருக்கும்  அழுகி கொண்டிருக்கும் ஜாதி என்ற புண்ணை நவீன சிந்தனையால் தீர்வு தேடாது அடிமட்ட,  சிந்தனையுடன் வண்மத்துடன் எதிர்கொள்வது போல் எடுக்கப்பட்ட பல காட்சிகள் புண்ணில் வேல் பாய்ப்பது போல் தான் உள்ளது. 
  • சமூகத்தில் மறைந்து கொண்டிருக்கும் ’சீமியாட்டிக்’ ஜாதிய  அடையாளங்களை எல்லாம் படமிட்டு காட்டி இளம் சமுதாய குழந்தைகள் மனதில் ஒரு வண்மத்தை பரவவும் பல சீன்கள் காரணமாக அமையும் . 
  • ஒரு சீனில் மாணவர் கதிர் மாணவிகள் கழிவறையில் விழவைக்கப்படுவார். மாணவிகள் அலறுவதும் கதிரை கண்டு பாம்பை காண்பது போல் நெளிவதும் ஓடுவதும் மிகவும் அபத்தமாக உள்ளது. சட்டம் படிக்க வரும் மாணவிகள் இந்தளவு கோழைகளும் பயந்தாம்கொள்ளிகளுமா? 
  • வரலாற்றை அல்லது நிகழ்கால நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்ட சமூக கருத்துள்ள வண்முறைப்படமாகவே எனக்கு தோன்றியது. 
  • எத்தனை யுகங்களுக்கு தான் கல்லூரி சூழல், கல்லூரி பேராசிரியர்களை கேனைகளாக உருவகுப்பீர்கள்?
  • எல்லா பொழுதும் பாதிக்கப்படும் கதிர் ஒருபுறம், எதிர் அணி நெஞ்சை நிமர்த்தி அடாவடித்தனம் பண்ணுவார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் கீழ் இயங்கும் அரசு , அரசின் கீழ் இயங்கும் சுதந்திர இந்தியாவின் கல்வி நிலையங்களில் நிலை இது தானா?
  • நல்ல திரைப்படம். ஆனால் கதாப்பாத்திரப்படைப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய படம் இது. 

திரைப்படம் என்பது கோஷம் அல்ல, அறிவுரையல்ல  ஆனால் ஒரு தீர்வாக அமையவேண்டியது தேவையாகும். இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.

96 பப்பி காதல் - திரைப்பார்வை

$
0
0
பல நாட்கள் காத்திருப்பின் பின் 96 திரைப்படம் பார்த்தாச்சு.
22 வருடங்களுக்கு பின் நண்பர்கள் சந்திப்பது வரை அருமையானபடம். விருவிருப்பான திரைக்கதை. அதன் பின்பு அப்படத்தை காண பார்வையாளர்களுக்கு பொறுமையும் சகிப்பு தன்மையும் கொஞ்சம் அதிகமாகவே வேண்டும். விஜய்சேதுபதியின் ராமசந்திரன் என்ற கதாப்பாத்திரத்தை ஒரு பாட்டுடன் ஆளுமையா காட்டிவிட்டு அப்படியே மழுங்கலடித்து விட்டனர்.

96 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மிடித்த நண்பர்கள் சந்தித்து கொள்கின்றனர் .22 வருடங்களுக்கு பின் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான சந்திக்கும் தருணம் ஜானு மலேஷியாவில் இருந்து வருகிறார். ஜானு கதாப்பாத்திரம் அன்றைய பெண்களின் மிடுக்கை பிரதிபலிப்பது அருமை. எப்போதும் ஒரு படி முன்னே சிந்திக்கும், செயலாற்றும் பொறுப்பான கதாப்பாத்திரம். நண்பர்களை காண தன் மகளை மலேஷிவில் விட்டு விட்டு ஒரு நாள் விடுமுறை என வந்து சேர்கின்றார். ஜானுவை கண்டதும் ராமசந்திரன் தலைசுற்றி விழுகின்றாராம் வெட்கப்படுகின்றாராம்(இதுவெல்லாம் ஓவரு). பின்பு இரவானது எல்லோரும் பிரிய ராமசந்திரனிடம் ஜானுவை ஹோட்டலில் விட்டு விட்டு போகச்சொல்கின்றனர்.

நண்பி. ”அவளை கொண்டு விட்டுட்டியா” என ராமிடம் கேட்க; அடுத்து ”நீ எங்க இருக்க” என ஜானுவிடம். இப்படி இயக்குனர்; பார்வையாளர்களை அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்து செல்லும் தமிழ் முட்டாள் தனத்துடன் நகர்த்தி, மலேஷியா போனாளா இல்லையா என உளவியல் சென்றிமென்றுடன் முடித்துள்ளார். ஜானுவோ உன்னுடன் பேச வேண்டும், உன்னுடன் இருக்க வேண்டும் என்ற உரையாடலுடன் அழகான மனித மாண்பை வெளிப்படுத்துகின்றார். மலேஷியாவில் இருந்து வந்த தோழியை விருந்து முடிந்ததும் ஒவ்வொருவரும் தனியாக விட்டு சென்றிருப்பார்களா? அப்ப்டியே சென்றிருந்தாலும் 40 வயதை கடந்த தோழமைகள் தங்கள் நண்பர்கள் பற்றி சிறுபிள்ளைத்தனத்துடனா யோசித்திருப்பார்கள்?

நடு இரவில் ஜானுவின் அறையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர், இரெயிலில் பயணிக்கின்றனர், ராம் வீட்டில் தங்குகின்றனர். எல்லா நொடியிலும் இயக்குனரின் பார்வை கதையிலோ கருத்திலோ அல்ல அவர்கள் வேலியை தாண்டி நடந்து கொண்டார்களா என்ற சந்தேகப்பார்வை தான்!!! அதில் ஜானு தூங்கும் இடத்தில் தாலி சென்றிமென்றையும் புகுத்தி விட்டனர். பள்ளி குழந்தைக்காதலில் வீழ்ந்த இரு நபர்கள் வெகுநாட்கள் கடந்து பொறுப்புடன் சந்தித்து கொண்ட போது என்ன நடந்தது என்ன நடக்க்க போவுது என்ற இயக்குனரின் கொச்சை பார்வை இருக்கே?

பத்தாம் வகுப்பு மாணவன் தந்தையின் கடனால் இரவோடு இரவாக சென்னை ஓடிப்போய் வாழ்ந்தார் என்று முடித்திருந்தால் ராமசந்திரன் கதாப்பாத்திரம் தப்பித்திருக்கும். யாரோ உதவியுடன் ஜானு படிப்பதை அவதானிக்கின்றார், உடுத்தி வந்த சேலைக்கலர் கூட நினைவு இருக்கிறது. ஜானுவை பிந்தொடர்ந்த விடலை பையனைக்கூட அடித்துள்ளான் ஆனால் ஜானுவை மட்டும் நேரில் பார்க்க துணியவில்லையாம். அதற்கு வாசந்தி உதவி வேற...!!????

எல்லா தருணங்களிலும் மிகவும் சரியாக நடந்த ஆளுமை கொண்ட ஜானு தனது 40 வது வயதில் கழிவறையில் இருந்து கொண்டு கதறி கதறி அழுகின்றாராம். தன்னால் காதலன் கிரோணிக் பாச்சிலாராக இருக்கிறான் எனத்தெரிந்ததும் ”நீ கன்னி கழியாதவனா? என்ற கேள்வி வேற. அடுத்து காதலன்; நீ சந்தோஷமா இருக்கியா என்றது, நான் அமைதியா இருக்கிறேன், பிரச்சினை இல்லை என்ற மழுப்பல் பதில் வேற....பல சீனுகள் நெருடல், லாஜிக் களைந்து கொண்டது, ஒரே நாளில் சந்தித்து மகிழ்ச்சியா பிரியா வேண்டிய 40 வயது மத்திய வயது நண்பர்கள் பதின்ம வயது பிள்ளைகளை போல் அழுது வழிஞ்சி, ஜானுக்காக ஒரு மலேஷியா டிக்கட் எடுக்க வைத்து நாடகத்தனமாக மாற்றி; ஜானு என்ற கதாப்பாத்திரத்தையும் உடைத்து படத்தை முடித்துள்ளனர்.


28 வருடங்களுக்கு பின்பு சந்தித்தபோது; நாங்கள் படிக்கும் வேளையில் மிகவும் பிரபலமாக இருந்த காதல் கதையின் கதாநாயகனான நண்பனிடம் ... “இப்போது என்ன தோன்றுகின்றது உன் பள்ளி காதலை பற்றி? எனக்கேட்ட போது. அவன் மறுமொழி சிரிப்புடன் சொன்னது இப்படியாக இருந்தது, அதை நினைத்தால் ஒரு வெட்கம், சே .......அது ஒரு குழந்தைத்தனமான விளையாட்டு. காதல் என விழுந்தனால் ஒரு பெண்ணிடம் மட்டுமே பேச்சு, சிந்தனை என என் பள்ளி பருவம் சுருங்கி விட்டது. அப்படி அல்லாது நட்பின் வழி நடந்திருப்பேன் என்றால் நிறைய தோழிகள் கிடைத்திருப்பார்கள்; அன்றே உங்கள் அனைவரிடவும் நிறைய பேசியிருப்பேன் என வருத்தப்பட்டார். பள்ளி நண்பர்களுடன் மறுபடி கதைக்கும் போது ” என்னடா எப்படி இருக்கேன்னு கேட்கும் தொனியும் , உரிமையும், சுதந்திரவும் காதல் வயப்பட்டு தோல்வியை கண்டவர்களால் அனுபவிக்க இயலாது என்றே நினைக்கின்றேன். வாழ் நாள் முழுக்க ஒரு அவமானத்தின் , அவநம்பிக்கையின் சோகத்தின் ஒரு நிழல் தொடரத்தான் செய்யும்.
படிக்கும் பருவத்தில் காதலை விட நட்பு பேணுவதே கர்வம். பள்ளி நண்பர்களிடம் இப்போது கதைக்கும் போது நம்மையறியாது குழந்தைகளாக மாறி விடுகின்றோம். வாழ்க்கையில் சந்தித்த கசப்புகளை, துயர்களை மறந்து எழுகின்றோம். ஆனால் இப்படத்தில் சந்தேகப்பார்வையில் நண்பர்கள் பிரிவதே அபத்தமாக இருந்தது.

விஜயசேதுபதி கதாப்பாத்திரப் படைப்பு சொதப்பி விட்டது. ராமசந்திரன் கதாப்பாத்திரம் விமர்சனத்தை எதிர்கொண்ட காரணவும்; முழுவளர்ச்சி பெறாத வெறும் ’சென்றிமென்று இடியட்”டாக முடித்ததால் தான். மாணவிகளுடன் பேசும் முறையும் ஒரு மாணவி கண்ணால் அநியாயத்திற்கு வழிவதும் ஐயோ கொடுமை.......
96 ல் அண்ணாத்தே அண்ணாத்தே ந்னு ஒரு புள்ளை உடன் சைக்கிளில் பயணிக்கின்றது. எந்த ஊரில் இப்படியான சுதந்திரத்துடன் தமிழ் குழந்தைகள் வளர்ந்தார்கள் என அறிய ஆவலுடன் உள்ளேன். சூட்கேசில் ஜானுவின் ஒரு ஜோடி உடையையும் சேர்த்து வைத்ததுடன் படத்தை முடித்தது; ராமசந்திரனின் புகைப்பட மாணவியை பற்றி ஜானு பிரத்தியேகமாக ராமசந்திரனிடம் எடுத்துரைப்பது என அடுத்த பகுதி படத்தை எடுக்கவும் பாதை அமைத்துள்ளனர்.

இப்படி இருவர் சந்திப்பு படுக்கையுடன் முடிந்ததா?அல்லாது தொடாது தமிழ் பண்பாடு தாலி சென்றிமென்றிடன் பிரிந்து சென்றனரா என்ற இயக்குனரின் தேடுதலை முடித்துள்ளார்.

தமிழ் சமூகம்; உணர்வு சென்றிமென்று முட்டாள்த்தனத்தில் மீண்டு வந்தால் கூட இந்த இயக்குனர்கள் விடமாட்டார்கள் போல. அப்படி இரு மனிதர்களின் ஆளுமை, குணம் நலன் விருப்பம் எல்லாம் ஒரு குறுகிய பார்வையில் மையம் கொள்ள வைத்து அழகான மென்மையான, கருத்தாக்கம் கொண்ட மனித உணர்வுகளை அதை அதன் நல்ல பாதையில் வெளிப்படுத்தி கொண்டாடவேண்டியதை கதறி கதறி அழ வைத்து படத்தை முடித்தது படத்தில் மேல் இருந்த எதிர் பார்ப்பை முடித்தது ஏமாற்றமே.

ஒரு பப்பி காதலை பிரமாண்டப்படுத்தி ஒரு கேலி காதலாக மாற்றியுள்ளனர்.
இருபாடல்கள் அருமை. முதல் பாடலில் பாடல் மட்டுமல்ல காட்சி அமைப்பு கூட அழகு.

ஆதலால் தம்பதிகளே காதல் செய்வீர்.

$
0
0

வாலன்டியன் நாள் கொண்டாட்டம்- திண்டாட்டம் இன்றே ஆரம்பித்து விட்டது. முகநூல் எங்கும் காதல் வரிகள்.
 சரி இந்த  வாலன்டையன் யார்? என தெரிந்து கொள்வோம். நாலாம் நூற்றாண்டில் ரோம் தேசத்தில்  வாழ்ந்த ஒரு  கிறிஸ்தவ துறவியார் ஆவார் அவர்.  அந்ரேரம் ரோம் ஆண்ட கொடும்கோல் பேரரசன், படைவீரர்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தடை செய்திருந்தார்.
 மக்கள் அன்பிலும் காதலிலும் வாழவேண்டிய தேவையை உணர்ந்த வாலண்டியன் மிகவும் ரகசியமாக ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து கொண்டிருந்தார். எல்லா நல்லவர்களுக்கும் நடப்பது போல், சில பொல்லாதவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அரசனால் கொல்லப்பட்டார். நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்துலாலும் 14 ஆம் நூற்றாண்டு முதலே இவருடைய நினைவு தினம் பெப். 14 காதல் தினமாக கொண்டாடப்பட்டது.  சில நாடுகளில் ’ஜூலை 6’யும் காதல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கொண்டாட்டம் இந்தியாவில் 1990  யிருத்து  உலக மயமாக்கலுக்கு பின், மக்களின் உணர்வுகளை யுக்தியுடன் இறக்குமதி செய்யப்பட்டு ஊடக துணையுடன் பல உருவங்களில் பல பல நோக்குடன்  கொண்டாடப்பட்டு வருகிறது.
,அதாவது கல்யாணம் செய்து கொள்ளாத இரு நபர்களின் ’காதல் தினமாக’வே அறியப்பட்டு  வருகின்றது. ஆனால் உண்மையில் இது தம்பதிகள் கொண்டாப்பட வேண்டிய தினம்.

திருமண உறவில் தான் நேசவும் அன்பும் காதலும் ஒருங்கே சேர்ந்த  உறவு உள்ளது.  தற்காலைய சூழலில் இக்கொண்டாட்டம் தம்பதிகள் கொண்டாட வேண்டிய அவசியம் மிகவும் தேவையாக உள்ளது.
1990 குழந்தைகள் இந்த நூற்றாண்டில் மிகவும் பாதிப்படைந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் என்றே கூறவேண்டும். உலகாலவியல் குடும்பத்தை உடைத்து தனி நபர்களாக மனிதர்களை பிரித்த காலமிது. வேலை பணம் ஈட்டுதல் என தம்பதிகள் பிரிந்திருக்கும் கால சூழல் இது.  50 % திருமணங்களும் தோல்வியில் தழுவும் மிகவும் ஆபத்தான காலவும் இதுவே.
காதலிலும் பரிவிலும் வாழ வேண்டிய பல தம்பதிகள், தினம் ஒருமுறை கூட தங்களை தழுவி கொள்ளவோ அணைத்து கொள்ளவோ நேரம் அற்று ஓடி ஓடி வேலை செய்யும் பொல்லாத காலம் இது.

சேர்ந்து  வாழும் தம்பதிகளுக்கு வாழத்தெரியாதவர்களாக இருக்கும் போது பல தம்பதிகள் வேலை விடையங்களுக்கு என பல காலம் தனித்தும் வாழ்க்கை நடத்த தயங்குவது இல்லை.
பொறுப்பாக வாழுவேண்டிய தம்பதிகள் காதலிலும் அன்பிலும் மலர வேண்டிய பல தம்பதிகளுக்கு எப்படி காதலிப்பது என்றே தெரியாது வாழ்க்கையை முடித்து கொண்டு இருக்கின்றனர்.அதனால் தான் இத்தினத்தை  சின்ன சின்ன அரவணைப்பு, சிறு பயணம், ஒருமித்து இருந்து கதைப்பது என வாழ்க்கையை அனுபவித்து காதலுடன் வாழ நினைவுப்படுத்தும் தினம் இது.

ஆனால் இந்தியாவில் மிகவும் எதிர்ப்பை சந்திக்கும் விழாவும் இதுவே. ஏன் என்றால் கொண்டாடுபவர்கள் யார் என்ற கேள்வி பண்பாட்டு காவலர்களை துன்புறுத்தி கொண்டிருப்பது தான். வேலை, உழைப்பு தன்சார்பு  என… தன்னை நிலைநிறுத்தாத பல சின்னம் சிறுசுகள் காதல் என்ற பெயரில் களியாட்டங்களில் ஏற்படுவதால் காலாச்சார காவலர்கள் பெரிய தண்டத்தை எடுத்து கொண்டு விரட்டி கொண்டு வருகின்றனர்.

காதல் என்பது காமத்தில் அல்லாது பொறுப்பிலும், நம்பிக்கையிலும் புரிதலிலும் விட்டு கொடுப்பதிலும் வர வேண்டியது என உணர வைக்க வேண்டிய கொண்டாட்டம் இது.

விடுபட்ட காதலை மறுபடியும் மலரச்செய்ய தம்பதிகள் கொண்டாடவேண்டிய  தினம் இது   காதல் எப்போது புனிதமாகிறது என்றால்  என்றால் காதல் செய்யும் நபர்களை பொறுத்தது எனலாம். காதல் உண்மையானதாக இருக்க வேண்டும். சீசன் மாறுவது போல் வசதிக்கு ஏற்ப மாறுவது காதல் ஆகாது. காதல்….. பழிக்காது எதிர்பார்க்காது, இரு நபர்களின் நலனை இருவரும் போட்டி போட்டு நோக்கி வாழும் உன்னத நிலை இது. ஆதலால் தம்பதிகளே காதல் செய்வீர்.

யாராவது காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை இது ஒரு உடலில் நிகழும் ஒரு ரசாய மாற்றம் என்ற சொல்ல வந்தால் அந்த ரசாய மாற்றத்தை பொறுப்பாக மதியுங்கள் என்பேன்.


தரம் உயர வேண்டிய பள்ளி கல்வி !

$
0
0

தமிழகத்தில்அரசுகல்விதிட்டம்இருந்தது. காலப்போக்கில்ஆங்கில மீடியம்என்றமுன்னெடுப்பின்ஆங்கிலிக்கன், மெட்ரிக்குலேஷன், மத்திய அரசு, அனைத்து நாட்டு  படத்திட்டம் என பல திட்டங்கள் வந்துள்ளது.

 அரசு திட்ட கல்வி மூலமாகவே பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தேசிய தலைவர்கள், வியாபாரிகள் உருவாகி கொண்டு இருக்க இந்த திட்டம் சரியல்ல என ஏன் பல பல திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றது என சிந்தித்தால் உள்ளதை கால மாற்ற சூழலுக்கு தகுந்து பண்படுத்தாது கல்வியை பணம்ஈட்டும்தொழிலாகத்தான்முன்நகத்திகொண்டுவருகிதையை பார்க்க இயல்கிறது, பலபள்ளிகள்இங்குள்ளஅரசியல்வாதிகள், பணக்காரர்கள்வசமாகிவிட்டது,

பணக்காரர்கள்ஏழைகள்எனமாணவர்களைபிரித்துவிட்டனர், தற்போதுதமிழகத்தில்ஒருஆழமானகருத்தாக்கம் நிலவ விட்டுள்ளனர், ஏழைஎளியகிராமமாணவர்கள்அரசுபள்ளியிலும்பணக்காரர்கள்பிள்ளைகள்தனியார்பள்ளியில்படிக்கின்றனர், தனியார் பள்ளியில் விரும்பி பெற்றோர் சேர்ப்பது போன்ற மாயயை வளர்த்து வருகின்றனர்.  

இன்று குட்டி குட்டி கிராமங்களை எல்லாம் கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றி அடிப்படை மக்கள் நலத்திடங்களை பறிக்கும் சூழ்ச்சி  போன்றது தான் இதுவும்.  16 வயதுவரைஇலவசமாககொடுக்கவேண்டியஅரசின் பொறுப்பை அரசியல்அமைப்புசட்டத்த்தின் ஊடாக  கேள்விகேட்காவண்ணம்பள்ளிபடிப்பைதனியார்வசம்ஒப்படைக்கும்போக்குதான்இது,

ஒருமாணவனைதனியார்பள்ளியில்கல்விபெறவைக்கசராசரிஆண்டுக்கு 75 ஆயிரம் செலவாகும் . அதேமாணவன்அரசுபள்ளியில்படித்தால்எல்லாம்இலவசமாகபெறும்கல்விசூழல்உண்டு. அரசுபள்ளியைஎண்ணத்தை உயர்த்துவதுதனியார்பள்ளிகளைபூட்டுவதுஇதுவேதரமான  கல்விக்கு  முதல் வழியாகும். ஒரு மாநிலத்தின் எல்லா மாணவர்களும் தங்கள் பள்ளி படிப்பை ஒரே பாடத்திட்டத்தில் தாய் மொழியில் படிப்பதும் அவசியமாகும்.  ஆனால்அரசுஅதற்குமுதிராது என்று மட்டுமல்ல அரசு அந்த பொறுப்பையும் கையிலெடுக்காது.  ஏன்என்றால்இன்றுபணம்படைத்தவர்கள், அதிகாரம் அரசியல் அரசு வேலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிப்பது இல்லை. தங்கள்  பிள்ளைகள்பொதுசமூகத்தில்கலர விரும்புவதும் இல்லை இந்த மேட்டின குடியினர்.

வேறு சில பெற்றோர், அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை விட தயாராக உள்ளனர். ஆனால் போதிய அளவில் வசதியான அரசு பள்ளிகளின் பற்றாக்குறை. அரசு ஆசிரியர்களின் பொறுப்பின்மையான கற்பித்தல் போன்றவை தடுக்குகின்றது. .
தனியார்பள்ளிகளைபூட்டுவது அரசு கல்வி திட்டத்தை முறைப்படுத்துவது இதுவேதரமானகல்விக்குவழிவகுக்கும்.

தனியார்பள்ளிகளில் தரமான கல்வி என்பது கூட  ஒரு மாயத்தோற்றம் தான். தரம் என்ற பெயரில் அவர்கள் நடத்தும் கொள்ளைக்கு அளவே இல்லை. தனியார்பள்ளியைபற்றிபேசவந்தால்இன்னும்பலதிடுக்கிடும் உண்மைகள்வெளிச்சத்திற்குவரும். அங்குமாணவர்கள்தரமாகபடிக்கின்றனர்என்றுநினைப்பதுஉண்மைஅல்ல, ஆங்கிலத்தில்பேசவைக்கின்றனர்ஆனால்அறிவாற்றலில்வளர்ப்பதுஇல்லை.

9 ஆம்வகுப்புவரைமெட்ரிகுலேஷன்என்றபாடதிட்டத்தில்வகுப்புஎடுத்துவிட்டு 10 ஆம்வகுப்பில்அரசின்சமச்சீர்பாடத்திட்டத்தில்தேர்வுஎழுதவைக்கின்றனர்.  பெருவாரியானபள்ளிகளில் 9 ஆம்வகுப்புநடத்தாது 10 ஆம்வகுப்பைஇரண்டுவருடம்கற்பித்துதங்கள்ரிசல்டைபெருக்கிகொள்கின்றனர், அதேபோல்தான்+1 பாடம்எடுக்காது +2 வகுப்பைஇரண்டுமுறைகற்பித்துரிசல்டைபெருக்குகின்றர்.

இந்தபாணியைஅரசுபள்ளிகளும்பின்பற்றாதுஇருக்கவே 11 வகுப்பும்அரசுபொதுதேர்வாக்க  சட்டம் இட்டுள்ளனர்.. மாணவர்கள்அடிப்படைஅற்றுபடிப்பதால்மேற்படிப்பில்வரும்போதுதிறன்அற்றவர்களும்படிப்புமேல்ஆர்வம்அற்றவர்களாகவும்மாறுகின்றனர், பொதுதேர்வுஎல்லாவகுப்பிலும்வைத்தால்ஆசிரியர்களுக்குஇந்தஏமாற்றுவேலையில்ஈடுபடஇயலாது. முதலில் தேர்வை வைத்து விட்டு தேர்வு சதவீதம் வைத்து ஆசிரியர் திறனை பரிசோதிக்கும் சூழலும் எழும். அதனால் முளையிலே இந்த திட்டங்களை எதிர்த்தால் பிரச்சினை இல்லை என நினைக்கின்றனர்,


தனியார்பள்ளியில்; தேர்வில் தேர்வு ஆகாவிடில்மாணவர்களைபள்ளியைவிட்டுவிரட்டிவிடுவார்கள்அல்லதுஅதேவகுப்பில்தோற்கவைத்துபடிக்கவைப்பார்கள். அரசுபள்ளியின்நிலைஅதுவல்ல. அந்தமாணவர்கள்எழுதும்பொதுதேர்வுஎன்பது 10ஆம் மற்றும்  12 ஆம்வகுப்பு தான்.

 இதில்என்னபிரச்சினை என்றால்சின்னவகுப்புகளில்கவனிக்காதேவரும்மாணவர்கள் 10 வகுப்புவரும்போதுகூட்ட, குறைக்கவோ, எழுதவோதெரியாதுவெளியே வருகின்றனர், ஜெயிப்பதுஎன்பதுநூற்றில் 40 மார்க்குஎடுப்பதுஎன்பதுதான்.


பலஆசிரியைகள்பள்ளிக்குசெல்வதேகாலை 11 மணி,   அரசும் இட மாற்றம் என்ற பெயரில் ஆசிரியர்கள் ஊர் விட்டு ஊர் பயணம் செய்யும் சூழலை உருவாக்கி விடுகின்றனர்,   வேலைஉறுதிஎன்றநிலையில்அங்கு ஜாதி,அதிகாரம் என்ற பெயரில் நடக்கும் அரசியலுக்கு குறைவே இல்லை.  வருடம் ஒரு முறை போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பள்ளி அடிப்படை வசதியை பெருக்க மாணவர்கள் சார்ந்து ஒரு முறை கூட குரல் எழுப்புவதும் இல்லை.  

ஆசிரியர்கள்கற்பித்தலிலும்மாற்றம்கொண்டுவரவேண்டும்என்றநோக்கில்அரசுசமச்சீர்கல்விதிட்டத்தில்பலபயிற்சிதிட்டத்தைஆசிரியர்களுக்கும்மாணவர்களுக்கும்அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் கனமான அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களை வேலை வாங்குவதும் பல திட்டங்களை வகுத்து ஆசிரியர்களை கண்காணிப்பது அவசியமாகும், 

தேர்வு விகிதம் கொண்டு ஆசிரியர்களை மதிப்பிடும் சூழல் உருவாகினால் 10 ஆம்வகுப்புஆசிரியர்களுக்குஇருக்கும்அழுத்தம்வேறுஎந்தஅரசுபள்ளிஆசிரியர்களுக்கும் தற்போது இருப்பதுஇல்லை5 ஆம்வகுப்பிலும் 8 வகுப்பிலும்பொதுதேர்வுவைக்கும்போது  முதல்நிலை மற்றும்  இரண்டாம்நிலைஆசிரியர்களும் கேள்விக்குஉள்ளாக்கப்படுவார்கள். அதனால்ஆசிரியர்கள்இந்ததிட்டத்தைஎதிர்க்கின்றனர்,


அதிகமான ஊதியம் பெறும்  பள்ளிஆசிரியர்கள் பொது சமூகத்தை விட்டு மிகவும் நகந்து சென்று விட்டனர்.  ஆசிரியர்கள் என்றால் ஏழை எளியவர்கள் என்ற நிலை மாறி தமிழகத்தில்பணக்காரகுழுவுடன் இணைந்து விட்டனர்.   இவர்கள்மாணவர்களும், மாணவர்கள் பெற்றோர்களும் கேள்வி கேட்க இயலா வண்ணம்அடிமட்டஏழை,கிராமசூழலில் வாழ்பவர்கள் . சூழல்கள் இப்படிஇருக்க அரசு மாற்றங்கள்கொண்டுவரும்போது, ஆசிரியர்கள்கற்பித்தலைகேள்விக்குஉள்ளாக்கும்போதுஆசிரியர்கள்முழு மூச்சாக  எதிர்க்கின்றனர்.

தனியார்பள்ளியில்மாணவர்கள்தரம்உயரவில்லைஎன்றால்கட்டணம்செலுத்தும்பெற்றோர்கேள்விஎழுப்புவர். ஆனால்அரசுபள்ளிகளில்நிலைஅதுவல்ல. எந்தஅரசியல்வாதிபிள்ளையும்அரசுபள்ளியில்படிப்பதுஇல்லை. அதனால் அரசுபள்ளிஆசிரியர்களைதிருப்திபடுத்தஓட்டுவாங்க இந்தசூழலைஅரசியல்செய்ய எடுத்து கொள்கின்றனர்,

 மாதம்35 துடங்கி 75 ஆயிரம்வரைஊதியம்வாங்கும்ஆசிரியர்கள், தங்கள்பணியில்நம்பிக்கைஇருந்தால்மாணவர்கள்தரத்தைஅரசுபரிசோதிப்பதைஏன்எதிர்க்கவேண்டும்?  அரசு பள்ளிகளில் இருக்கும் தரமின்மை படிப்பில் மட்டுமல்ல மாணவர்கள் ஆளுமையில் இருக்கும் குறைபாடுகளையும் களைய உதவ வேண்டியது அரசின் பணியாகும்.ஆனால் செலவை சுருக்க வேண்டும் என்ற தேவைக்காக பலஅரசுபள்ளிகளைமூடவைத்ததில்அரசு கட்சிகளின்பங்குபெரிதாக உண்டு.  பலதனியார்பள்ளிகளைநடத்திவருகின்ற கல்வி வியாபாரிகளும்.

 ஆசிரியர்கள்வேலையில்மூப்புஅடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலையைதிமுககொண்டுவந்தபோதுடெட்’தேர்வில்பாஸாகவேண்டும்என்றுஜெயலலிதாகொண்டுவந்தார்.
எந்தபாடத்திட்டத்தில்படித்தாலும், இந்தஎல்லாமாணவர்களும்மேற்படிப்பிற்குகல்லூரியில்பல்கலைகழங்களுக்குகீழ்உள்ளகல்லூரிகளில்தான்படிக்கின்றனர். பரம பிராதமான விடையம் கல்வி என்பது வேலை பெறுவதற்க்கோ மதிப்பெண் பெறுவதோ அதன் நோக்கமாக இருப்பது நல்லது அல்ல.  முழுமையான ஒரு மனிதனின் வளர்ச்சியாகும். மாணவர்கள் வளருகின்றனரா அல்லது படிப்பில் தேங்குகின்றனரா என்பதை மிகவும் எளிய அளவு கோலான தேர்வு என்ற அளவீட்டால் தான் எளிய வழியில் அளக்க இயலும். 100க்கு 40 மார்க்கு வாங்க இயலாத மாணவர்களோ அதற்கு உதவ இயலாத ஆசிரியரோ கல்வி கூடத்தில் இருந்து என்ன பயண். ஆசிரியர் பணி என்பது ஊதியத்தையும் வேலை என்பதையும் மீறி நல்ல வளமையான மனிதர்களை உருவாக்கும் பட்டறையாகும். தேர்வு என்பது மாணவர்கள் நேரடியாக அளக்கப்பட்டாலும் ஆசிரியர்களின்  கற்பிக்கும் ஆர்வத்தையையும், திறமையும் அளக்கும் அளவு கோலாகும்.

அரசின் பல நல்ல கல்வி  நலத்திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே சேருகின்றது. 
சமூக நலன் வரும்கால தலைமுறை நலம் என முன்னெடுக்கும் போது அரசியல் லாபத்தை தவித்து சமூக முன்னேற்றத்தை மட்டுமே முன் நிறுத்தி சிந்திப்பது அவசியமாகும்.


சில நுட்பமான தரவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு விழுக்காடு 90% எட்டினாலும்    பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கை 75 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக குறைந்து 49% என்ற நிலைக்கு குறைந்துள்ளது. 



தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் தேசிய சாதனை கணக்கெடுப்புக்கான தேர்வு 7216 பள்ளிகளைச் சேர்ந்த 2,77,416 மாணவர்களிடம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 353 பள்ளிகளைச் சேர்ந்த 15,121 மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் மாநில மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், எல்லாப் பாடங்களிலும் கடைசி 5 இடங்களைத் தான் தமிழகத்தால் பிடிக்க முடிந்துள்ள


உத்தரபிரதேச மாநில தேர்வு முடிவுகளை பார்க்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது.உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அம்மாநில தேர்வு முடிவுகள் கடந்த.ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகின. இதில், பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகளும், 12ஆம் வகுப்பில் 52 பள்ளிகளும் ஒரு விழுக்காடு தேர்ச்சி வீதத்தைக் கூடப் பெறவில்லை.



கல்லூரி பெண்களே.... நட்பை கொண்டாடுங்கள்!

$
0
0

x

எந்த சினிமாப்படத்தை பார்த்து ஊக்கம் அடைகின்றனர் எனத்தெரியவில்லை எந்த வருடவும் இல்லாத ஒரு மாற்றம் இந்த வருடம் காணக் கிடைக்கும் ஓர் காட்சி கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் கையை கொருத்து கொண்டு, ஏதோ மாய உலகத்தில் ரோட்டில்  நடக்கும் காட்சி தான்..

மாணவர்கள்/விகள் 18 வயது ஆகி விட்டால் அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அவர்களே பொறுப்பாகும் பட்சத்தில் இப்போதெல்லாம் பெற்று வளர்த்தும் பெற்றோர்களே பலவற்றை கண்டு கொள்வதில்லை. ஒரு அளவிற்கு மேல் ஒன்றும் சொல்லவும் இயலாது. பல வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களை தங்கள் சொல்படிக்கு வைத்து ஆட்டிபடைப்பதையும் காணலாம்.  


சமகாலத்தில் பெண் பிள்ளைகள் பார்த்த ஒரு பெரும் உதாரணமாகும் கைசல்யா என்ற போராளி.  வெறும்  17ஆம் வயதில்  காதல், 18ல் திருமணம் 19ல் விதவைக்கோலம் 21 ல் மறுமணம் என்று எல்லாம் பார்க்கும் போது போராட்டமாக தோன்றியது. அப்பெண் தனக்கான பெரும் பாதுகாப்பான இடமான வீட்டை பகைத்து கொண்டபோது இந்த சமூகம்,ஒரு பெண் இருந்தால் இப்படி தான்  இருக்க வேண்டும் என்றது. ’இதுபோல என்னால், என் வயதில் முடிவு எடுக்க இயலவில்லையே’ என பல மத்திய வயது பெண்கள் ஸ்லாகித்தினர். வீட்டை எதிர்த்த அதே பாணியில் நாட்டை எதிர்த்து பேசினதும்; நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி விட்டார் என அப்பெண்ணை ஒடுக்கி விட்டது இச்சமூகம். 

போராட்டவும் வாழ்க்கையும்  தான் பெற்ற அறிவு செறுக்கில் இருந்து வரவேண்டும். இளமையின்  உந்துததால் வருவது நல்லதை விட பல ஆபத்துகளை சிக்கல்களை எதிர் கொள்ள வைக்கும் என இச்சமூகம் படிப்பித்தது.

பெண்கள் வாழ்கை யாருக்காகவோ வாழ்வது அல்ல,  இந்த சமூகத்திற்காக அல்லது இச்சமூகத்துடன் மல்லிட்டு கொண்டு வாழ்வதும் அல்ல.
ஒவ்வொரு பெண்ணும் தனக்காக வாழ வேண்டும்.  தன் விருப்பத்தின் பொருட்டு  வாழ வேண்டும். ஆனால் அதற்கு ஒரு  காலம் உண்டு.  அதற்க்க்கான தகுதியும் பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.   பூவாகி, காயாகி, கனிந்து பழமாகும்  இயற்கை நியதி போல, பெண்ணும் தன்னக்காக செம்மையாக வாழ தயார் செய்தல் வேண்டும்.    தன்னுடைய செயல்பாட்டை தெரிவு செய்யும் வயது வரும் வரை கொஞ்சம் காத்திருக்க வேண்டும்..

காதல், ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். பல இளம் பெண்கள் தங்களுக்கு மட்டுமே காதல் தோன்றும் இப்போது மட்டுமே தோன்றும், தோன்றியதை தோன்றிய உடன்  வாழ  வேண்டும் என நினைத்து விடுகின்றனர்.
ஒரு பெண் தனக்கான ஒருவனை தேர்வு செய்யவும், தொடவும், தொட்டு பழகவும் சில காலம் காத்திருத்தல் மிகவும் அவசியம். ஒருவனை கண்டதும் ஆசை வரலாம்.  ஆனால் அவன் உடனே கிடைக்க வேண்டும் என்பது அபத்தம். அவனுக்கு என்ன தகுதி, அவனால் என்னை மகிழ்ச்சியாக நான் தற்போது இருப்பதை விட செம்மையாக வைத்து காப்பாற்ற இயலுமா என சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒருவன் தன்னை காதலிக்கான் என்றால் தன்னை, தன் ஆளுமையை தன் புகழை, தன் சிறப்பை தன் குடும்ப கவுரவத்தை மதிக்கின்றானா என்று சிந்தித்தல் அவசியம். சினிமாவில் காண்பது போல இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடிந்து போவது அல்ல வாழ்க்கை. தன் புத்தி ஈனமான  தெரிவால், தன் அவசர முடிவால் வாழ்க்கை முழுதும் சுமையாக மாறல் ஆகக்கூடாது.


திருமண வாழ்க்கை தனக்கு ஒத்தவனுடன் சுகமாக வாழ்வது தான். திருமணத்தை சமூக புரச்சி, சமூக போராளி அல்லது தன் சுதந்திரம் என்ற பார்வையில் கையிலெடுத்தால் அது மிகவும் இக்கட்டான நிலையில் பெண்களை கொண்டு விடும்.

பெண்களுக்கு கல்லூரி படிப்பு  வாய்க்கின்றது என்பது தற்போதையை சமூக சூழலை வைத்து நோக்கும் போது பெரும் சவால். பெண் பிள்ளைகள் தன்னுடைய  கல்லூரி படிப்பிற்கு ஒதுக்கும் நேரம் மூன்று அல்லது ஐந்து வருடம் என்பது மிகவும் குறுகிய, மிக முக்கியமான வருடங்கள் ஆகும். ஒரு போதும் மறுமுறை கிடைக்காத வரப்பிரதமான நேரம். இந்த நேரம் படிப்பது தன் சொந்த காலில் நிற்க  கற்பது , முன் வரும் வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்து கொள்வது என வாழ்க்கையை நோக்க வேண்டிய தருணம். இந்த நேரத்தில் ’ஏதோ ஒரு பையனை காதலித்தேன்’ என நேரம் விரயம் செய்வது மிகவும் முட்டாள்த்தனமாகும்.

ஒரு காதலுடன் நின்று போவதல்ல இப்போதைய கல்லூரி காதல்கள். ஒவ்வொரு பருவத்திலும் இவனை விட இவன் சிறப்போ.... என சிந்தனை கொள்ள வைக்கும் காலம். புத்தியுள்ள பெண் நிதானமாக அவதானித்து சிறப்பான பையனை தன் வாழ்க்கை துணையாக தேர்வு செய்வதை விட்டு விட்டு குறுகிய சந்தோஷத்திற்காக நேரம் போக்கிற்கு என்றும் காலத்தை விரையம் செய்கின்றனர்.

 கல்லூரி படிப்பு வேளையில் காதலை விட நட்புக்கு இடம் கொடுக்கும் போது பல மாணவர்களுடன் நட்பு பாராட்டஇடம் கிடைக்கும்.  இதனால் பெண்கள் ஒரு மதிப்பை தன் சக தோழர்கள் மத்தியில் பெறுகின்றனர். கண்டதும் காதல் கொண்டதும் மயக்கம் என அலையும் ஜோடிகள் தங்கள் மாயா உலகத்தில் இருந்து வெளி வரும் முன் 6 பருவங்கள் முடிந்து பல அரியருடன் பிடிப்பில்லாது வாழ்க்கைக்குள் பிரப்வேசிப்பீர்கள். வேலை விடையாமாகவோ தன் வாழ்க்கை விடையமாகவோ தன் சிந்தனையால் முடிவு எடுக்க விடாது இது போன்ற உறவுகள் தடுக்கும். வாய்ப்புகளை கைவிட வைக்கும்.

காதல் நல்லது தான். ஆனால் அந்த காதல் சரியான வயதில் கொள்ளும் போது தான் பல நல்ல விடையங்களை காண தோன்றும், பகுந்தாய தோன்றும். பல பெண்கள் காதல் மயக்கத்தில் எந்த வசதியும் வேலையும் அற்ற பையன்களை கல்யாணம் செய்வதும் காலம் முழுக்க கஷ்டப்படுவதையும் காணும் போது வருத்தம் கொள்ள வைக்கின்றது. 

தமிழக கலாச்சாரத்தில் ஒரு பையன் திருமணம் முடிக்கும் முன் அவனுக்கு வீடு கட்ட வேண்டும், உடன் பிறந்தவளை கரை சேர்க்க வேண்டும், பெற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பில் அவர்கல் திருமணம் 25 வயதை தாண்டி விடும். பெண்கள் வாழ்க்கை சூழல் அதுவல்ல. பல பெற்றோர் 21, 23 வயதிற்குள் பெண்கள் வாழ்க்கையை ஸ்தரப்படுத்தி விடுகின்றனர். அச்சூழலில் உடன் படிக்கும் பையன்களை கல்யாணம் செய்வது என்பது நடக்காது என தெரிந்தே ஏன் காதல் ஆசை காட்ட வேண்டும்.  

இளம் பருவம் என்பது உயர்ந்த சிந்தனையில், சுதந்திர சிந்தனையில் தங்களை பண்படுத்தி தன் நோக்கை அடைய வேண்டிய தருணம். ஆனால் காதல் என்ற பெயரின் ஒருவன் விருப்பத்திற்கு தன்னை உடம்படுத்தி அவனுக்கு பிடிக்காது என்பதால் யாருடனும் நட்பு பாராட்ட இயலாது உனக்கு நான் எனக்கு நீ என்று குறுகிய வட்டத்தில்  செல்ல வேண்டியதா கல்லூரி வாழ்க்கை? .

கையை பிடித்து கொண்டு போனால் என்ன என்று சிலர் கருதலாம். ஒரு சமூகத்தில் வாழும் போது அதன் நெறிகளை மீறும் போது அது சார்ந்த பல ஆபத்துகள் பெண்களை சூழ்ந்து இருப்பதை பெண் பிள்ளைகள் உணருவதில்லை. இவள் அனுப்பும் எழுத்தை அவன் நண்பர்களுடன் இருந்து பார்த்து தான் ரசிக்கின்றான். நண்பர்கள் உந்துதலில், பெண் பிள்ளைகளை தனித்து அழைத்து போய், கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கி சின்னா பின்னமாக்கும்  பல  சம்பவங்கள் தமிழ் நாட்டில் நடக்கின்றது.  பல பெண்கள் கொல்லப்படுவது காதல் என்ற பெயரில் தான். 

பல பெண்கள்  காதல் என்ற பெயரில்  பல பல சிக்கல்களில் மாட்டி கொள்கின்றனர். குடும்ப மானம் கோத்திரம், ஜாதி எல்லாம் தூர போட்டு விட்டு பெண்கள் பாதுகாப்புக்கிற்கு பங்கம் வக்க இது போன்ற விளையாட்டு உறவுகள் காரணமாகுவதை பெண்கள் புரியும் காலம் இது..

சில வீடுகளில் பெண் பிள்ளைகள் யாரேனிடம் இருந்து பொருட்கள் இலவசமாக வாங்கி வந்தால் விசாரிப்பதில்லை. யார் என்ன கொடுத்தாலும் அதற்கு ஒரு விலை வைத்து தான் கொடுப்பார்கள் என்ற புரிந்துணர்வு பெண்களுக்கு வேண்டும். பல பெண்கள், காதலை விளையாட்டாக கல்லூரி வந்தால் காதலிக்க வேண்டும்  என்று எடுத்து கொள்கின்றனர். 

காதல்  செய்தவனை கல்யாணம் முடிக்காது ஆகும் போதுள்ள குற்ற உணர்வு, இயலாமை இவர்கள் பின்னீடுள்ள வாழ்க்கையிலும் பாதிக்கும். ஆண்கள் எப்போதுமே எளிதில் வசியப்பட்டு  எல்கை மீற எத்தனிதித்து கொண்டே தான் இருப்பார்கள். பெண் தான் அந்த எல்கையை நிர்ணயிக்கும் வண்ணம் ஆளுமையால், சிந்தனையால் உயர்ந்து இருக்க வேண்டும்.

காதல் எந்த வயதிலும் வரும் எத்தனை முறை ஏனும் வரும். வருவதை எல்லாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. படிக்கும் வயதில் நட்பே மேன்மையானது. காதலுக்கும் நட்பிற்கு பல வேறுபட்ட குணங்கள் உண்டு. அதன் எல்கையை சில போது நிர்ணயிப்பது சிறிய ரேகை தான். பெண்கள் நிம்மதியான வாழ வேண்டியவர்கள், கவுரவமாக, மதிப்பிடுடன் வாழ வேண்டியவர்கள். எளிதில் வீழ்ந்து எளிதில் துன்பத்தில் உழலாதீர்கள். 

வாழ்க்கையை அதன் உச்சத்தை கொண்டாடுங்கள். ஏதோ ஒருவனுக்க்காக படிக்கும் காலத்தில் உங்களை ஒடுக்கி, ஒதுக்கி மாய வளையத்தில் வாழாதீர்கள். 
வாழ்க்கை என்பது பல கட்டங்களில் கடந்து போக வேண்டியதே. ஒடுக்கப்படுவதும் அடக்கப்படுவதும் உண்டு வாழ்க்கையில். ஆனால் இந்த கல்லூரி காலங்களின் நினைவுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை வழி நடத்தட்டும். 


நெல்லை படைப்பாளினி தமயந்தியின் ‘தடையம்’ -

$
0
0

x

நெல்லையை பிறப்பிடமாக கொண்டவர்  தமயந்தி.    ஆங்கில இலக்கியத்தில்  நெல்லை சாராடக்கர் கல்லூரியில் இளம்நிலை பட்டவும்,    பாளையம்கோட்டை துய யோவான் கல்லூரியில்  முதுகலை பட்டம் பெற்றவர். 

தமயந்தி ஓர் பண்முகதன்மை கொண்ட ஆளுமை.   பண்பலை, புதிய தலைமுறை போன்ற பத்திரிக்கைகள், தற்போது  சினிமாத்துறையிலும், செயலாற்றி வருபவர்.இவருடைய பரிசு பெற்ற முதல்  சிறுகதை சமுத்திர கனியில் இயக்கத்தில் சின்னத்திரையில் வந்துள்ளது. மீரா கதிரவன் இயக்கிய விழித்திரு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். சமுத்திர கனியின் மின்பிம்பங்கள் படத்திலும் திரைக்கதை எழுதியுள்ளார்.

தமயந்தியின்  இயக்கம் , கதை,  டப்பிங்ல் வெளியான  திரைப்படம் தடயம்  எங்கள் துறையில் திரையிடப்பட்டது.  தடயத்தில் இசை தொகுப்பாளராக நெல்லையை சேர்ந்த ஜஸ்டின் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு இசையும் ஓர் காரணம் என்பதால் ஜஸ்டின் எடுத்து நோக்க வேண்டிய திறைமையான கலைஞர்.

மனிதனின் வாழ்க்கையில் அவன் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் வாழ்க்கையில் உருவான  தடயங்களை பற்றிய படம் தான் தடயம்.  இருவர் காதலிக்கின்றனர். இருவரும் சூழல் கைதிகளாக வெவ்வேறு திருமணம் முடித்து வாழ்க்கையை நகத்துகின்றனர்.

இப்போதோ அப்பெண் கான்சர் பாதித்து ஒரே  ஒரு  உதவியாளர் பெண்ணின் உதவியுடன்  தனிமையில்  வசித்து வருகின்றார்.  படுத்த படுக்கையாக  கிடக்கும் முன்னாள் காதலியை சந்திக்க வரும் ஒரு  மனிதரின் நெகிழ்ச்சியான நினைவுகளும் வருத்தங்களும் காட்சிகளாக வர துவங்குகின்றது, வாழ்க்கையில் சேராதே பிரிந்து விட்டோமே என்ற கவலையும் சேர்ந்து விடமாட்டோமா என்ற ஏக்கவும்,  தன்னை போல் ஒரு பெண் மனைவியாக உள்ளார் என்ற  புரிதலும் கலந்து கதை நகல்கிறது.    அவர்கள் சந்தித்து கொண்ட அந்த ஒரு மணி நேரம் தங்கள் காதலையும் அன்பையும் எவ்வாறாக வெளிப்படுத்தினார்கள். பெண்ணின் நுட்பமான உணர்வு நிலையை மிகவும் நுணுக்கமாக  கையாண்டு சிறப்பான காட்சி தொகுப்புடன் கதையை நகத்தியுள்ளார்.


அந்த இருவர் இருக்கும் வெளிச்சம் மங்கிய சிறிய அறை கொண்ட வீடு, வெறும் தொடுதல், பார்வைகளால் அன்பை காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் அழகான ஓவியமாக படமாக்கியுள்ளார். ஒரு இடத்தில் காதலனின் கதகதப்பான அரைவணைப்பில் பெண்ண்ணின் உணர்ச்சியை அவள் மூத்திர பையில் விழும் சிறுநீருடன் காட்சிபடுத்தியிருப்பார். காதல் உடல் உறுப்புகளில் அல்ல உணர்வுகளில் தூய்மையான நினைவுகளில், இயல்பான கலகலப்பான பேச்சுக்களில் ஏன் அமைதியில் என அழகாக நகரும் படம்.
இரு  பாடல் இடம் பெற்றுள்ளது. ஒன்று காதலன் வீட்டிற்கு வரும் போது இன்னொன்று அவர்கள் நினைவுகள் ஊடாக கடந்த நாட்களை சொல்லும் அழகான நினைவுகல் கொண்ட பாடல்.

ஒரு காட்சியில் காதலன் கேட்பார் தனியாக தானே இருக்கிறாய். என்னுடன் வாயேன். நான் பார்த்து கொள்கிறேன். அப்போது இல்லை நீ ஒரு வைப்பாட்டியாக வச்சிக்கிடதானே இயலும் உன்னுடன் வாழ இயலாதே என கூறி மறுத்து விடுவார். மரணதருவாயிலும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய கவுரவம் தான் சார்ந்த சுயசார்பு உரையாடல்கள் ஊடாக வெளிப்படுத்தியிருப்பார்.

வெகுவிரைவில் பார்ப்பவர்களை இயல்பு வாழ்க்கைக்குள்ளும் திருப்பியிருப்பார் இயக்குனர்.

காதலன் மனைவியிடம் இருந்து  போன் வரும். இதோ வருகிறேன் அலுவலக மீட்டிங்கில் உள்ளேன் ஐந்து நிமிடத்தில் வருகின்றேன் என கனத்த இதயத்துடன் விடை பெற்று செல்வான்  .அங்கு சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற திருமணம் என்ற பந்ததிற்கு கட்டுபட்டு, ஏன் கொஞ்சம் அவசரமாகவே விடை பெறுவார். இனி சந்திப்பார்களா இல்லையா என தெரியாது. ஆனால் அன்பின் ஆகசிறந்த தருணங்களை பகிர்ந்து வெளியேறும் மனிதன் , இயலாமையின் மொத்த உருவமாக கடந்து செல்கின்றார். 

அந்த துயரான இறுக்கமான சூழலிலும் இருவரும் தங்கள் ரொமான்ஸ் நேரம் என நினைவுப்படுத்தி கொள்வார்கள். என்ன தான் துன்பங்கள் நெருக்கும் போது மனிதன் நல்ல பக்கங்களை நினைவில் நிறுத்தியேனும் சிரிப்புடன் கொஞ்சம் சுவாரசியமாக கடந்து செல்ல வேண்டியது  என்ற கருத்தையும் முன் வைக்கிறது. அவர்கள் கொஞ்சி பேசும் மொழிகளுக்கும் எள்ளலுக்கும் பஞ்சமில்லாது ”நான் தான் உன்னை மிகவும் அதிகம் நேசித்திருப்பேன்” என காதலி தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கின்றாள். 


இது போன்ற படங்கள் அந்த நேரம் தரும் உணர்வை விட படம் முடிந்த பின்பு பார்வையாளனை பல பாவங்களில், பல பார்வைகளில் சிந்திக்க வைக்கும். இதுவே இது போன்ற படங்களின் வெற்றியும். 

பெண்ணின் உடலை கண்டு காதலிக்கும் மனிதர்களில் மத்தியில்  மரணத்தின் பிடியில் இருந்தாலும்  நேசத்தை அன்பை கொடுக்க அன்பான இதயவும் நெகிழ்ச்சியான மனவும் மட்டுமே போதும் என்று சொல்லிய திரைப்படம்.

பெண் தன் காதலனை முகத்தை வருடும் காட்சி! இது போன்ற அன்பின் வெளிப்பாடு எல்லாம் பெண் இயக்குனாராக இருப்பதால் மட்டுமே முடிகிறது. ஏன்? என்ற கேள்விக்கு விடை தெரியாத உணர்வுகளை காட்சியிலூடாக வெளிக்கொணர்ந்த இயக்குனர் முழு பாராட்டுக்கும் உரியவர் 
.
எங்கள் மாணவர்கள் இளம் நிலை மாணவர்கள்.  காதலின், பண்பு ஆழம் இவை எல்லாம் புரியாத பக்குவப்படாத வயது, அல்லது வேகமான ஓடி ஓடி பறந்து பறந்து காதல் செய்யும் படங்களை கண்டு வளர்ந்ததால் என்னமோ அவர்களால் சில இடங்களை புரிந்து கொள்ள இயலவில்லை,   பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர். வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான  பக்கங்களை உணர வைக்கும் சிந்திக்க வைக்கும் அழகோவியம் இத்திரைப்படம்.

சிலர் இதை கான்சர் விழிப்புணர்வு படமாக அல்லது பல பல பிரச்சினையில் நாடு உழலும் போது காதல் ஒரு கேடா என கேட்பவர்களும் இருப்பார்கள். இந்த உலகில் காணும் அனைத்து பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கு அடிப்படை காரணம் அன்பை பெறாதும் காதல் அனுபவிக்காதும் இருக்கும் உளவியல் வறுமை நிலை தான். அவ்வகையில் ஒரு இனம் பண்பாடாக வளர உண்மையான  நேர்மையான காதல்களும் அன்பும் வளர வேண்டும். இது போன்ற படங்கள் அதன் அடித்தளத்தை உருப்வாக்கும். 

இயக்குனர் மேலும் பல நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் பகிர்கிண்றேன். இந்த படம் மிகவும் குறைந்த பட்ஜட்டான் 4.75  லட்சத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இன்னொரு சிறப்பாகும். கோடிகள் புரட்டிதான் படம் எடுக்க முடியும் என்பதை தாண்டி  நல்ல படங்கள் குறைந்த பட்ஜட்டிலும் எடுக்க இயலும் என நிரூபித்துள்ளார் இயக்குனர்.  

விவாசாயியை அழித்த சீர்கெட்ட நீர்மேலாண்மை

$
0
0

தமிழகவிவசாயிகள்வறட்சியின்கோரப்பிடியில்சிக்கி, அல்லல்பட்டு பலர்  தற்கொலைசெய்துகொண்டும் இருக்கின்றனர். தமிழன் பாரம்பரியாமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்தவன். தண்ணீர் தேவைக்கு நதியை சார்ந்தே இருந்தனர். நாயக்கமன்னர்கள்மன்னர்கள்காலத்தில் குளம்வெட்டி  வறண்டபகுதியிலும்  விவசாயம்செய்ய ஆரம்பித்தனர். இந்தியாவிலேயேகுளங்கள், ஏரிப்பாசனம்தமிழகத்தில்தான்அதிகம்  நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறுஊரணிகள், குட்டைகள்எனபலவகையானநீர்நிலைகள்பண்டையமன்னராட்சிகாலத்தில்நிர்மாணிக்கப்பட்டு, அவைகவனமாகமேலாண்மைசெய்துபாதுகாக்கப்பட்டதுஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கிணறுகளை நம்பி விவசாயம் தொடர்ந்தனர். சுதந்திர தமிழகத்தில் போர்வெல் அமைக்கஆரம்பித்தனர். போர்வெல்லில் தண்ணீர் வேண்டும் என்றால் நீர் நிலைகளில் தண்ணீர் வேண்டும். 
நிலத்தில்விழும்மழைநீர்படிப்படியாகமண்ணுள்கசிந்துஆழமானபகுதியில்தேங்கிநிற்கும்நீரைத்தான்நிலத்தடிநீர்என்கிறோம். இயற்கையின்நீண்டகாலநிகழ்ச்சிப்போக்கில்உருவாகும்இத்தகையநிலத்தடிநீர்வளமாகதமிழகத்தில்இருப்பது 22,423 மி..மீ. எனநிபுணர்கள்மதிப்பிட்டுள்ளனர்!


நீரின்றிஅமையாதுஉலகு


தண்ணீர் நாட்டின்வளம்சார்ந்தது . கடப்பாமுதல்கன்னியாகுமரிவரைஏரி, குளங்களைவெட்டிவைத்துள்ளனர்.  உலகமே  வியக்கும்  சிறந்தமழைநீர்சேமிப்புமுறையானஒருஏரியில்தண்ணீர்நிரம்பினால், கால்வாய்மூலமாகஇன்னொருஏரிக்குதண்ணீர்போகும். அங்கிருந்துஇன்னொருஏரி. பக்கத்தில்ஆறு, குளம்இருந்தால்அவையும்ஏரிகளுடன்இணைக்கப்பட்டிருக்கும். இப்படியேகடற்பகுதிவரைஏரிகளும்அதன்கால்வாய்களும்நீண்டுஇருந்தன. அத்தனைஅருமையானமழைநீர்சேகரிப்பு, நீர்பாசனகட்டமைப்பைஅந்தகாலத்திலேயேகட்டியிருக்கின்றனர். ஏரிகளைமட்டுமல்லகயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடுஎனவிதவிதமானநீர்நிலைகளைஉருவாக்கி, மழைநீரைசேமித்துமுப்போகம்விளைவித்து, பலபோகம்பெருமையுடன்வாழ்ந்ததமிழ்நாட்டில்இப்போதுஆழ்துளைபோட்டுதண்ணீரைதேடிக்கொண்டிருக்கின்றனர்.

 நீர்வளம் :தமிழகத்தில் 17 முக்கியஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள்ஊடாக  ஒருஆண்டில்கிடைக்கும்நீர்வளம் 46, 540 மில்லியன்கனமீட்டர் ! இதில்சரிபாதிநீரானது  நிலப்பரப்பில்வழிந்தோடிகடலில்கலந்துவிடுகிறது.  எனவேநமதுபயன்பாட்டுக்குக்கிடைப்பது 24,864 மில்லியன்கனமீட்டர் ! இம்மேற்பரப்புநீரில்90 சதவீதம், விவசாயத்திற்குபயன்படுத்தப்படுகிறது. சுமார்24 லட்சம்ஹெக்டேர்நிலங்கள்இதனால்பயன்பெறுகின்றன !

 நீர்மேலாண்மை
தமிழகத்தில்வரலாற்றுரீதியாகவேமழைநீர்சேமித்துவைக்கப்படுகிறது. இந்தகலாச்சாரத்தின்வெளிப்படுதான்ஏரி, குளம், கண்மாய், ஊரணிஉள்ளிட்டநீர்ஆதாரஅமைப்புக்கள்.
தமிழகத்தில்மரபுரீதியாகஅமைந்தநீர்பாசன, நீர்மேலாண்மைபற்றிஅறிந்து, நவீனநடைமுறைகளோடுஇணைத்துசெயல்திட்டங்களைவகுத்துநீர்நிலைகளைபாதுகாக்க தவறி விட்டனர். கல்லணைகட்டியகரிகாலனும், வைகையினைகடலுக்கேவிடாமல்கண்மாய்களால்தடுத்தஅக்காலபாண்டியமன்னனையும் மறந்த தமிழக ஆட்சியாளர்கள் தண்ணீர் மேலாண்மையை பற்றி கவணம் கொள்வது இல்லை. வடக்கேபள்ளிப்பட்டிலிருந்து, தெற்கேபத்மநாபபுரம்வரைஇருந்தபலநீர்நிலைகள், சிலசுயநலவாதிகளால்ஆக்கிரமிக்கப்பட்டுவீட்டுமனைகளாககபளீகரம்செய்யப்பட்டுள்ளது.

மாநிலஅரசின்பொதுப்பணித்துறைநிர்வாகத்தின்கீழ்மழையைநம்பியகுளங்கள்5,276, நதிநீர்பெறும்குளங்கள்    3,627, தனியார் வசம் 9,886 உள்ளது. கடந்தசிலஆண்டாகதமிழகத்தில்குளங்களின்எண்ணிக்கைகணிசமாககுறைந்துவருகிறது.

இலட்சத்திற்கும்மேலாகஇருந்தஏரி, குளம்போன்றநீர்நிலைகள்இன்றைக்கு 39,202 ஆககுறைந்துவிட்டது. ஏரிமாவட்டமானசெங்கல்பட்டுமாவட்டத்தில்,பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம்ஏரி, செலவப்பன்ஏரிபோன்றபலஏரிகள்தனதுஇயற்கைதன்மைகளைஇழந்துவிட்டன.  சென்னைபுறநகர்பகுதிகளில்ஒருகாலத்தில் 200 ஏரிகள்இருந்தன.  பூந்தமல்லி, போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம்,மேட்டுக்குப்பம்,விருகம்பாக்கம்,சாலிகிராம், புலியூர்,கோடம்பாக்கம்,நுங்கம்பாக்கம்,மயிலாப்பூர்எனவரிசையாகஏரிகளும், அவைகால்வாய்களாலும்இணைக்கப்பட்டிருந்தன. இன்றுசென்னையில்ஏரிகளும்இல்லை, அவற்றைஇணைத்தகால்வாய்களும்இல்லை.

கடந்த 2008 ம்ஆண்டுகணக்கெடுப்புப்படிதமிழகத்தில்   32,202 குளங்கள்இருந்தது. தமிழ்நாடுசுற்றுசூழல்கழகம்சார்பில்நடத்தப்பட்டஆய்வில்இதில், 30 சதவீதம்குளங்கள்நீரைதாங்கிநிற்கும்தன்மையைஇழந்துவிட்டது . மேலும்15 சதவீதம்குளங்கள்இருக்கும்இடம்தெரியாமல்போய்விட்டது.

கடந்த 2007-08 ம்ஆண்டுஏரி, குளம்ஆகியவற்றைபாதுகாக்கசட்டம்கொண்டு வரப் பட்டது. ஆனால், 2009 ம்ஆக்கிரமிப்புபகுதியில் 10 ஆண்டாககுடியிருந்தவர்களுக்குபட்டாவழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலானஏரி, குளங்கள்மாயமாகிவிட்டது. மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம்குளங்களும்இருந்தஇடம்தெரியாமல்போய்விட்டது. சேலம்,திருமணிமுத்தாற்றைஒட்டியிருந்தபகுதிகளில்ஒருகுளம்கூடஇல்லை. சமீபத்தில்நடத்தப்பட்டஆய்வில் 45 சதவீதம்குளங்கள்தமிழகத்தில்மறைந்து விட்டது.



நாகரீகவளர்ச்சிக்கும், மக்கள்தொகைபெருக்கத்திற்கும்ஏற்பநீர் நிலைகளை அழித்து வருகின்றனர்.  ஆறு, ஏரி, குளங்கள்அதற்கானஇணைப்புகால்வாய்களும்ஒவ்வொன்றாககாணாமல்போனதால், எஞ்சியநீர்நிலைகளும்வற்றிப்போய்கிடக்கின்றன. விளைவுநிலத்தடிநீர்மட்டம்குறைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில்ஆக்கிரமிப்புகளால்காணாமல்போன  நீர்நிலைகளின்எண்ணிக்கைஅதிகமாகிஉள்ளது. நீர்நிலைகளைகாப்பாற்றாவிட்டால், எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும். இப்போதுதோன்றியிருக்கும்புதியநகர்களில் 47 சதவீதம், நீர்நிலைகளைமூடிஉருவாக்கப்பட்டவைஎன்கிறதுவட்டம்என்றஅமைப்பு.


வெள்ளைக்காரன்போட்டபாதை
ஆங்கிலேயர்கள்ஆண்டகாலத்தில்தான்முதல்முதலாகநீர்நிலைகள்வழித்தடங்கள், ரயில்பாதை போன்றவை அமைக்க  ஆக்கிரமிக்கப்பட்டன. நீர்நிலைகளைஅழித்துவிடக்கூடாதுஎன்பதற்காக, ரயில்பாதையின்இடையில்கால்வாய்கள்அமைத்துஇரண்டுபக்கத்திற்கும்தொடர்பைவிட்டுவைத்தனர்வெள்ளைக்காரர்கள்.


தமிழகத்தில்மாநகராட்சிமற்றும்நகராட்சிபகுதிகளில்குப்பைகளைகொட்டும்திடக்கழிவுமேலாண்மைதிட்டம், நீர்நிலைஆதாரம்உள்ளபகுதிகளிலேயேசெயல்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, குளம், கண்மாய்உள்ளிட்டநீர்நிலைஆதாரங்கள்மறைந்துவருகிறது.

விவசாயம்என்றபெயரில்ஆக்கிரமிப்பு
கோடைக்காலங்களில்வற்றிப்போயிருக்கும்ஏரி, குளம்உள்ளிட்டநீர்நிலைகளின்சேற்றுப்பகுதிகளில்வெள்ளரிபோன்றகுறுகியகாலபயிர்களைபயிரிடுவார்கள். பயிர்தானேஎன்றுவிட்டால்கொஞ்சநாட்களில்வீட்டுமனையாகமாறிவிடும். அப்புறம்நீர்நிலைஇருக்காது. நீர்நிலைகளில்பெரியதானகடல்கூடஇந்தஆக்கிரமிப்புஆசாமிகளிடம்இருந்துதப்பவில்லை.



பாசனத்திட்டங்களின்அவலநிலை !
கால்வாய்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம்ஆகியமூன்றுவகைப்பாசனத்திட்டங்கள்மூலம்விவசாயம்நடைபெறுகிறது. நடப்பில்உள்ளமொத்தவிவசாயநிலப்பரப்பானசுமார் 130 லட்சம்ஏக்கரில், 90 லட்சம்ஏக்கர்நிலத்திற்குமட்டும்தான்இதுவரைபாசனவசதிசெய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய்பாசனம்மூலம் 29.2% , குளத்துப்பாசனம்மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம்மூலம் 48.9% நிலங்கள்பாசனம்பெறுகின்றன.விவசாயிகளின் துயர். நீராதாரங்களும்நீர்த்தடங்களும்திட்டமிட்டுஅழிக்கப்படுவதும்விவசாயத்தை அழிக்கும் காரணியாக உள்ளது. இதுவரை200க்கும்மேற்பட்ட விவசாயிகள்  உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால்அரசாங்கம் 17 பேர்என்றுகணக்குகாட்டுகிறது. கடுமையானதண்ணீர்பஞ்சத்தைதாங்கக்கூடிய நமது பாரம்பரியமானவிதைகள், பயிர்ரகங்களை எல்லாம்  பசுமைப்புரட்சி என்ற பெயரில் அழித்து விட்டனர்.

நீர்வழித்தடங்களின்ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரைபோன்றவீரியரககளைச்செடிகளாலும், அலட்சியமானஅரசின்பராமரிப்புக்குறைவாலும்பெரியஅளவில்பாசனப்பரப்புவிரிவாகவில்லை.

மாநிலத்தில்சுமார்19 லட்சம்கிணறுகள்உள்ளன. இதில்30% கிணறுகள்முற்றிலும்நீரின்றிவறண்டுவிட்டன! 27% கிணறுகள்விவசாயப்பயன்பாட்டுக்குப்பொருத்தமில்லாதஉவர்நீராகிவிட்டன! மீதியுள்ளகிணறுகளில்தினமும் 4 முதல்6 மணிநேரம்இறைப்பதற்கேநீர்இருக்கிறது!” என்று2012-ல்வெளியானதமிழகநீராதரங்களின்தேவையும்- அளிப்பும்என்றஆய்வறிக்கைகூறுகிறது.

 பசுமைப்புரட்சிக்குப்முன்பு  1960-களில்இருந்தநீராதாரங்களின்நிலையையும்இழந்து, புதியபாசனவசதியையும்பெறாமல், எதிர்காலஉத்தரவாதமும்இல்லாமல்இன்றுமிகவும்ஆபத்தானநிலையில்தமிழகவிவசாயம்மிகமோசமானநிலைக்குநமதுவிவசாயம்ஆளாகியுள்ளது.

நீர்வரத்துவாய்க்காலைசுத்தம்செய்வது, குளங்களைத்தூர்வாருவது, கரைகளைஉயர்த்துவது, அணைகளில்படிந்துள்ளமண்ணைஅகற்றுவதுகாலத்தின் கட்டாயம்.  நீர்வளத்தைப்பெருக்குவதற்கும், அதைநிரந்தரமாகதக்கவைப்பதற்கும்தொலைநோக்கான, அறிவியல்பூர்வமானதிட்டங்கள்கையாள வேண்டும்.
இதற்காகவறட்சிப்பகுதிமேம்பாட்டுத்திட்டம் (DPAP), ஒருங்கிணைந்தநீர்த்தேக்கத்திட்டம்(IWOP) தேசியநீர்பிடிப்புப்பகுதிக்கானநீர்தேக்கத்திட்டம்(NWDPRA),ஆகியமத்தியஅரசுத்திட்டங்கள்மூலம்பல்லாயிரம்கோடிரூபாய்நிதிஒதுக்கீடுசெய்யப்பட்டது. தமிழ்நாடுநீர்தேக்கவளர்ச்சிஆணையம்(TAWDEV) வாயிலாகதமிழகத்தில்சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள்கட்டப்பட்டன. இதில்பெரும்பாலானவைஇன்றுபராமரிப்பின்றிசேதமடைந்துகிடக்கின்றது!
தொழிற்சாலைக்கழிவுகளால்ஆற்றுநீர்மாசுபடுவதுமற்றுமொருஆபத்தாகும்.“குடிநீர், மற்றும்விவசாயத்திற்குபயன்படும்ஆறுகளிலிருந்துஒருகிலோமீட்டர்சுற்றளவுக்குதொழிற்சாலைகள்அமைக்கத்தடைஉள்ளது. ஆனால்இதையும்தாண்டிதினமும் 6 லட்சம்லிட்டர்ஆலைக்கழிவுகள்ஆற்றுநீரில்கலக்கிறது. ஆலைக்கழிவுகளால்ஆற்றுநீர்விஷமாவதுமட்டுமல்ல, நீர்தேக்கங்களில்ஆகாயத்தாமரைபோன்றவீரியரகக்களைகள்பரவுவதற்கும்காரணமாகஉள்ளது. நீர்வாழ்தாவரக்களைகளில்ஏற்படும்ரசாயனமாற்றங்களின்விளைவாகதண்ணீரிலுள்ளஆக்சிஜன்அளவுவெகுவாககுறைந்துவிடும். ஆக்சிஜன்குறைந்தநீர்குடிப்பதற்கும்விவசாயத்திற்கும்தகுதியற்றதுஎன்றுஅறிவியலாளர்கள்கூறுகிறார்கள்!

விவசாயிகளேவிவசாயத்தைதீர்மானிப்போம்!
இயற்கைவளங்களை, முக்கியமாகநீர்வளஆதாரங்களைப்பாதுகாப்பதுமாநிலஅரசின்கடமை!” “நீண்டகாலம்நீர்தேங்காமல்இருக்கும்குளங்களைக்கூடதனியாரோ, அரசோஆக்கிரமிக்கக்கூடாது!” “தண்ணீர்பஞ்சம்வராமல்தடுப்பதுஎன்றபொறுப்புணர்வுடன்மாநிலஅரசுகள்நீர்நிலைகளைப்பாதுகாக்கவேண்டும்!” “நீர்நிலைகள்மீதானஅனைத்துஆக்கிரமிப்புக்களையும்உடனேஅகற்றவேண்டும்!” “நீர்நிலைகளைஅரசுமற்றும்தனியார்கையகப்படுத்தாமல்இருப்பதைகலெக்டர்தலைமையிலானமாவட்டக்கமிட்டிஉத்திரவாதம்செய்யவேண்டும்!”
தமிழகநிலஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழகநீர்நிலைகள்பாதுகாப்புமற்றும்ஆக்கிரமிப்புத்தடைச்சட்டம்-2007 எனபலபலஅரசுச்சட்டங்களும்இருக்கின்றன!
சட்டங்கள் நடைமுறைப்படுத்தாது காகிதங்களில் மட்டும் இருப்பதால் நம்வாழ்வாதாரமானவிவசாயம்பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள்வாழ்வும்முன்னேறவில்லை! விவசாயம்பொய்த்துப்போய், விவசாயிகள்விவசாயத்தைவெறுத்துநிலத்தைவிட்டும், ஊரைவிட்டும்ஊடுவது மட்டுமல்ல தங்கள் உயிரையை மாய்த்து கொள்ள காரணமாகியுள்ளது.  தமிழ்நாடுமாநிலவேளாண்மன்றச்சட்டம்(TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றைகடந்த2009-ஜுன்- 24-ல்தமிழகஅரசுநிறைவேற்றியுள்ளது. “அங்கீகாரம்பெற்றவேளாண்பட்டாதாரிகள்மட்டுமேவிவசாயம்பற்றியஆலோசனைகள்வழங்கவேண்டும்என்கிறதுஇச்சட்டம்! இதன்படிமாற்றுவிவசாயம்பற்றிபிரச்சாரம்செய்வதேகுற்றமாவிடும்!  Aவிவசயம் பற்றி பேசக்கூட தடை என்பது உணவு என்பதை கேட்பதே குற்றம் என மாற உள்ளது.
விவசாயி தனித்து நிற்காது ஒரு கூட்டு பண்ணை விவாசயம் போன்று அரசு சாரா இயக்கங்களாக ஒன்று இணைந்தால் தான் வரும் கால அரசியல் சூழலை எதிர் கொள்ள இயலும். படித்தவர்கள் இன்னொருவரிடம் வேலை செய்து கூலி வாங்கும் நிலையில் இருந்து சொந்த நிலத்தை பராமரிக்க கூடிய மனநிலையை வளர்க்க வேண்டும். விவாசாயிகள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு வளர வேண்டும். வேலை செய்யும் தொழிலாளுகளுக்கும் நியாயமான ஊதியம் கொடுப்பதால் விவாசாயம் என்ற தொழில் இன்னும் மதிப்பு பெறும். 


தாய்மையும் சமூககுற்றங்களும்!

$
0
0
நாசமா போகிற பெண் பிள்ளைகளை காப்பாற்ற இயலாத கையேறு நிலையில் தான் உள்ளது காலம்.
பாளை பேருந்து நிலையத்தில் நிற்கும் வேளையில் 9,10 படிக்கும் பெண் பிள்ளைகள் அவென் ஏ ஆளுடி .... 
நல்லா. ஏமாத்த போறான் பாருடின்னு


வெட்கமே இல்லாமை கனைத்து பேசி கொண்டு நிற்கும் போது; நமது சகல நாடி நரம்புகளையும் மூடி வெட்கமே இல்லாது சுரணையற்று கேட்டு கொண்டு நிற்பது மரபாகி விட்டது.
ஒரு பிள்ளையிடம் யாரையும் நம்பாதே கூடப்பிறந்தவன் தவிற எவனும் அண்ணன் ஆகிட மாட்டான் என்றதும் பெத்தவங்களுக்கு தெரியாதே ஏதோ ஒரு வக்கீல் மாமாவை அழைத்து வந்து இந்திய சட்ட புத்தகத்திலுள்ள அனைத்து சட்டவும் பேசியது.
பெண் பிள்ளையை வழி நடத்துங்கன்னு ரகசியமா சொன்னா ஏ.... புள்ளை பச்சை மண்ணு அதுக்கு ஒன்றுமே தெரியாது நீங்கள் துன்புறுத்தாதிங்கன்னு பதில் வரும். 
ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைக்கு சுகமில்லை அழைத்து செல்லுங்கள் என்றால்.... அவுங்க அப்பாட்ட கேட்டு சொல்லுதேன் , சும்மா ஒரு பஸ்ஸுல ஏத்தி விடுங்கள் என்பார்கள் !
பெண்ணியவாதிகள் போன்றோர் பெண்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது. அவர்கள் மனநிலை பாதிக்கும் காதலிக்கட்டுமே சுத்தி வரட்டுமே, இதனால் என்ன ஆகப்போகுது உங்க மனநிலை சரி இல்லை என்பார்கள்.

டிவியை திறந்தால், என் மகன்கள்..... அவனுக பிகருகளை எங்கட்டயும் காட்டுவானுக...அவனுக ஜாலியா இருக்கட்டும்,கல்யாணம் பண்ணும் போது நாங்க சொல்லுத பிள்ளயைஐ தான் கட்டுவான் என்று பீற்றுகின்றனர். 
அப்ப உங்க மகளுகளுக்கும் இதே சுதந்திரம் கொடுப்பீர்களா என்றால் சீ ... பயலுக சகதில்லா மிதிச்சாலும் காலை கழுகிட்டு வீட்டுக்குள் வருவானுக என்கின்றனர்.
பெண்கள் பெண்ணுறுப்பை. சிதைத்து இன்பம் காண்பதை அவதானிக்கும் போது 9 மாதம் பெண் கருவறையில் வசித்து வந்து, அடுத்த 9 மாதம் உணவூட்டிய கொங்களை வெறும் பாலியல் பொருளாக பார்க்கின்றார்கள் என்றால் அவர்கள் பிறப்பிலும் 7 வயது வரையுள்ள வளர்ப்பிலும் குறை உள்ளது.

இன்றைய பெற்றோர் மிகவும் சுலநலவாதிகள். அன்போ கரிசனையோ இல்லாது கடமையே என குழந்தைகளுடன் வாழ்கின்றனர். 
பல மாணவிகள் ஒரு கருதலான வார்த்தைக்கு சிரிப்பிற்கு ஏங்கி வாழும் சூழல் தான் உள்ளது.

தாய்மார்கள் மாணவிகளுக்கு உடல் சுகவீனம் என்று தெரிவித்தால் எந்த அக்கறையும் இல்லாது அணுகுவதை கண்டுள்ளேன். ஏதோ பெத்தேன், கல்லூரிக்கு அனுப்பினேன், கட்டி கொடுத்தேன் கடமை முடிந்தது என பல உள்ளனர். இது போன்ற சூழலில் வளரும் மாணவிகள் சிந்தனை வாழ்க்கை தேர்வு எல்லாம் ஆபத்தாகத்தான் இருக்கும்.

நல்ல பாச சூழலில் வளரும் சில பெண்கள் கூட இது தான் சிறந்த வாழ்க்கை இவர்களை போல் சுதந்திரமாக யாருக்கும் கட்டுப்படாது வாழ வேண்டும் என ஆவல் கொள்கின்றனர். 
ஆண் பிள்ளைகள் தன் குடும்ப சொத்தை பராமரிக்க வேண்டியவர்கள், தனது கடைசிக்காலம் தன்னை கவனிக்க வேண்டியவர்கள் என்ற நோக்கில் வளர்ப்பதும் பெண் பிள்ளைகளை ஆசைக்கு அடுத்தவன் வீட்டில் போகிறவர்கள் என்ற உதாசீனத்துடன் வளர்க்கின்றனர்.

சிலர் கருதலாக வளர்க்கின்றனர் என்ற பெயரில் வாழ்க்கையின் பிரச்சினைகளை அறியவே விடாது மகாராணி போன்று வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆடம்பரத்திலும் வெளி உலகு தெரியாது வள்ர்க்கின்றனர்..
பெற்றோர்களின் ஆளுமை மிகவும் அவசியம். இன்று பெற்றோர் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டாலே தங்கள் பிள்ளைகள் நிலையில் காரணம் உணர இயலும்.
ஒரு காலை பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தேன். ஒரு பெண் தன் மகளுக்கு நிச்சயம் செய்து இருக்கும் மணமகனுடன் பேசிக்கொண்டிருந்தது என் நிறுத்ததில் நிறுத்துவது வரை தொடர்ந்தது. அதில் மஞ்சள், பச்சை சிவப்பு எல்லாம் கலந்து கட்டி பேசிக்கொண்டிருந்தார். அலைபேசியால் சிறு பிள்ளைகள் அழிகின்றனர் என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு கொடுப்பதும் பெற்றோர் தான்.
பிள்ளைகளை வைத்து பிழைப்பது என்ற பண்பற்ற பண்பாடு வளர்ந்து வருவதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஆண்பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மனநிலையும் பரிசோதிப்பது அவசியமாகும். பொள்ளாச்சி முதல் குற்றவாளி அம்மாவின் பேச்சை அவதானித்தால் புலன்படும். பையனுக்கு 26 வயதிற்கு முன்பே இரண்டு காதல் . இரண்டும் தாய் அறிவோடு தான் நடக்கின்றது. அதிலும் ஒரு ரகசிய திருமணவும் செய்து வைத்துள்ளார்.

அந்த இரண்டு பெண்கள் தன் மகனை விட்டு விலகியதற்கு மகனையே குற்றம் சுமத்துகின்றார். எம் பி ஏ படித்த மகனுக்கு வட்டி தொழில் துவங்கி கொடுக்கின்றனர். வட்டி தொழில் ஒரு காலத்தில் படிப்ப்பறிவில்லாதவனிடம் நாலு காசு இருந்து படிப்பில்லாதவனிடம் தான் இருக்கும். மகன் கொண்டு வரும் பணத்தை தன் கைப்பட வாங்கி சாமி படம் முன் வைப்பேன் என சப்பை கட்டுகின்றார். வட்டி தொழில் ஒரு சாபம் பிடித்த தறுதலைகளின் தொழிலாக இருந்தும் காசு சம்பாதிக்க இயல்வதால் மகனுக்கு துவங்க பின் புலனாக உள்ளார். 

மகனுக்கு பெண்கள் விடையத்திலுள்ள ஈடு பாடு அறிந்து யார் விட்டு பிள்ளையோ தன் மகன் விருப்பத்திற்காக பைக்கில் அனுப்புகின்றார், ரகசிய திருமணம் செய்து வைக்கின்றார். உருப்படியா நாலு ஆள் தெரிந்த மாதிரி திருமணத்தை முடித்து வைத்திருக்கலாம் என்ற நேர்மை தாயிடவும் இல்லை. 

தன் மகனிடம் மாட்டப்பட்ட பெண்ணை பற்றியும் அவதூறாக ஏதேதோ கொச்சை வார்த்தையில் திட்டுகின்றார். ஒரு சமூகத்தில் அழிவும் ஆக்கவும் தாய்மையில் இருந்தே துவங்குகின்றது. மேற்போக்காக ஒரு பிரச்சினையை அணுகாது அதன் ஆணிவேரை சரிப்படுத்தாது எதுவும் சரியாகப்போவதில்லை. 

சலூன்

$
0
0
க. வீரபாண்டியன் எழுதிய, யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தின் ஊடாக டிசம்பர் 2018 ல் வெளிவந்த புத்தகமாகும் "சலூன்".
ஆனந்த் என்ற அரசு அதிகாரி வேலை விடையமாக விமானத்தில் காதரின் என்ற தோழியுடன் பயணிப்பதில் இருந்து துவங்குகிறது கதையாடல்.
கதையாளர் தான் சந்தித்த, சொந்த ஊர் சலூன்க்கடைக்காரர்கள் மட்டுமல்ல பயணத்தில் சந்தித்து பழகிய வட இந்திய முடிதிருத்துதவர்களைப் பற்றியும் சொல்லியுள்ளார்.
சலூன்காரர்களின் வரலாற்று கதைகள், ஜாதி அடிப்படையில் அவர்கள் எதிர் கொண்ட கீழ்மையான பார்வை, சலூன்காரர்களின் வரலாற்று பூர்வமான திறமைகள், அவர்களுக்குள் நடந்த தொழில் போட்டிகள், முத்தைய்யா தாத்தாவின் மரணம், நவீனகாலத்தில் மனிதர்கள் தங்கள் அலங்கார தேவைக்கேற்ப, சலூன் கடைகளை தவிர்த்து கார்ப்பரேட்டுகளின் பியூட்டி பார்லர்கள் நாடும் கால மாற்றம் என சுவாரசியமாக எழுதியுள்ளார்.
மரியாதக்குறிய மருத்துவ தொழில் சார்ந்து இயங்கிய ஒரு இனம், முடி திருத்தும் நிலைக்கு தள்ளிவிடப்பட்ட சமூக அரசியல், பற்றி எழுதப்பட்டதே இக்கதை.
புத்தகம் பற்றிய விமர்சனம்:
ஒரு இனத்தின் தோல்வியை அல்லது விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் போது அந்த பிரச்சினைக்கான தீர்வையும் தேடித்தருவது எழுத்தாளரின் கடமையாக மாறுகிறது. தன்னை சூழலுக்கு ஏற்ப மாற்றி எப்படி வலுப்படுத்தி கொள்வது என்ற வழியையும் விளக்கியிருக்க வேண்டும்.
சமூக வளர்ச்சிக்கு; எதிர்மறையான கருத்து புரட்சி கோஷங்களை விட ஆக்கபூர்வமான நம்பிக்கை ஊட்டும் நேர்மறையான கருத்துக்களே சமூக வளர்ச்சிக்கும் சுமூகமான மனித உறவிற்கும் உதவும் .
உயிரும் சதையுமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு போராட்டத்திலூடாக வாசகர்களையும் அழைத்து சென்றுள்ளார் என்பது எழுத்தாளரின் சிறப்பாகும்
சக இனக்குழுக்களின், பல சடங்குகளில் பார்பர்களுடைய இடம் இன்றிமையாததது. அதையும் விளக்கியிருக்கலாம்.
அச்சமூகத்தில் இருந்து படித்து வெளியேறி, இன்று உலகநாடுகளின் திட்டங்களில் வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ள கதை சொல்லும் கதாப்பாத்திரம், புரக்கணிக்க மக்களுக்காக என்ன செய்தார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?
அண்ணா என்று அழைத்தேன், சாப்பாடு வாங்கி கொடுத்தேன், உடனிருந்து உண்டேன் என தன் தாராள மனதை வெளிப்படுத்தும் ஆனந்த என்ற கதாப்பாத்திரம் இந்த இனத்தின் வரும்தலைமுறைக்காக அவர்கள் முன்னேற்றத்திற்காக. என்னன்ன திட்டங்கள் உள்ளது செயல்வடிவத்தில்? என்ற கேள்வி வாசகர் மனதில் எழுவதையும் மறுக்கல் ஆகாது.

இரக்கம் கொள்வது மட்டுமே சிறந்த மானிடமா? என சிந்திக்க வைத்தது இப்புத்தகம்.
முடி திருத்துகிறவர்கள் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் அல்ல, பணவசதியற்ற வேறு இனமக்களும் பார்பர் பணியில் உள்ளனர் என அறிகின்றோம் . அவ்வகையில் இது இன/ஜாதிப்பிரச்சினை மட்டுமல்ல வருமானம் சார்ந்த வாழ்க்கை பிரச்சினையும் கூட.
புத்தகம் அனுப்பி வாசிக்க பாசத்துடன் கட்டளையிட்ட பாசமிகு அப்பா N. Rathna vel https://www.facebook.com/n.rathna.vel நன்றி மகிழ்ச்சிகள்.

வளர்ப்பு தாய்க்கு ஓர் அன்பின் மடல் - திரைப்படம் ரோமா Roma 2018

$
0
0

கதைத்தளம்1970-ல்மெக்ஸிகோவில்நடக்கிறது
ஒரு நடுத்தர வசதியான குடும்பம். பெரியவீடு,ஹால்புத்தக அலமாரைகள்.  மேல்மாடியில்பல அறைகள்;நாலுகுழந்தைகள்ஒருவயதானபாட்டி, நாய்.


மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்த கிளியோ (Cleo)  அங்கு தான் வீட்டுபணியாளராகவேலைசெய்து வருக்கிறார்.  காலை, நாய்கழிவை சுத்தம்செய்வதில்இருந்துகுழந்தைகளைபாங்காகஎழுப்புவது, ஒவ்வொருவருக்கும்தேவையானஉணவுகளைஎடுத்துகொடுப்பது, வீட்டுசமையல், சந்தைக்குபோவது எனவீட்டுவிளக்குகளைஅணைத்துவிட்டு தன் அறைக்கு செல்வதுவரை  சிரித்தமுகத்துடன், மகிழ்ச்சியுடன்பணியாற்றிவருகிறார்.

வாரத்திற்குஒருமுறைகிளியோ(Cleo)வும்அவருடையதோழியும்வெளியே சென்றுதிரைப்படம்காண்பது  கேளிக்கைநிகழ்ச்சிகளில்பங்குபெறுவதுஎனகாலத்தைகழித்துவருகின்றனர்.  அப்படியானஒருபொழுதில்தான்போராட்டஇயக்கத்தில்இருப்பவனுடன்  பழகும்வாய்ப்புஏற்படுகிறது. அந்த நெருக்கத்தில்கர்ப்பவும்ஆகிவிடுகிறார்.  அந்தநபரிடம் தான்  கருவுற்றுஇருப்பதைகூறுகிறார்.  அவனோ மனசாட்சியேஇல்லாது  மறைந்து விடுகிறான், தேடி செல்பவளை பின்பு விரட்டியும்  விடுகிறான்.

மனம்ஒடிந்த நிலையில் கிளியோவின்முகத்தில்சிரிப்பிற்குபதில்கவலையும், சுறுசுறுப்பானநடைக்கு பதில்பதட்டவும், குற்றஉணர்ச்சியும்ஒட்டிகொள்கிறது. மாதவும்மூன்றாகிவிடுகிறது.  எப்படிதன்யஜமானியிடம்சொல்வதுஎனதயங்கிகொண்டுஇருக்கிறார்.


அந்தவீட்டுகுடும்பதலைவன்வேறுபெண்ணுடன்போனதால்;  குடும்ப தலைவியையும்(சோபியா)நாலுகுழந்தைகள், வயதானதாய் (Veronica Garcia), வேலைஎனமிகவும்மன அழுத்ததில்உள்ளார்.

இருபெண்கள், வெவ்வேறு நிலையிலுள்ளபெண்கள்;ஒருவர்யஜமானத்தி, இன்னொருவர்அந்தவீட்டுபணியாளர்!; தாங்கள்நம்பினவர்களால்ஏமாற்றப்பட்டு மனமொடிந்த நிலையில் உள்ளனர்.

காதலியுடன்ஓடிப்போனவன்போய்விட்டான். தாயின்தலையில்பாரியசுமைவிடிகிறது. தான்பெற்ற நாலு குழந்தைகளைளையும்மகிழ்ச்சியாகவைத்திருக்கவேண்டும், அவர்களை விட்டு, அவர்கள் அப்பா போனதை பற்றிபுரியவைக்கவேண்டும்.  அதற்கானமுயற்சியில்தாய் இறங்குகிறார்.  குழந்தைகளுடன்அதிகநேரம்செலவிடஅவர்களைவெளியிடங்களுக்குஅழைத்துசெல்கிறார். இப்படியாக  தன்வாழ்க்கையைகுழந்தைகளுடன்  நகர்த்துகிறார்.

அதேவேளையில்,பணிப்பெண்கிளியோவும்; காதலித்தவன்பிள்ளையைகொடுத்துவிட்டுதன்பாதைநாட்டின் போராட்டம்எனபோய்விட்டான். கிளியோவிற்குகுழந்தையைபெற்றுஎடுக்கயஜமானத்தியின்உதவியும்தேவையாகஇருக்கிறது.  

வேறுவழியேஇல்லை. ....தன்யஜமானியிடம்கருவுற்றுஇருப்பதைசொல்ல வேண்டும்.யஜமானி,பணிப்பெண்தன் நிலையை கூறிய போது அது வேறு ஒரு பெண் பிரச்சினையாக பார்க்கவில்லை. தன் பிரச்சினையாகவே உணர்ந்து சகமனிதையாகமதித்துஆறுதலாக  தன் ஆதரவை பணிப்பெண்ணுக்குதருகிறார்.

அங்குவிசாரணயில்லை, குற்றப்படுத்துதல்இல்லை, பிரச்சினைக்குஉள்ளானபணியாள்பெண்ணைஒதுக்கிவிடவும்விரும்பவில்லை. அங்குமனிதத்தின்உச்சம்என்கிறகரிசனை,அன்புமட்டுமேஉருவாகிறது.  தானேமருத்துவமனைக்குஅழைத்துசெல்கிறார், குழந்தையைபெற்றெடுக்கும்நல்லசூழலைஉருவாக்குகிறார்.  மனிதன்இன்னொருமனிதனுக்குஉதவிட சமூகநிலையோ,  சூழலோதடைநிற்கவில்லை. ஒருவர்மற்றொருவரைபுரிந்துகொள்ளும்மனிதமே அங்கு மேல் ஓங்கி நிற்கிறது.

அந்தவீட்டிலிருக்கும்பத்துவயதுபாலன்,அம்மா ”ஏன்கிளியோ இப்போது பேசுவதில்லை, அவர்ஏன்அழுகிறார்எனகேட்பான். தாயும்அவளுக்கு வயிற்றுவலிஎன்றதும்அந்தபாலகன்தன்கையால்வயிற்றைதடவிகொடுப்பான். அந்தபத்துவயதுபாலன்தான்; தனது 56 ஆவதுவயதில்தன்வீட்டில்வேலைசெய்தபணிப்பெண்ணைநினைவுகூர்ந்துரோமாஎன்றபடத்தைஇயக்கியுள்ள   அல்போஃன்ஸோகுவரோன்(Alfonso Cuarón)

என் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களை பற்றிய படம். ஒன்று என் தாய்(Fernando Grediaga), இன்னொருவர் வளர்ப்பு தாய். வளர்ப்பு தாய்க்கு நான் எழுதின அன்பின் மடலாகவே இப்படத்தை காண்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.  

10 வருடமாகமெருகேற்றிகறுப்புவெள்ளையில்எடுக்கப்பட்டஸ்பானிஷ்மொழியிலானஇப்படம் ஆங்கிலமொழிஅல்லாதவெளிநாட்டுபடவரிசையில்; 2018 ற்கான  மூன்றுஆஸ்கார்விருதுகளைபெற்றுள்ளது.  

இப்படத்தில்பணியாளர்பெண்ணாகநடித்திருப்பவர்புதுமுகநடிகை Yalitza Aparicio ஒருபள்ளியின்ஆசிரியராகஇருக்கையில் இப்படத்தில் நடிக்க தேர்வானவர். இவர் முதல் படத்திலே  ஆஸ்கார்பெற்றிருக்கிறார் என்பதுஅவரின் நடிப்பின் சிறப்பாகும்.  தாயாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும்Marina de Tavira சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.ஒளிபதிவு, இயக்கம்எனமூன்றுவிருதுகளைபெற்றுள்ளது.

ஒவ்வொருகாட்சியிலும்காட்டியிருக்கும் ஒழுங்கு, அதன் உள் கட்டமைப்பு,உண்மைதன்மைஆச்சரியப்படுகிறது. வீட்டில்விரைந்துகிடக்கும் பொருட்கள், வீட்டுஅலமாரைகள், அலங்காரம், தன்தாயார்பயண்படுத்தியகார்மாடல்,அதன் நிறம், இயக்குனர்  வாழ்ந்து வந்த   தெருவுதுவங்கி;வீட்டில்மற்றொருப்குதியில்பணிப்பெண்கள்தங்கியிருக்கும்அறைகள்அவர்கள்துணிகாயப்போடும்இடம்எனதன் 10 வயதில் நிறைந்திருந்த  நினைவுகளைமறுகட்டமைப்புசெய்துஎடுக்கப்பட்டபடம். தாங்கள்வாழ்ந்தகிராமத்தில் செட்டுகள்போட்டுபடம்ஷுட்செய்துள்ளார்

இந்தபடத்தின்ஒளிபதிவுஇயக்கம்திரைக்கதைஎல்லாம்பார்த்துபார்த்துசெதுக்கியஒருசிலைபோல்வடிவமைத்துள்ளார். இப்படத்தின்காட்சிகள்அவ்வளவுஎளிதாகமனதைவிட்டுமறைவதில்லை. இப்படத்தின்ஒவ்வொருகாட்சிகளையும்பற்றிசொல்லப்போனால்எளிமையில்உருவானபிரமாண்டம்எனலாம்.  படம்முழுவதும்கறுப்புவெள்ளையில். அதுவேஒரு மயக்கும் mesmerising effect-உணர்வை  கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும்அனைத்தும் (மனிதர்களும்பொருட்களும்துல்லியமாகஉள்ளது .படம்மெதுவாகநகர்ந்தாலும்அழுத்தம்குறையாமல்இறுதிவரைசெல்கிறது.

சொந்ததாயைபோல்;நான்குகுழந்தைகளைகவனித்துவரும்கிளியோதனக்குஒருகுழந்தைபிறக்கபோகிறதுஎன்றதும்பிரத்தியேகமகிழ்ச்சியில், கற்பனையில்குவிந்திருப்பதுஅழகு.   ஆனால்சோதனையாரைவிட்டது குழந்தைஇறந்துபிறந்திருப்பதுஅவரைமட்டுமல்லநம்மையும் அழவைத்துவிடும்.

பின்புள்ளகிளியோவின்வாழ்க்கைபழையவாழ்க்கையின்மகிழ்ச்சிஇல்லாது,சுருதிஅற்றுசெல்லும்.  ஒரு நாள்  யஜமானியின்  குழந்தைகள்அலைகளில்மாட்டிகொள்வார்கள். தன்உயிரையும்மதிக்காதுகாப்பாற்றிவருவார்.  அந்தகாட்சியில்ஒருபணிப்பெண்தாயாகும்நிலையைகாட்சிமொழியில்காட்டியிருக்கும்விதம்அருமை.

மனிதவாழ்க்கைஅன்பால்கட்டமைக்க வேண்டியது. பிறமனிதனைதான்பேணும்நெறிகளின் பொருட்டு துன்பப்பட வைப்பதுஅல்லஎன்பதைவிளக்கியிருப்பார். பணக்காரர்கள்விருந்தில்சுவாரசியம் அற்றுகிடக்கும்பணிப்பெண்கள், பணியாளர்கள்கலந்துகொள்ளும்விருந்திற்குசென்றுவிட்டு தாமதமாகதிரும்புவார். அப்போது  தனது யஜமானியின் தனிமையை களவான ஒருவன் முயன்று கொண்டு இருப்பான்.  யஜமானி நெறி தவறாதவள். அவனை தட்டி விட்டு விட்டு கடந்து செல்வார்.  யஜமானி தனதான நெறியில் கட்டுகோப்பானவளாக இருந்தாலும் தன் பணிப்பெண்ணின் தவறை, நீதியிடும் இடத்தில் இருந்து நோக்காது மனித நேயத்துடன் அணுகும் ஈரநெஞ்சக்காரியாக இருப்பார்.  பெண்கள் ஒருவருக்கொருவர்`            `தங்கள் பேரன்பால் தழுவி கொண்ட  பேரன்பைசொல்லிய திரைப்படம்இது.  

பொதுவாகவாழ்க்கைகதைசொல்லும்படங்கள்;படம்எடுப்பவரைபற்றியதாகஅல்லதுவரலாற்றில்இடம்பெற்றமாபெரும்ஆளுமைகளை பற்றிய படங்களாகவே இருந்துள்ளது. ஆனால் இப்படம் தன்வீட்டில்ஒன்பது மாதத்தில் இருந்து தன்னை வளர்த்திய வளர்ப்பு தாயை பற்றி எடுத்த படம் என்பது இன்னொரு சிறப்பாகும்.  ,தற்போது 72 வயதாகும்லிபோரியாரோட்ரிகெஸ் (Liboria Rodriguez)இந்த படத்தை பார்த்த போது அழுதார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
நல்லபடம்என்பதுநல்லமனிதர்களை, ஈரமான மனங்களைஉருவாக்குவதுஅவ்வகையில்ரோமாசிறந்தபடம்

 1970 களில் தாங்கள் குடியிருந்த காலனியின் பெயரான ரோமா என்பதை படத்தின் தலைப்பாகவும் தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

நெட்ஃப்லிக்ஸின் முதல் படமே 10க்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது ஒரு. 17 வயதிற்கு மேலுள்ள நபர்கள் பார்க்க அனுமதியுள்ள  R-சாற்றிதழ் பெற்ற படம் ஆகும்.

இந்த படத்தில் தயாரிப்பு டிசைனராக தன்னுடைய தந்தை பணியாற்றியதையும் நினைவு கூறுகிறார்.  தன் குழந்தைப்பருவத்தில் தன் சகோதரி விளையாண்ட விளையாட்டு பொம்மைகளை  கூட இயக்குனர் நினைவு வைத்திருப்பதை நினைத்து  தந்தை ஆச்சரிப்படுகிறார்.

உலகம் முழுக்க இருந்து நெட்ஃப்லிக்ஷ் ஊடாக 137.1 மிலியன் மக்கள் பார்த்துள்ளனர் .  பல  தியேட்டருகளிலும் திரையிடப்பட்டுள்ளது.


சூப்பர் டீலக்ஸ்- Super Deluxe

$
0
0

சமீபத்தில் கண்ட திரைப்படம்.  சராசரி தமிழ் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கதைத்தளம், கருத்து, உருவம் என தனித்து நிற்கும்  படம்.
ஹைப்பர் இணைப்பு(Hyper link) என்ற வகையை சேர்ந்து. ஒன்று ஒன்றோடு தொடர்பில்லா நாலுகதைகள், ஒரு  புள்ளிகளில் சந்தித்து கொள்ளுகின்றன.

முதல் கதை:
ஒரு புதுமண தம்பதி. கணவர் வெளியே போயிருக்கும் வேளையில் தன் கல்லூரி காதலனை வீட்டிற்கு அழைக்கும் வேம்பு என்ற கதாப்பாத்திரம். அவன் வந்த இடத்தில் செத்து போய் விடுகிறான். இனி அவன் உடலை மறைக்க வேண்டும். கணவருக்கும்  தெரிந்து விடுகிறது.  அந்த உடலை என்ன செய்தார்கள். இவர்களை துரத்தும் போலிஸ் அதிகாரி என்ன ஆனான். பிரிய முடிவெடுத்த தம்பதிகள் பிரிகின்றனரா? போலிஸ் அதிகாரியிடம் இருந்து வேம்பு(சமந்தா) கதாப்பாத்திரம் தப்பித்தாரா  இல்லையா?

இரண்டாம் கதை:
ஐந்து பதினமபருவ பள்ளி மாணவர்கள். பள்ளிக்கு  போகாது வீட்டில் ஒளிந்திருந்து பாலியல் படம் பார்த்து கொண்டு இருப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. படத்தில் வரும் பெண், அதில் ஒரு பையனின் தாய்! அத்துடன் கதை நகருகிறது. தாயை கொலை செய்ய ஓடி வருகையில் அவன் கொண்டு வந்த கத்தியால் காயத்திற்கு உள்ளாகி மரணத்திற்கு போராட, தாய் மகன் உயிரை காப்பாற்ற முயல்கிறார். தகப்பன் திடீர் கிறிஸ்தவனாக மாறின ஆள். அந்த நபரின் உலகம் தனி  உலகமாக நகர்கிறது. அங்கு மூன்று பெயருக்கு மட்டுமே இடம்!  அந்த நபர்,  அந்த நபரை மாற்றிய சுனாமி, புதிதாக கண்டு பிடித்த கடவுள், என நகருகிறது.

மூன்றாவது கதை:
பழைய ஆசாரம் கொண்ட ஒரு வீடு.  வீடு நிறைய மனிதர்கள்.  அந்த வீட்டில் பொறுப்பாக இருக்க வேண்டிய மகன் திருமணம் முடிந்து, குழந்தை இருந்த நிலையில்  வீட்டை விட்டு போய்விடுகிறவன்; ஏழரை வருடம் கடந்து திரும்பி வருகிறான்.  அவனாக அல்ல பாலினம் மாறிய அவளாக. கணவனை காத்திருந்த மனைவி நிலை என்ன? அப்பா என்ற பிம்பத்தை எதிர் பார்த்த மகன் நிலை என்ன? மூன்றாம் பாலினமாக மாறிய அப்பா -மகன் உறவு எவ்வாறு நகர்கிறது. அந்த வீட்டிலுள்ள மற்ற நபர்கள் இந்த சூழலை எப்படி பார்க்கின்றனர். அந்த நபரின் மனைவியும் மகனும் ஏற்றுகொள்கின்றனரா? இப்படியாக கதை நகர….

நாலாவது கதை:
ஐந்து பள்ளி சிறுவன்கள். தொலைக்காட்சி பெட்டி உடைந்து போய் விடுகிறது. அந்த பெட்டியை தன் தகப்பன் வேலைக்கு போய் வரும்முன் வீட்டில் கொண்டு வைக்க வேண்டும். அந்த அவசரத்தில் அவர்களை சந்திக்கும் நபர்கள் யார்? செட்டியார் வீட்டில் திருட போனவர்கள் என்னவானார்கள். ஒரு பெண் ஏலியனை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி கிடைத்ததா ?    பெண் என்பதை பற்றிய அவர்கள் பார்வை மாறினதா இல்லையா?

நாலு கதையையும் இணைக்கும் ஒரே புள்ளியாக மனிதனின் அடிப்படை தேவையான பாலியல் இச்சை உள்ளது.  Buttefly theory, Darwin Sex theory அவதானிக்க கூறிகின்றனர் சினிமா வல்லுனர்கள்.


  • வேம்பு/ சமந்தாவை துன்படுத்தும் போலிஸ் அதிகாரி,  மூன்றாவது பாலினமாக மாறின விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தையும் சித்திரவதை செய்யும். இவாஞ்சலிக்கன் யேசு பக்தரான அப்பா கதாப்பாத்திரவும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரவும் சுனாமியில் தப்பித்த நபர்கள்.
  • முதல் கதையில் சமந்தா/வேம்பு , விஜய்சேதுபதி, பதின்மவயது பையனுகள்,வயதான போலிஸ் அதிகாரி போன்ற கதாப்பாத்திரங்கள் பல அளவிலுள்ள பல உருவத்திலுள்ள பாலியல் பிரச்சினையை எதிர்கொள்வார்கள், உள்பட்டவர்கள்.

 பெண்களின் தெரிவு முக்கியப்படுத்தியுள்ளார்கள்.

  • · கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா? என கனத்த முடிவுகளை எடுக்கும் விஜய் சேதுபத் மனைவி கதாப்பாத்திரம்.
  • ·   காதலனை அழைத்த சமந்தா கதாப்பாத்திரம்,  கணவனுடன் இணையுவாரா? இல்லையா? போலிஸ் அதிகாரியின் விருப்பத்திற்கு உடன்படுவாரா? இல்லையா?
  • ·         அம்மா கதாப்பாத்திரம், யேசு பைத்தியத்திலுள்ள கணவன் கதாப்பாத்திரத்தை கேள்வி எழுப்பும். மகனின் அச்சத்திற்கு தயங்காது பதிலளிக்கும்.  இப்படியாக பெண்கள் தெரிவு செய்யும், தங்கள் செயலுக்கு பொறுப்பேற்கும்  இடத்திற்கு நகர்கின்றனர்.

உருகி உருகி வாடா…. உன்னை பெட்டரா பீஃல் பண்ண வைக்கேன்னு சொல்லிய  பெண் கதாப்பாத்திரம், அவன் இறந்ததும்….. அந்த கணவன் கதாப்பாத்திரம் கூட அவனை சக மனிதனாக நினைத்து பேசிக்கொண்டு இருக்கையில் அவனை மிகவும் பயத்துடன் கேவலமாக அது இது என அழைக்கும் காட்சிகள், தேவை முடிந்ததும் பெண்கள் இப்படி தான் என்ற மனநிலையை பற்றி சொல்ல வருகின்றனரா? .

காதலன் காதலி வீட்டில் வந்து சாவுவது அவனை பிரிட்ஜில் வைத்திருப்பது , மெத்தையில் கட்டி கீழை போட்டு எடுத்து செல்வது, இவர்களை போலிஸ் அதிகாரி துரத்துவது இவை லாஜிக்கை இடிக்கிறது.

இந்த சமூகத்திலுள்ள ஆண்களின் மனநிலை. தன் மனைவி என்பவர், தன் வீடு, தன் அறை, தன்  கட்டில், போன்ற ஓர் உடமை என நினைத்திருப்பது. வரம்பு மீறி போய் விட்டாள் என அறிந்ததும் புலம்பும் ஒவ்வொரு வார்த்தைகள் எல்லா வார்த்தைகளையும் சகித்து கொள்வார், ஆனால் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க தன்னிடம் பணிய வேண்டும் என போலிஸ் அதிகாரி கூறும் போது பெண் தயங்குவாள். செக்ஸ் தேர்வு என்பது விருப்பம் சார்ந்த, அன்பு கரிசனை சார்ந்த  தேர்வு, அதில் அதிகாரம் வஞ்சகம், கண்டிப்பு புகிரும் போது உயிர் போனாலும் பெண் விரும்ப மாட்டாள் என அடிவரை இட்டு சொல்லும் விதம் அருமை.

ஒரு மனைவிக்கு பிரச்சினை என்றதும் அது தன்னை மட்டுமல்ல தன் குடும்ப கவுரவத்தையும் பாதிக்கும் என்ற மனநிலை ஒருபுறம். மனைவிக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற கணவனின் தவிப்பு. கணவன் மனைவியின் உத்தமான உறவின் பக்கத்தை விளக்கியுள்ளனர்.

கணவன் மனைவியாக  சேர்ந்து இருந்த போது, இருந்த இறுக்கம் ’நாம் பிரிகிறோம்’ என்றதும் அது நட்பாக,புரிதலாக கரிசனையாக மாறி விடும். அதுவரை பயம் கொண்டு பேசின மனைவி பின்பு நட்பில் பேச ஆரம்பித்து விடுவார். கடைசியில் கணவன் கதாப்பாத்திரம் கொஞ்சம் வண்மமாக கிண்டல் அடிக்கும். ”உன்னை போட்டவன் செத்து விட்டான், போட நினைத்தவனும் செத்து விட்டான், நான் உயிர் போனாலும் நெருங்கவே மாட்டேன்”  என்கிற போது கூட… காதலின் பார்வையில் சிரித்து கொண்டு கடந்து விடுவார் மனைவி. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் மனைவியின் சில சிறுமையையும் உள்கொண்டு, எதிர்கொள்ள துணை புரிந்து  நகர்வதே உண்மையான கணவனாக இருக்க இயலும்  என்ற கோணத்தில் சில காட்சிகள் அமைந்துள்ளது பாராட்டுதல்க்குறியது. கற்பு என்ற மனநிலை கடந்து உண்மையான புரிதலுடன் இணைவர்.

மேட்டர் படம் இருக்கா  மேடம்? ’சர்’ என ஆண்களை அழைப்பதற்கு இணையான ’மேடம்’ என்ற வார்த்தை மரியாதையான சொல்லாடல். பயண்படுத்திய விதம் திகக்கை வைக்கிறது. ’மேடம்’ என்றதும் பையா, பயப்படலாம் கூச்சப்படக்கூடாது        என்ற விளக்கத்துடன் மாணவர்களுக்கு சிடி விற்கும் அம்மா வயதான பெண்; அக்கா என்றதும் மாணவர்களை திட்டுவார்.  சில நாடுகளில் மேடம் என்ற வார்த்தைக்கும் பாலியல் தொழிலாளியை அழைக்கும் வார்த்தை என்றும் கேட்டுள்ளேன்.  அக்கா…. மேடம் லாஜிக் விளங்கவில்லை!

அவன் கவலையில் இருந்தான்,  எப்படி ஆறுதல் படுத்துவது. அவனுக்கு  மிட்டாயா கொடுக்க இயலும்?,  நான் ஐட்டம் இல்லை…. போன்ற ஒரு திரை வசனங்கள்  உண்டு . இது போன்ற வசனங்கள் தான் படம் ‘அடல்ட்’ படம் ’மோசமான படம்’, குடும்பத்துடன் பார்க்க இயலாது என கொக்கரிக்க வைத்தது. ஆனால் கணவன் மனைவி இணைந்து இருந்து பார்க்க வேண்டிய படம் இது. கண்டிப்பா ஆண்கள் ஈகோவை உடைக்கும். அதனாலோ மனைவிகள் இது போன்ற படங்களை பார்க்கக்கூடாது என கணவன் விரும்புவார்.

ஒவ்வொருவரும் அவரவர் கதாப்பாத்திரம் ஏற்று மிகவும் சிறப்பாக நடித்தி இருந்தனர். விஜய்சேதுபதியின் நடிப்பை எடுத்து சொல்லாது இருக்க இயலாது. பகத் தனது இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளார். குட்டி பையன் நடிப்பு மிகவும் சிறப்பு. ஒரு அப்பாவின் இழப்பை அந்த குழந்தை எப்படி எடுக்கிறது ஆனால் அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பார்வை. அந்த நபர் பெண்ணாக திரும்பி வந்ததை மற்றவர்கள் எப்படி எடுக்கின்றனர். தகப்பன் இல்லா குழந்தைகள் நிலையை ஒரே காட்சியில் சொல்லியிருப்பார்கள். வீடு நிறைய நபர்கள்; ஆனாலும் அந்த குட்டி பையன் சாப்பிடுவதும் அவன் மனைவி கூட யாரோடும் ஒட்ட இயலாது தனிமையில் தான் உழலுகிறார்கள். தாய் மாமியார் என யாரெல்லாமோ இருந்தாலும் அம்மாவிற்கு மகனும், மகனுக்கு அம்மாவும் மட்டுமே இருப்பார்கள். சேதுபதி கதாப்பாத்திரத்தை எல்லாரும் கேள்வி எழுப்பும் போதும், தாக்கும் போதும் மகனும் மனைவியும் அந்த நபரை அதே போன்று ஏற்க கொள்ளும் மனநிலைக்கு வருகின்றனர்.  மாற்று பாலினத்தார் முதலில் மதிக்கப்பட வேண்டியது ’தனது குடும்பத்தில் தான்’ என குறிப்பிடுகின்றனர்.

மனைவி மற்றொருவருடன் தனது  படுக்கையை பகிர்ந்தார் என்பது கணவனுக்கு  எவ்வளவு துயரோ அதே போன்று தான் ஒரு மகனுக்கு அம்மா பாலியல் படத்தில் நடித்தாள் என்பதும்.  அம்மாவின் விளக்கம் ஏற்று கொண்டதாக தெரியவில்லை.  நண்பனிடம் பின்பும் கேட்கிறான் எல்லாரும் பார்த்திருப்பார்களோ? பெண் என்பவள் தனது கணவனின் கேள்விக்கு மட்டுமல்ல மகனின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தத் நிலையில் தான் உள்ளனர். ”போடி தேவிடியா மோளே” என மகனிடவும் திட்டு வாங்கும் நிலையில் தான் தாய்மை உள்ளது. இருந்தாலும் மகன் உயிரை காப்பாற்றவும் தன் நிலையை புரிய வைக்கவும் பிரயத்னம் எடுக்கும்.

”நீ சுனாமியில ஜீசசு சிலையை பிடித்து தப்பித்ததால் கிறிஸ்தவனாக மாறின கரடியை பிடித்து தப்பித்தா எதா மாறியிருப்ப”? இந்த கேள்வி தற்கால ஹிந்துத்துவா அரசின் மதமாற்றத்தை முன் நிறுத்திய கேள்வியாகத்தான் படுகிறது. இருப்பினும் இவாஞ்சலிக்கன் மதவாதிகளின் குருட்டு பக்தியையும் கோட்பாடுகளையும் நம்பிக்கையையும் சரியான பார்வையில் கேள்வி எழுப்பி உள்ளதையும் மறுக்க இயலாது.

நீலன் கெ சேகர், மிஷ்கின் நளன் குமரசாமி,மூன்று பேரும்சேர்ந்து அவரவர் பகுதிக்கு  திரைவசனம் எழுதியுள்ளனர்.  இது ஒரு புது யுக்தியாக இருப்பதால் சிறப்பாகவும் திரை வசனம் பல அடுக்கு உருவகம் அர்த்தங்கள் கொண்டு விளங்குகிறது,  தெளிவும் உள்ளது. 

தம்பதிகள் பேசின உரைகள்  மிகவும் இயல்பானது. அதை மிகவும் ஆழமான புரிதலுடன் மனித உளவியலை அறிந்து நீலன் கே சேகர் எழுதியுள்ளார். ’நாம் சேர்ந்தே இருந்தோம்’ ஏன் ஒட்டவில்லை,…… மிஷ்கின் பகுதியான மூன்றாம் பாலினம்  சார்ந்த வசனங்கள் எடுத்து சொல்லக்கூடியது. அவரே சொல்லியுள்ளார் அவர் நேரிட்டு கண்டு உணர்ந்த அவருடைய நண்பர் வாழ்க்கையை போன்று இருந்ததால் வசனங்கள் அமைப்பது எளிதாக இருந்தது என்று. இவாஞ்சலிக்கன் கிறிஸ்தவ திரைவசனங்கள் நெடியதும் திரும்ப திரும்ப வருவதாக இருந்தது. முதலில் ’நான் கிறிஸ்தவன் இல்லை’ என்பதும் கடைசியில் மனைவியின், கிறிஸ்தவ மதமாற்றம் சார்ந்து கேள்வி எழுப்பும் போது பதிலில்லாது தலையாட்டுவதும் முரண்களை எழுப்புகிறது.
ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் காட்சி தொகுப்பிற்கும் மெனக்கெட்டுருப்பது  படத்தின் அழகை கூட்டுகிறது.

பார்ப்பவர்களை விட்டு விட்டு நடிப்பவர்களை குற்றம் சொல்கின்றனர் , போன்ற சில டயலோக்குகள் நெருடலாக இருந்தாலும் அர்த்த செறிவுள்ளதாக இருந்தது.  இது போன்று நேரடியாக  மகனிடம் கூற இயலும் சமூக சூழலிலா உள்ளோம்.

திரைப்படம் வாழ்க்கையில் காணும் முரண்கள், மனிதனின் இயல்புகளை , நாடகத்தன்மையான வாழ்வியலை சொல்கிறது. இந்த படத்தில் நான் காணும் குறைபாடு மனித உறவிலுள்ள சிக்கல்கள், மறக்கவேண்டிய இயல்பாக நடக்கக்கூடிய குற்றங்களை கூறும் படம் பல விடையங்களுக்கு தீர்வு அல்லது மாற்று வழி கொடுத்துள்ளதா?

பாலியல் படங்களில் நடிப்பது என்பது மற்று தொழில்களுக்கு இணையான தொழிலா?  மகன் தாயை கொலை செய்ய துரத்தும் சீன் அந்த அளவிற்கு தீவிரமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? நவீன தலைமுறை மனநிலை அதே 19 நூற்றாண்டு மனநிலையில் தான் உள்ளதா?  சி. டி தேடி அலையும் பாலியல் வரட்சியில் தான் உள்ளனரா? போலிஸ் அதிகாரியிடம் கதறி அழும் நிலையில் தான் வேம்பு கதாப்பாத்திரம், மூன்றாம் பாலின பெண் கதாப்பாத்திரம் உள்ளதா? பெண்களின் வுலுவை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தான் வளர்க்கும்? பாலியல் படம் எடுப்பவர்களை குறை சொல்லாது நடிப்பவர்களை குறை சொல்கின்றனர், படத்தில் நடிக்கும் அம்மாவை தவறாக பார்க்கும் மகனுக்கு தான் பார்ப்பது என்ன் தவறாக தெரியவில்லை. எதுவும் தவறில்லை என்பது திரைப்படங்களின் நோக்கமாக இருக்கலாமா? ஒரு தெளிவான முடிவு இல்லை. அதுவே இந்த படத்தின் பலவும் பலவீனவுமாக காண்கிறேன். முடிவு காண்பவர்களின் மனநிலையை பொறுத்து அமையும்.


இயக்கம் தியாகராஜா குமரராஜா.  திரை இசை யுவன் சங்கர் ராஜா. 









மத்திய அரசின் புதிய கல்வி திட்டம்-2019

$
0
0

மனிதமேம்பாட்டுதுறையின்மேற்பார்வையில்முனைவர்கெ.கஸ்தூரி ரங்கன்அவர்களால்2017 ல்பணியப்பட்டு2019 ல்முடிக்கப்பட்டுள்ளது. இதன்முக்கியநோக்கம்கல்வியில்ஸ்திரதன்மை, சமதர்மம், நியாயமான  கட்டணம், தரம், பொறுப்புதன்மைஆகியவைஉருவாக்குவது ஆகும்.

தேசியவருமானத்தில்6% கல்விக்காகசெலவிடவேண்டும்என1964 ல்கல்விதிட்டம்கொண்டுவந்தகோத்தாரிகுழுகூறியுள்ளது. 2019 லும்கஸ்தூரிரங்கன்குழுவும்அதே6% பணம்கல்விக்காகசெல்விடபணிந்துள்ளது.

தற்போதுகல்விக்குஎன3.8 % செல்விடுகின்றனர். அதுஉலகாலாவியசராசரிஅளவு4.7% விடகுறைவுதான்.நம்  நாட்டின் பாதுகாப்பு-ராணுவபணிக்குக்குஎன6.4% நிதியும்ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்காகசெலவிடுதல்என்பதுஇலவசகல்விகூடம், இலவசபுத்தகம், லாபுகள், தொழில்நுட்பம், விளையாட்டுஅரங்கம், கலைபண்பாட்டுவளர்ச்சிஎன்பவையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால்4 வது, 5, 6,7 வது பரிந்துரை எனஅரசு,கல்விஆசிரியர்கள்ஊதியம்உயர்ந்ததைதவிரகல்விக்கானவாய்ப்புகள்உயரவில்லை. 25% மாணவர்கள்மட்டுமே 12 ஆம்வகுப்புமுடிந்துகல்லூரிபடிப்பைநோக்கிவருகின்றனர்என்பதையும்கணக்கில்கொள்ளவேண்டும். மீதம்75 % பேர் 12 ஆம்வகுப்புக்குஉள்ளாகவேகல்விசூழலில்இருந்துபின்வாங்கிவிடுகின்றனர்என்பதேநிஜம்.

The Right to Education Act, 2009 (RTE Act): Currently, the RTE Act provides for free and compulsory education to all children from the age of six to 14 years.
The draft Policy recommends extending the ambit of the RTE Act to include early childhood education and secondary school education. This would extend the coverage of the Act to all children between the ages of three to 18 years.
6-14 வயதுகுழந்தைக்ளுக்குமுற்றிலும்இலவசமாககல்விகொடுக்கவேண்டியதேவையைசட்டம்பரிந்துரைத்துள்ளது. 70 வருடம்  ஆகியும்நடைமுறைப்படுத்த இயலாதஅரசு;வயது 3 முதல் 18 வயதுவரையுள்ளகுழந்தைகளுக்குகல்விதிட்டம்வகுத்துள்ளது.  கல்வி பெறுவது இலவசமாக   என்பதல்ல,பதிலாகபள்ளிகளின்கூட்டமைப்புஎன்குறிப்பிட்டுள்ளது..

கல்வி திட்ட்டத்த 5-3-3-4 எனப்பிரித்துள்ளது. முதல் ஐந்து வருடம் அதாவது 3 வயது முதல், ¼,1/2  , ¾, ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு பிரீ பைமரி என, அடுத்து3-5 வகுப்புகள், அடுத்த நிலை 6 முதல் 8, கடை நிலையாக 9 ஆம் வகுப்பு முதல் +2.Curriculum framework  5 -3-3-4 கல்விதிட்டம் -five years of foundational stage (three years of pre-primary school and classes one and two), (ii) three years of preparatory stage (classes three to five), (iii) three years of middle stage (classes six to eight), and (iv) four years of secondary stage (classes nine to 12).

எல்கெஜி , யுகெஜிபள்ளிகளைதேவையற்றது. இதில்மழலைபள்ளியை 3 வருடம். 3 வயதுகுழந்தைக்குஆரோக்கியமானஉணவு, பெற்றவர்களின்அன்புதான்தேவை.
குழந்தைகள்நலனில்அக்கறைகொண்டிருந்தால்கற்கபோகும்பாடசாலையில்பரப்பளவு, விளையாட்டுமைதானம், கட்டிடஅமைப்புமாண்டிசோரிகல்விபயிற்சிபெற்றஆசிரியர்கள், மழலைமருத்துவர், இவயைபற்றிஎதுவும்கருத்துரைக்கவில்லை. வெறுமெனேசிலகற்பனையானகற்பிதங்களைவிளம்புகிறதுகல்விதிட்டவரை.
இன்றுவரைமுதலாம்வகுப்புசேர்க்கமழலையர்பள்ளிசாற்றிதழ்தேவைஇல்லை . இனிதேவைப்படலாம். மூன்றுவயதுகுழந்தையைபள்ளிக்குவிடபெற்றோர்கள்விரும்பாவிடிலும்விட்டேதீரவேண்டும்எனநிர்பந்தம்செலுத்தலாம்.  இனிமத்தியஅரசின்ஆதரவுடன்  தனியார்கள் கல்வி வியாபாரத்தில் இரண்டு வருடம் என்பதை மூன்று வருடமாக சம்பாதிக்கலாம்.

ஆசிரியர்களின்தரத்தைபற்றிஅங்கலாய்க்கும்மத்தியஅரசுஅங்கன்வாடிஎன்பதைபற்றிகுறிப்பிடுகின்றனர். 3 வருடகல்விவழங்கபோகும்அங்கன்வாடிஆசிரியர்களின்அடிப்படைகல்விதகுதி +2 அல்லது 10 ஆம்வகுப்புஎனகொடுக்கப்பட்டுள்ளது.  வயதுதகுதி 18 முதல் 40 எனஅரசுஇணையத்தில்குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைவிடகுழந்தைகள்வளர்ச்சிமோசமாகும்சூழல்தான்வரப்பொகிறது. கற்பிப்பதிலில்பிரத்தியேகம்பயிற்சிஎடுத்திருக்கும்மாண்டிசரி, டிடிசிஅல்லதுபிஎட்என்றகல்விதகுதியைகேட்கவில்லை.
இப்படியாகஅடிப்படைதேவை, தற்போதையசமூகநிலை, கடந்தகல்விதிட்டங்களில்நிறைவேற்றாதவாக்குறுதிகளைஎதுவும்நினைத்துபார்க்காதுபுதிதாகஒன்றைஅறிமுகப்படுத்துகிறார்கள்.

மோடியின்கல்விதிடத்தின்பல கூறுகள்கோத்தாரிதிட்டஅறிக்கையில்இருந்துஎடுத்தவைதான். கோத்தாரிதிட்டக்குழுபரிந்துரைத்துள்ளஅடிப்படைவசதிகளைநடைமுறைப்படுத்திவிட்டுபுதுகல்விகொள்கையைநடப்பாக்கமுன்வந்திருந்தால்நல்லதாகஇருந்திருக்கும்.
கோத்தாரிதிட்டக்குழு பரிந்துரைகள் என்னவென்று பார்த்தால்

(i)
அரசுதனதுஒட்டுமொத்தஉற்பத்தியில்6 % ஐக்கல்விக்குஒதுக்கவேண்டும்எனஅக்குழுபரிந்துரைசெய்தது 
(ii)
வயதுவரைகட்டாயக்கல்வி
(iii)
ஆசிரியர்கல்விமற்றும்மதிப்பூதியம்
(iv)
மொழிகள்கற்றலில்தாய்மொழியுடன்கூடியமும்மொழிக்கொள்கை
(v)
சமமானகல்விவாய்ப்பு
(vi)
சமூகத்தொண்டுடன்பணிஅனுபவம்
(vii)
பகுதிநேரகல்விமற்றும்தொலைதூரக்கல்வி
(viii)
இடைநிலைக்கல்வியைதொழிற்சார்புடையதாக்குதல்
(ix)
பெண்களுக்கானஇடைநிலைக்கல்வி
(x)
அறிவியல்அடிப்படையிலும், வகுப்பறைச்செயல்முறையிலும்சீர்திருத்தம்.
 (xii)
தறிப்பயிற்சி, தோட்டக்கலை, குடிமைப்பயிற்சிஆகியவற்றைஅறிமுகம்செய்தது. 
(xiii)
விளையாட்டு, நாட்டுநலப்பணித்திட்டம் 
(xiv)
ஒருகிலோமீட்டருக்குஒருஆரம்பப்பள்ளி, 2 கிலோமீட்டருக்குஒருஉயர்நிலைப்பள்ளி, 3 கிலோமீட்டருக்குஒருமேல்நிலைப்பள்ளிஎனகல்விச்சாலைகளைக்கட்டமைப்பது ஆகியவைஇக்குழுவின்சிறப்பம்சமாகும்.
இதைஎதையும்நடைமுறைக்குகொண்டுவராதுகோத்தாரிதிட்டஅறிக்கையில்இருப்பவையுடன்மோடியின்கல்விதிட்டவும்புதிதாகசேர்க்கப்பட்டுஉள்ளவை.

புதிதான சில பரிதுரைகள் பலர் அச்சுத்துடன் பார்க்கும் பரிந்துரைகள் இவை தான்
1.பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புஆகியவற்றிலிருந்துஉயர்கல்விதொழிற்கல்விஆகியஅனைத்திற்கும்இனிஅனைத்திந்தியநுழைவுத்தேர்வுஉண்டு, அதற்குதேசியதேர்வுமுகமை(national Testing Agency-NTA) உருவாக்கப்படும். 
2.
மாநிலகல்விஆணையத்திற்குதனித்துமுடிவெடுக்கும்அதிகாரம்எதுவுமில்லை. (18.4.2)
3.
கல்வி, பல்கலைக்கழகங்களுக்குஅங்கீகாரம்வழங்க, பொதுக்கல்விக்குழு(General Educational Council) என்றஒன்றுநிறுவப்படும்.(இப்போதுயுஜிசிஉண்டு)
4.
மேல்ஆராய்ச்சிபடிப்புகள்அனைத்தையும்நிர்வாகம்செய்யும்அமைப்பாகதேசியஆய்வுநிறுவனம்அமைக்கப்படும். இனிநிறைஞர்படிப்பு(M.Phil) கிடையாது, மேல்ஆராய்ச்சிபடிப்பு(Post Doctoral Fellow) மட்டுமேஉண்டு, இதற்குமாணவர்களைதேர்வுசெய்வதுதேசியஆய்வுநிறுவனத்தின்பணி.
5.
தனியார்கல்லூரிகளையும்அரசுகல்லூரிகளையும்சமமாகஅணுகுதல்போன்றபரிந்துரைகளைவரைவுஅறிக்கைமுன்வைத்துள்ளது..


இந்தியாவில்இதுவரை இருந்துள்ள கல்விதிட்டங்கள்


Indian Education Policies


மோடிமுன்வைக்கும்கல்விக்கொள்கை 2019

மத்தியஅரசுகொண்டுவரத்திட்டமிடும்புதியகல்விக்கொள்கை, பல்வேறுஅச்சங்களைஏற்படுத்தியிருக்கிறது. யஷ்பால்குழுபோன்றபழையகல்விகொள்கைகளுக்குதொடர்ச்சியாகஅறிவித்துஇருக்க  வேண்டும். ஆனால்அதைசெய்யவில்லை. 

இதன்முக்கியஅம்சங்கள்
1.        கல்வியில்முன்பிருந்ததரம்போய்விட்டதுஎன்றுசொல்லும்புதியகல்விக்கொள்கை, இதைச்சரிசெய்யஇரண்டுவழிகளைமுன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடிமத்தியப்பட்டியலுக்குக்கல்விவரவேண்டும்என்கிறது. ஆனால், இதுமாநிலங்களின்உரிமையைப்பறித்துவிடும்என்றுகுரல்கள்எழுந்திருக்கின்றன.
2.      அடுத்து, நான்காம்வகுப்பின்முடிவிலிருந்தேதேர்ச்சி / தோல்விஎனமாணவர்களைச்சலித்தெடுக்கவேண்டும்என்கிறது. இதுபழையபடிபள்ளியிலிருந்துபலமாணவர்கள்வெளியேறுவதற்குத்தான்வழிவகுக்கும்.
3.      திறன்களை, குறிப்பாகவேலைவாய்ப்புத்திறன்களைவளர்க்கநமதுகல்விதவறிவிட்டது; வேலைக்குத்தகுதியற்றபடித்தவர்களைஉருவாக்கிவீணடித்துவிட்டதுஎன்றுசொல்லும்புதியகொள்கை, இதைச்சரிசெய்யதிறன்மேம்பாட்டுஆணையம்அமைத்து, பள்ளிக்கூடங்களில்தொழில்துறைதேவைகளைமனதில்வைத்து, மாணவர்களுக்குத்திறன்மேம்பாட்டுப்பயிற்சிவழங்கவேண்டும்என்கிறது.

மேலும், கல்விமுழுமைபெறும்முன்னமேவேலைத்தகுதிச்சான்றிதழ்மூலம் (மாணவர்கள்விரும்பினால்) ஒன்பதாம்வகுப்போடுதொழில்துறையில்இணையலாம்என்கிறது. இதுகுலக்கல்விமுறையைநினைவுபடுத்துவதாகக்கல்வியாளர்கள்குற்றம்சாட்டுகிறார்கள்.
4.      இந்தியஅளவிலானகல்வியின்தரத்தைமேம்படுத்த, தரமேம்பாட்டுக்குழுபோலஒருஅமைப்புஏற்படுத்தப்படும். தேசியஅளவிலானபள்ளிக்கல்விதரச்சான்றுஆணையம்எனஅதுஅழைக்கப்படும்என்கிறதுஇந்தஅறிக்கை. இதுஅரசுப்பள்ளிகளைமுற்றிலும்முடங்கச்செய்துவிடும்எனும்அச்சத்தைஏற்படுத்தியிருக்கிறது.
5
ஆசிரியர்களின்தரம்ஆசிரியர்கள்திறன்சோதனைகளுக்குஉட்படுத்தப்படும்வண்ணம்குறைந்தபட்சம்ஐந்தாண்டுகளுக்குஒருமுறைதரச்சான்றுத்தேர்வுகளைஆசிரியர்கள்எதிர்கொள்ளவேண்டும்என்கிறது.
6.      மதியஉணவுத்திட்டத்திலிருந்துஆசிரியர்களைவிடுவிக்கிறதுஇந்தப்புதியகொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்குஅரசுநேரடியாகஉணவுதராது. அதற்குப்பதிலாகஅவற்றைத்தனியார்ஒப்படைத்துவிடும். அரசின்நலத்திட்டத்தைத்தனியாரிடம்ஒப்படைக்கும்முயற்சிஇது.
7.  கோத்தாரிக்குழுஇந்தியாவைச்சமூகம்என்றுஅழைத்தது. இந்தஆவணமோஇந்தியப்பொருளாதாரம்என்றேஅழைக்கிறது.
8

கோத்தாரிக்குழுகல்வியைசேவைஎன்றுஅழைத்தது. மோடியின்புதியகல்விக்கொள்கைஆவணமோகல்வியைமுதலீடுஎன்கிறது.
o     மூன்றாம்வகுப்பிலிருந்துமூன்றாவதுமொழிஒன்றைவிருப்பப்பாடமாகஎடுப்பதும், ஆறாம்வகுப்பிலிருந்துமூன்றாம்மொழிஒன்றைகட்டாயமாகக்கற்பதுவும்திருத்தப்பட்டவரைவிலும் (4.5.9) வலியுறுத்தியுள்ளது.
o    முன்மழலை (Pre KG) வகுப்பிலிருந்துபள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, பல்கலைக்கல்வி, உயராய்வுநிறுவனங்கள்ஆகியஅனைத்தையும்தேசியகல்விஆணையம் (National Education Commission)- இராஷ்ட்ரியசிக்ஷாஆயோக் (Rashtriya Shiksha Aayoung) என்றஅதிகாரகட்டமைப்பின்கீழ்இந்தக்கல்விக்கொள்கைகொண்டுசெல்கிறது. (2.3.1) ஒவ்வொருமாநிலத்திலும்மாநிலமுதலமைச்சர்தலைமையில்மாநிலக்கல்விஆணையம்என்றஅமைப்புஇருந்தாலும், அதுதேசியகல்விஆணையத்தின்முகவாண்மைஅமைப்பாகமட்டுமேசெயல்படும். (8.1.3.).
o    பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புஆகியவற்றிலிருந்துஉயர்கல்விதொழிற்கல்விஆகியஅனைத்திற்கும்இனிஅனைத்திந்தியநுழைவுத்தேர்வுஉண்டு, அதற்குதேசியதேர்வுமுகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும்.
o    இந்தியஅரசின்அதிகாரத்தைகல்லூரி-பல்கலைக்கழகக்கல்வியில்நிலைநிறுத்துவதற்காகதேசியஉயர்கல்விஒழுங்காற்றுஆணையம் (National Higher Educational Regulatory Authority-NHERA) என்றஒன்றைஇந்தக்கல்விக்கொள்கைமுன்வைக்கிறது. (பத்தி 18.1.2)
o    மாநிலகல்விஆணையத்திற்குதனித்துமுடிவெடுக்கும்அதிகாரம்எதுவுமில்லை . (18.4.2)
o    கல்வி, பல்கலைக்கழகங்களுக்குஅங்கீகாரம்வழங்க, பொதுக்கல்விக்குழு (General Educational Council) என்றஒன்றுநிறுவப்படுமாம். இந்தக்குழுகல்லூரிமட்டுமின்றி, பள்ளியின்பாடத்திட்டத்தையும்முடிவுசெய்யும்(18.3.2).
o    மேல்ஆராய்ச்சிபடிப்புகள்அனைத்தையும்நிர்வாகம்செய்யும்அமைப்பாகதேசியஆய்வுநிறுவனம்அமைக்கப்படும். இனிநிறைஞர்படிப்பு (M.Phil) கிடையாது, மேல்ஆராய்ச்சிபடிப்பு (Post Doctoral Fellow) மட்டுமேஉண்டு, இதற்குமாணவர்களைதேர்வுசெய்வதுதேசியஆய்வுநிறுவனத்தின்பணி.
o    தனியார்கல்லூரிகளையும்அரசுகல்லூரிகளையும்சமமாகஅணுகுதல்போன்றபரிந்துரைகளைவரைவுஅறிக்கைமுன்வைத்துள்ளது..

நமது கேள்வி எந்த் திட்டங்களையும் செம்மையாக நடைபடுத்த முயற்சி எடுக்காது புதிய கருத்தாக்கங்களுடன் அதே தேவைகள் இன்றும் இருக்க புதிய கல்வி கொள்கையை மோடி அரசு அவசர அவசரமாக ஏன் கொண்டு வர வேண்டும். பல பரிந்துரைகள் சிறப்பாகவே உள்ளது, ஆனால் போதிய அரசு பள்ளிகள் இல்லை,வசதிகள் மேம்படுத்தி கொடுக்கவில்லை. ஒரே திட்ட த்தில் கல்வி பெறும் சூழல் கூட இல்லை. புதிய திட்டம் அடிப்டை இல்லாது மேலோட்டமாக புகுத்தும் கொள்கை போல் உள்ளது.


source




 [J

இந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்

$
0
0

a.      புத்தமதம் ஆட்சியில் 2ஆம் நூற்றாண்டு வரையில்
b.      குருகுல கல்வி -இந்து மதம் ஆட்சியில் 2000 வருடங்கள்
c.      மெக்காலே ஆங்கிலக் கல்வி திட்டம்-1834 
d.      டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு-1948
e.      டாக்டர் லட்சுமணசாமி குழு-1952
f.        கோத்தாரி குழு திட்டம்-1964 
g.      புதிய தேசிய கொள்கை (1986 மே மாதத்தில் பிரதம மந்திரி ராஜீவ் காந்திஅரசாங்கங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது).
h.      தேசிய கல்வி கொள்கை (NPE) 1992 அதிரடி திட்டம் (PoA),
i.        யஷ்பால் கல்விக் குழு திட்டம்-2009
j.        மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019
புத்த மதம்இந்தியாவில் ஆட்சிசெய்தபோது நாலந்தாபோன்ற இடங்களில்பல்கலைக்கழகங்கள்சாதி பாகுபாடு இன்றிஅனைவருக்கும் கல்விஅளித்திருந்தது.(அந்தக் காலத்தில்கல்வி என்பது மதபோதனைதான்).தமிழகத்தில்சிதரால்,கழுகுமலையிலும் உண்டு -உறவிட கல்விகூடங்கள்இருந்ததிற்கான சான்றுகள் உள்ளன.

புத்தமதம் அழிக்கப்பட்டு இந்து மதம் தழைத்தோங்கிய பின்சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர்சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில்வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்ததுஇதன்விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால்பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது.. அந்தஅதிகார வர்க்கம்கல்வி சாமனியரை சென்றடைவதைத்தடுத்துசிறு மற்றும் குறுநில மன்னர்கள் ,உயர் சாதியினரைமட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் [JA1]  மட்டும்பயனடைய உதவி செய்தது.

மெக்காலே கல்வி முறை
இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனிஇந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்ததுபிரிட்டன்பாராளுமன்றம்கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாகஇலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும்என்று உத்திரவிட்டதுஅந்த லட்சம் ரூபாயை எவ்வாறுசெலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோதுஅப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டுமுறைகள்ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த"தாய் மொழிவடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை.மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்விஅந்தஇரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறைஅடிப்படையான ஆங்கில வழிக் கல்விஅது தான் இன்றையதேசியவாதிகளாலும்இந்து மத அடிப்படைவாதிகளாலும்சாடப்பட்டு வருகிறது.

அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவதுசமஸ்கிருதம்அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக்கல்விதான்மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை மறுத்து மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்னகாரணங்கள் . ஆங்கிலம் என் ஒரு பகுதியும் சஸ்கிருதவும்அரபியும் என் இன்னொரு சாரார் வாதாடிய போது மெக்காலேபதில் இப்படியாக இருந்தது .
 I have no knowledge of either Sanscrit or Arabic.--But I have done what I could to form a correct estimate of their value. I have read translations of the most celebrated Arabic and Sanscrit works. I have conversed both here and at home with men distinguished by their proficiency in the Eastern tongues. I am quite ready to take the Oriental learning at the valuation of the Orientalists themselves. I have never found one among them who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. The intrinsic superiority of the Western literature is, indeed, fully admitted by those members of the Committee who support the Oriental plan of education. 


மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை,அறிவியல்வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவுபுத்தகம் உள்ளதுஅது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தைஅறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மதபோதனைகளை கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியானகல்விக்கு செலவிடுவது வீண்இந்தியர்களின் அறிவுத் திறனைவளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறைஇருக்க வேண்டும்எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப்படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலைபடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்அது உலகத்தரத்தில் இந்தியர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும்.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையைஅறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசுசெய்திருந்தால் அன்றைய இந்திய ஆளும் அதிகாரவர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருப்பார் ஆனால் வருணாஸ்ரமம் சார்ந்த குருகுல கல்வி தான் வளர்ந்திருக்கும். ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம்இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகியதுஎன்பதை மறுக்கல் ஆகாது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு
நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டேபல்கலைக்கழகக்கல்வியின் தரத்தை ஆராயஅப்போது ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர்ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல்கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு.  இந்தியப்பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது, உயர்கல்வியை நிறுவனமயமாக்கிதனியார் கல்லூரிகளை உள்ளூர்க்குழுமங்கள் உருவாக்கிமானியக் குழுவிடம் பணஉதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர்ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி - 1952
1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தடாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக்குழு அமைக்கப்பட்டது இதில் தந்தை பெரியார்ஜி.டி.நாயுடுஉட்பட பலர் நேரில் ஆஜராகிகல்வி குறித்து விவாதித்தனர்.பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத்தொடங்குதல்தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்றுமொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழுமுன் மொழிந்தது.
 கோத்தாரி கல்விக் குழு
டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கியஇந்தக் குழுவில் பிரிட்டன்அமெரிக்காரஷ்யா போன்றநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்கல்வியாளர்கள்இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத்தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்கஅறிக்கையை 1966-ல் வழங்கியதுஇந்தியக் கல்விக்குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரிகல்விக் குழுதான்.

கோத்தாரி குழு  அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1.14
(i)                 அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக்கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைசெய்தது
(ii)               வயது வரை கட்டாயக் கல்வி
(iii)             ஆசிரியர் கல்வி மற்றும் மதிப்பூதியம்
(iv)             மொழிகள் கற்றலில் தாய்மொழியுடன் கூடியமும்மொழிக் கொள்கை
(v)               சமமான கல்வி வாய்ப்பு
(vi)             சமூகத் தொண்டுடன் பணி அனுபவம்
(vii)           பகுதிநேர கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி
(viii)         இடைநிலைக் கல்வியைதொழிற்சார்புடையதாக்குதல்
(ix)             பெண்களுக்கான இடைநிலைக் கல்வி
(x)               அறிவியல் அடிப்படையிலும்வகுப்பறைச்செயல்முறையிலும் சீர்திருத்தம்.
(xi)              ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச்சாலைகளைக் கட்டமைத்தது.
(xii)           தறிப் பயிற்சிதோட்டக் கலைகுடிமைப் பயிற்சிஆகியவற்றை அறிமுகம் செய்தது.
(xiii)         விளையாட்டுநாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவைஇக்குழுவின் சாதனைகள்.

இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாகஅமல்படுத்தவில்லைஇப்படி இருக்க  பிரதம மந்திரி ராஜீவ்காந்தி அரசாங்கங்கத்தால், 1986 மே மாதத்தில் ஒரு புதிய தேசியகொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய கல்வி கொள்கை,

1.                    வேறுபாடுகளை அகற்றுதல் மற்றும் கல்விக்குசமமானதாகும் வாய்ப்பு
2.                  குறிப்பாக இந்திய பெண்கள்பழங்குடியினர் (ST)மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (SC) சமூகங்களுக்குமுக்கியத்துவம் அளித்தது.
3.                  அத்தகைய ஒரு சமூக ஒருங்கிணைப்புக்கு,உதவித்தொகைகள்,
4.                  வயது வந்தோர் கல்வியை விரிவுபடுத்துதல்,
5.                  தாழ்த்தப்பட்டவா்களிடமிருந்து அதிகஆசிரியர்களை நியமித்தல்,
6.                  ஏழை குடும்பங்களுக்கான ஊக்கத்தொகைதங்கள்குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புதல்,
7.                  புதிய நிறுவனங்களை மேம்படுத்துதல்,
8.                  வீட்டுவசதி மற்றும் சேவைகளை வழங்குதல்ஆகியவற்றுக்கான கொள்கைகள்.
9.                  தேசிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியில்"குழந்தையை மையமாகக் கொண்டஅணுகுமுறைக்குஅழைப்புவிடுத்தது,
10.               மேலும் நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளைமேம்படுத்துவதற்காக "கரும்பலகை திட்டம்"தொடங்கப்பட்டது.



1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி திறந்தவெளிபல்கலைக்கழகத்துடன் இந்த திறந்த பல்கலைக்கழக முறைவிரிவுபடுத்தப்பட்டது. 1986 நாட்டில் தொழில்சார் மற்றும்தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டங்களுக்குஅனுமதிக்கப்படுவதற்கான அனைத்து இந்தியஅடிப்படையிலான பொது நுழைவுத் தேர்வையும் நடத்ததிட்டமிட்டது.

தேசிய கல்வி கொள்கை (NPE) கீழ், 1992 ஆம் ஆண்டின் அதிரடிதிட்டம் (PoA),

பொறியியல் மற்றும் கட்டிடக்கலை / திட்டமிடல்நிகழ்ச்சிகளுக்கான சேர்க்கைக்குஅக்டோபர் 18, 2001 தேதியிட்டதீர்மானம்மூன்று நிலை தேர்வுத் திட்டம் (தேசிய அளவிலான JEEமற்றும் AIEEE மற்றும் மாநில அளவிலான பொறியியல் நுழைவுதேர்வுகள் நுழைவுத் தேர்வுகளின் பெருக்கம் காரணமாகமாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும்மேலோட்டப் பிரச்சினைகள் மற்றும் உடல்மன மற்றும் நிதிசுமையை குறைக்கிறது.


இக்கல்விக்கொள்கையை செயல்படுத்திட 23 சிறப்புப்பணிக்குழுக்களை அமைத்திருந்தது.

யஷ்பால் கல்விக் குழு
சாதிசமயவர்க்க வேறுபாடுகள் இன்றிஒரே மாதிரியான கல்விஎனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான்பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு.
1.        தேர்வுகளுக்குப் பதிலாகமாற்றுக் கல்வித் தொடர் மற்றும்முழுமை மதிப்பீட்டை (சி.சி..) இக்குழு அறிமுகம் செய்தது.
2.      எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழுகொண்டுவந்ததுஇதனால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பு வரை  தக்கவைக்கமுடிந்துது.


மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக்கொள்கைபல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது.யஷ்பால் குழு போன்ற பழைய கல்வி கொள்கைகளுக்குதொடர்ச்சியாக அறிவித்து இருக்க  வேண்டும்ஆனால் அதைசெய்யவில்லை. 

எரியும் பனிக்காடு வாசிப்பில் - பாலாவின் பரதேசி

$
0
0


பி. எச் டானியல் எழுத்தில் ஆங்கில மொழியில் 1969 ல் வெளிவந்த புத்தகம் ஆகும்   ’ரெட் டீ . பின்பு  ஈரா முருகவேல் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பொன்னுலகம் பதிப்பகத்தில்  வெளி வந்துள்ளது.


ஆங்கிலேயர்கள் 1902 ல் கொண்டு வந்த  தேயிலை தோட்டச்சட்டத்தை ஆதாரமாக வைத்து 1900-முதல் 1930 வரையுள்ள வால்ப்பாறை தேயிலைதோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக எழுதப்பட்ட நாவலாகும் ’எரியும் பனிக்காடு’.

எழுத்தாளர். 1941 முதல் 1965 வரையிலும் 25 வருடம் தேயிலை தோட்டங்களில் மருத்துவராக வேலை பார்த்துள்ளார். அன்றைய குடியரசு தலைவர் வி வி கிரி முன்னுரை எழுதியுள்ளது இப்புதகத்திற்கு சிறப்பாகும்.

1925 –ஓர்  இரவு; திருநெல்வேலியில் மயிலோடை கிராமத்தை சேர்ந்த் மனைவி வள்ளி , வயதான் தாயாருடன் மிகவும் வறிய நிலையில் வசித்து வரும் கறுப்பன்,எஸ்டேட்டில் மேஸ்திரியாக வேலைபார்க்கும்  இரண்டு மனைவியுள்ள சங்கர பாண்டியனை சந்திப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. அரிசி வாங்கக்கூட இயலாத நிலையில் நின்ற கறுப்பனுக்கு வெள்ளையும் சொல்லையுமாக அங்கு வந்த வெள்ளையப்பனுக்கு இருக்க கதிரை கொடுத்து குடிக்க டீ தண்ணீர் கிளாசில் கொடுக்க  நிலத்தில் இருந்து செரட்டையில் காப்பி குடித்து கொண்டிருந்த வெள்ளையப்பன் மேல் பெரும் மரியாதை பிறக்கிறது.


தானும்  தேயிலை தோட்ட வேலைக்கு போனால் கைமேல் காசு தான் மானம் மரியாதையாக வாழலாம் என்ற ஆசை துளிர்க்கிறது.தேவர், ஆசாரி, கொல்லர், மலையாளிகள், தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லோரும் தொழிலாளிகளாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதாக வெள்ளையனிடம் இருந்து அறிந்து கொள்கிறார். தொழிலாளிகள் பழனி, ஈரோடு, ராமநாதபுரம் சேர்ந்தவர்கள் என அறியும் போது  தானும் வீடு காடு வாங்கி விடலாம் என்ற கனவில்  தானும் வள்ளியுடன் செல்லலாம் என் முடிவு எடுக்கிறார்.

மிகவும் கடினமான பயணம் மேற்கொண்டு எஸ்டேட்டை அடைந்த வள்ளி -கறுப்பன் தம்பதிகளுக்கு முத்து லக்சுமி கணவர் சின்ன ராமன் மரணம் திகிலடைய செய்கிறது. 
நயமாக பேசின மேஸ்திரிகளின் உண்மை முகம் வெளிப்பட  அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். செருப்பு அணிதல் கூடாது. தொப்பி குடைகள் அணியவும் அனுமதி இல்லை. க்ள்ளு குடிக்கலாம் அதிகாரிகள் அருந்தும் பிராந்திக்கு அனுமதி இல்லை

எஸ்டேட்டில் வேலைக்கு என சென்று விட்டால் தப்பியோட இயலாது. தப்பி ஓட நினைத்தாலும் பிடித்து வந்து அடி உதை தான் கிடைக்கும். முன் கூறாக வாங்கின ஊதியம் கடனில் பிடித்து கொள்ள; ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ இன்னும் பல வருடம் காத்திருக்க வேண்டும். காலநிலையும் மோசன்காக உள்ளது.  அட்டை கடி , அடை மழை,  நடுங்கும் பனி விஷ காச்சல் என மக்களை வாட்டி எடுக்கிறது. மேலதிகாரிகளின் பெண் விடையங்களில் உள்ள சபலங்களையும் எதிர் கொள்ள வேண்டும்.

இந்த கதையின் பிராதன கதாப்பாத்திரம் வள்ளி இறந்து விடுவார். எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கும், வலுவற்ற எதையும் எதிர்க்கும் நம்பிக்கையற்ற மனநிலையில் படைத்திருப்பது  வருத்தமாகவே உள்ளது.



எஸ்டேட்டில் அதிகாரிகளாக கோபாலன் குணசேகரன், குமஸ்தா ஜாண்சன், டாக்டர் குருப்பு, தலைமை குமஸ்தா சாமிதாஸ், தலைமை எழுத்தர் மாணிக்கம், மலையாளி ஜோஸ் அவர் மனைவி அம்மணி என கதாப்பாத்திரங்கள் அணிவகுக்கின்றனர்.  இந்திய அதிகாரிகள் மாட்டுக்கறி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், சின்ன சின்ன சண்டைகள், புரணி பேசுவது, சில கள்ள தொடர்புகளுடன் காலத்தை தள்ளுகின்றனர்.

மேனேஜர் பதவி வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமானது.


http://thisisguhan.blogspot.com/2013/03/paul-harris-daniel-red-tea.html
இந்த சூழலில்தான் ஒரு இளைஞரான மருத்துவராக ஆபிரகாம் கோட்டயம் திருவல்லாவில் இருந்து எஸ்டேட்டுக்கு வந்து சேருகிறார். போராட்டம், இரக்கம், மனித நலம் உரிமை நலன் கொண்ட டாக்டருக்கு மக்கள் நிலை கண்டு வெகுண்டு எழுகிறார். தொழிலாளிகளுக்கு நல்ல மருத்துவம் தர நல்ல மருத்துவ மனை உருவாக்க அயராது பாடுபடுகிறார்.வெள்ளைகாரர்களிடம் ஊளைக்கும்பிடு போடாது மக்களுக்கான  உரிமைகளை பற்றி சிந்திக்கும் மனித நேயராக கதையில் பிரவேசிக்கிறார்.

பின்பு இந்தியா சுதந்திரம் பெற்றதும் வெள்ளைகாரர்கள் இந்தியா விட்டு போக வேண்டிய சூழலில் பல சட்டசலுகைகள் பெற்று  தொழிலாளிகள் நிம்மதியாக வாழ துவங்குகிறதுடன் கதை முடிகிறது.

ஒரு படித்தவன், சக மனிதனைபற்றி சிந்திப்பவனாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த நாவல் எடுத்துரைக்கிறது. படிப்பு இருப்பதால் மட்டுமே தன் உரிமையை பற்றி சிந்திக்கவும் உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்த்து குரல் எழுப்பவும் இயல்கிறது என படிப்பின் அவசியத்தையும் கதைகருத்தாக  நகத்துகிறார்.

இந்த நாவலை தழுவி இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான  திரைப்படம்  ’பரதேசியில்’ மதமாற்றம் நடப்பதைபற்றி காட்சிப்படுத்தி  எடுத்திருந்தார். இந்த நாவலில் எங்கும் மதம் மாற்றம் பற்றி குறிப்பிடவில்லை. இருந்தும் பாலா எதனால் இந்த கதைக்குள் மதமாற்றம் என்ற விற்பனை யுக்தியை புகுத்தினார் என சிந்திக்க வேண்டியுள்ளது. எஸ்டேட் வாழ்க்கையிலும் மதம் பெரிய தாக்கத்தையோ அல்லது மக்கள் மதம் பின்னால் போகும் அமைப்போ அந்த சமூகத்தில் அந்நாட்களில் இருக்கவில்லை.மக்கள் தங்கள் உடல் உழைப்பை சார்ந்து மட்டுமே வாழ்ந்து வந்தனர்.

வெள்ளைக்காரன் இந்தியர்களை நேரடியாக துன்புறுத்தியதை விட இந்திய தலைமைகள் மேச்திரிகள், குமஸ்தாக்கள், ரைட்டறுகள் துன்புறுத்தி இருப்பதை உணரலாம்.

டாக்டர் ஆபிராகாம் கதாநாயகனாக கதையில் இருந்தவர். இவர் கதாப்பாத்தித்திற்கு பதிலாக குறுப்பு என்ற கம்பவுண்டரை வைத்து கதையை நகத்தியிருப்பார். நாவலிலும், குறுப்பு ஒரு பெண் லம்பாடன், ஏமாற்று பேர்வழியாக குறுக்கு வழியில் பணம் ஈட்டுபவனாகவே இருதது.

அடுத்து கதை ஆசிரியரை பற்றியது. இவருடைய பிறப்பிடம் தமிழகத்தை சேர்ந்த கன்யாகுமரி. இவர் எதற்காக  கோட்டயத்தில் இருந்து வந்த மலையாளியாக டாக்டர் கதாப்பாத்திரமாக கதை சொல்லியிருக்க வேண்டும் என்று நெருடலை உருவாக்குகிறது.  

பல இடங்களில் தோட்டம் தொழிலாளர்கள் , அதிகாரிகள் மனைவிகள், வெள்ளக்காரர்களின் மனைவில்களில் கள்ள தொடர்பை பற்றி சொல்லி கொண்டே இருப்பார். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களை பற்றிய ஒரு வித கேவலமான பார்வையை கொடுக்கும் ப்டியாக பல கள்ள் தொடர்பு கதைகள்.  கள்ள தொடர்பு பற்றிய கதாசிரியரின் பார்வை அவருடைய கிறிஸ்தவம் சார்ந்த உளவியிலின் தாக்கம் என்றே கருத தோன்றுகிறது.  தோட்டம்காடுகளில் கள்ள தொடர்பு இல்லை என்றல்ல.  ஆனால் டாக்டர் சொல்லும் அளவிற்கு உடலை விற்றே தோட்ட காடுகளில் ஜீவனம் நடத்த இயலும் என்ற தொனியில் எழுதியிருப்பது கண்டனத்திற்குறியது.  ஒரு வேளை புத்தகத்தை சந்தைப்படுத்தும் யுக்தியாகவும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இது வரலாற்று ரீதியான தவறும் கூட .

ஆசிரியரை பெருமையாக எண்ணி பார்க்kஉம் படி  ஒரு வரலாற்றை பதிந்துள்ளார்.. தேயிலை தோட்டங்களின் அடுத்த சில வருடங்களிaல் இருந்த  பிரச்சினைகளை டி செல்வராஜின் புத்தகம் தேனீரில்  காணலாம். தேனீர் மூணார் எஸ்டேட் சூழலை வைத்து எழுதப்பட்ட நாவல்.  

திருநெல்வேலி வாசகவட்டம் சார்பில் இப்புத்தகம் பற்றிய விரிவுரைக்கு வாய்ப்பு கிட்டியது. புவனா அடக்கம் அனைத்து நிர்வாகிகளுக்கும்  நன்றிகள்


Recently I have gone through your article in ”Behind Woods” regarding Bala’s Paradesi & Dr. Paul Harris Daniel’s Red Tea.

Many people unaware of Dr. Paul Harris Daniel and his Novel Red Tea.

I am sharing here the details of Dr. Paul Harris Daniel, which are in my memory for long time.

·         He was a Chief Medical Officer of Peria Karamalai Group Hospital, a plantation Hospital at Peria Karamalai Estate, Valparai and was living with his family in the Bunglow provided by the Plantation Company near by Hospital.

·         My memory never lost, because I was the first born child in the said Hospital in 1956 ( 1955) and Dr. PH Daniel named me as ’ Mohan Das’, as he was staunch supporter and admirer of Gandhi.

·         In those days, the plantation life was very miserable, and every thing good or worse, was happening around the plantations were known to him.

·         He was also visiting other Plantation Hospitals, like Mudis, Paralai etc., and the doctors working there are well known to him.

·         His visits to different plantations instigated him to write the novel ‘ RED TEA’ which I read when I was in 8th Std. The narrations in the novel are still in my memory.

·         What I read in the novel were really happening in our presence.

·         My father was also working in the said hospital till his retirement and we were frequent visitors to there and know the doctor PH Daniel.

·         The photographs of Dr. PH Daniel were with us for long time and have been lost in the changing locations.

·         He started the co-operative movement of Anaimalai Staff Association at Valparai.

·         As a part of Election Campaign, he organised a programme at Valparai Ground. Mr. T M Soundararajan & LR Easwari were invited by him, in the year(not exactly known)

·         He was a faithful Christian. But never involved in Conversion of plantation workers to Christianity.

·         Always he fought for the betterment of plantation workers, health, hygienic living conditions, sanitation etc.

·         Bharat Scouts & Guides – movement was in the Plantation School ( Peria Karamalai Aided Middle School) and then Head Master Mr. P Israel worked closely with Doctor Daniel for the children of Plantation Workers.

·         After leaving the plantation, he was at Coimbatore for quite some time (ref.Personal Interview by Mr. Raviraman for his thesis ‘ Bondage in Freedom and Colonial south India Plantation Area-1797-1947”.


·       Photograph of the Hospital, where Dr. Paul Harris Daniel worked.


ஆணாதிக்கத்தின் உச்சம் தொட்ட நாவல் “உன்னை போல் ஒருவன்” - ஜெயகாந்தன்

$
0
0


x

ஜெயகாந்தன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பல நாள் ஆசை! அப்படி தான் இந்த நாவலை எங்கள் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து சென்றிருந்தேன்.

இரு நாட்களில் வாசித்து முடித்தாகி விட்டது. துவக்கம் அருமையாக இருந்தது. கதை முடிச்சுக்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மேலோங்க இரண்டு நாட்களில் படித்து முடித்தாச்சு. இதுவே எழுத்தாளர்களின் வெற்றியும். வாசிப்பவனுக்கு ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து நகத்தி கொண்டே போவது. வாசித்து முடித்த போது உப்பும் உறப்பும் இல்லா “சப்’என்று இருந்தது தான் ஏமாற்றம். 

 இதில் இன்னும் ஒரு  சிறப்பு இந்த கதை ஜெயகாந்தனால் படமாக்கப்பட்டு 1964 ல் வெளியாகி  இந்திய ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்றுள்ளது. காமராசரே கூறியிருந்தாராம்  இப்படத்தை ’அனைவரும் பார்க்க வேண்டிய படம்’ என்று. என்ன வகையில் என்ற புரிதல் தான் தெரிய இல்லை.



கதாப்பாத்திர படைப்பை எடுத்து கொண்டாலும் சிட்டி பாபு என்ற 12 வயது சிறுவனுக்கு  கொடுத்த மரியாதையில் துளி கூட தங்கம் என்ற தாய் கதாப்பாத்திரத்திற்கு கொடுக்கவில்லை. அந்த பெண்  கூட தீயாக இருந்தார் உழைத்தார் என்று புகழும் அளவிற்கு அறிவோடு இருந்தார் , இல்லை என கதாப்பாத்திரத்தை கட்டமைக்கவில்லை. தங்கம் நேர்மையை பற்றி கதாசிரியர் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு வளரும் பையனின் பொறுப்பான அம்மாவாக இருக்கும் தங்கம் தன் மகனின் மனதை மாற்றாது  இன்னொரு குழந்தைக்கு அம்மாவாகினதே சிறுப்பிள்ளைத்தனம் . சிட்டியை முகவரி இல்லாத ஒருவனுக்கு பெறுகிறார் அடுத்து அதை விட பாதகமாக ஒரு மகளை இன்னொரு முகவரியற்றவனுக்கு பெற்று கொடுக்கிறார். 
சேர்ந்து வாழ்வதில் தாலிகட்டும் முன்னே குழந்தை உருவாக்குவதில் இருக்கும் சிக்கலை  பெண்கள் இழக்க போகும் சட்டஉரிமை பாதுகாப்பை  பற்றி கூறாமல் இதை ஒழுக்கம், உணர்வு சார்ந்த நிலையில் நகர வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ; ஐந்து மாதம் கள்ள தொடுப்பாக இருக்கும் போது எழாத பல பிரச்சினைகள், ஒரு ஆண் மகனுக்கு மட்டும் மனைவியாக வாழ வீட்டிற்கு அழைத்து வரும் போது எழுகிறது. 




மகன் 12  வயதுற்கு மீறின பக்குவவும் சிந்தனையும் அடவடித்தனவும் வன்மவும். ஆனால் அம்மாவை மட்டும் புரிந்து கொள்ள இயலா மனம். நான் ஏன்  என் வீட்டை  விட்டு போகனும் என பொருளுற்கு சொந்தம் கொண்டாடும் மகன், பெற்று வளர்த்தின அம்மாவை வெறுத்து, மறந்து விடுவான். அம்மா என்ற உயிரின்  உரிமையை மறுத்து விடுவான்..அம்மாவிடம் வஞ்சம் தீர்க்க எடுத்த திட்டத்தில் புதிதாக வந்தவனை விரட்டி விட்டு, விட்டு சாப்பாட்டுக்காக வேலைக்கு போகும் அம்மாவை இகழ்ச்சியோடு பார்த்த மனநிலை, எத்தன கெட்ட வார்த்தைகள் தாய்க்கு எதிராக பிரயோகிக்கும் மனநிலை.கணவனை விட்டு விட்டு மன்னாருடன் ஓடி வந்த பக்கத்து வீட்டு அலமேலு வார்த்தையை கூட நம்பும்  மகன் அம்மாவை நம்பவில்லை மன்னிக்க வில்லை.

சிட்டியினால், கேவலமான வாழ்க்கை வாழும் கன்னியப்பன் கூட திருந்துகிறானாம். ஆனால் சிட்டியை விட கன்னியப்பன் பல இடங்களில் மனித பண்பு உள்ளவனாக மனிதர்களை/பெரியவர்களை மதிப்பவனாக  மிளிர்கிறான்.

வெறும் 16 வயதில் வாழ்க்கையை தொலைத்த  பெண் ஒருவனுக்கு ஊர் உலகம் அறிய மனைவியாக இருக்க நினைத்தது அப்படி பெரிய தவறா?
தங்கத்தின் மாணிக்கத்துடனான உறவைக்கூட உடல் சுகத்திற்கான என்பது போல் எழுதி முடித்துள்ளார் ஜெயகாந்தன்.


காதலனாகவும் மகனாகவும் அண்ணனாகவும் பல உருவத்திலுள்ள ஆணாதிக்கத்தையும் எதிர் கொண்ட தங்கம்  மரித்து போகுவது ஆணாத்திக்கததை எதிர்கொள்ளும் பெண்ணின் முடிவு மரணம் என்று அறுதியிட்டு கூறுவது போல் உள்ளது.

ஒரு பெண்ணின் அவலமான  முடிவிற்கு நேரடியாகவோ மறைமுகமகவோ காரணமான மகனுக்கோ, இடையில் வந்து சேர்ந்த மாணிக்கத்திற்கோ எந்த இடத்திலும் பட்சாதாபமில்லை. தாயை மதிக்காதவன் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு   அண்ணனாக மாறுவதுடன் அந்த கதாப்பாத்திரம் எல்லா புனிதவும் பெறுகிறது. கடைசியாக ஒரு உரையாடலையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை, “ எனக்கு அண்ணன் இல்லாததால் கட்டுபடுத்த ஆள் இல்லாததால் என் வாழ்க்கை சீர் கெட்டது. உன் பாதுகாப்பில் உன் தங்கையை கட்டுப்படுத்து  வளர்த்து என்று. 

பிறந்த குழந்தையை  சாகடித்து விட்டு; தங்கவும் மகனும் மறுபடியும் சேருவது போலவும், பழையது போல தங்கம் வேலை செய்து சந்தோஷமாக வாழ்கிறாள் என காட்டியிருக்கலாம். கதாசிரியருக்கு தங்கத்தை சாகடிப்பது தான் புரச்சி எழுத்தாக நினைக்கிறார் போலும்.

பழைக காலங்களில் வீடுகளில் 10 -12 ம் குழந்தைகள் இருந்த வீட்டில் பதின்ம வயது குழந்தைகள் வளரும் போதே தாய்மார்கள் புது குழந்தைகளை பெற்று வளர்ப்பது சாதாரணமாகத்தான் இருந்திருக்கும். மேலும் சிட்டி பாபு குடும்பம் வசிக்கும் தெரு வரிசை வீடுகளாக சராசரிக்கும் தாழ்நிலையில் வாழ்க்கை தரம் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கும். அங்கு இருக்கும் மனிதர்களே  அன்னம்மா பாட்டி மாதிரி மனது விசாலமானவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருக்க சிட்டி தாயின் மேல் கொள்ளும் உரிமை பாசம் அல்லாது ஒரு வகையான உடமைப்படுத்தலையே கூறியுள்ளது. தாய் என்றால் மகன் விருப்பத்திற்காக தன்உணர்வுகளை  மறுதலித்து மகனுக்காக வாழும் ஜீவன் என்ற புனைவு எந்த வகையான சமூக முன்னேற்றம் கொண்டு வரும்.

ஜெயகாந்தன் எழுத்துக்கள் சமூகத்தில் பெரும் தாக்கததை ஏற்படுத்தி இருந்ததவை என வாசிக்கையில், தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த கதை சொல்லி 
 எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார் என்பதே கேள்வி?

கன்னியப்பன் என்ற கதாப்பாத்திரம் கூறும் வார்த்தைகள் “ பொம்பளைகளே மோசம்டா... எங்க அம்மாவும் இப்படி தான்.... உங்க அம்மாவும் இப்படி தான். ஆனால் இந்த பசங்க துண்டு பீடி பொறுக்கி தின்னும் காவாலி பசங்க. அடுத்து சிட்டி வீட்டிற்கு போவான் தாய் கதவை திறந்து வெளியே வருவார். அவள் தலையில் சூடியிருக்கும் மல்லிகை பூ மணம் இவனுக்கு நாற்றமெடுப்பதாக தோன்ற்றும், ஒரு குழந்தையை வகிக்கும் அவள் வயிறு அருவருப்பை கொடுக்கும். 

ஜெயகாந்தன் போன்ற முற்போக்கு வாதிகள் இந்த மனநிலைக்கு பதிலான ஒரு மேன்மையான மனநிலையை தங்கள் கருத்துக்களை இளம் சமுதாயம் மேல் பரவ விடவில்லை. இதனால் தான் பெண் உடலை இன்றும் இச்சையோடும் அருவருப்போடும் பொருளாகவும், அணுகுவதை தவிற்து பெண் உடலுக்கு பின் இருக்கும் மனதை இது போன்ற எழுத்தாள்ர்கள் தன் எழுத்து ஊடாக வெளிப்படுத்தவில்லை. 

மாணிக்கத்துடன் சயனித்து விட்டு, தங்கம்  மனநிலைகளை எழுத்தாளர் விவரித்திருப்பார். எல்லாம் ஒரு வகையான தற்கொலைக்கு சமமான் எதிர்மறை எண்ணங்களால் தங்கம் பேசிக்கொண்டிருப்பார், ஆனால் மாணிக்கமோ சுகத்தின் உச்சியில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருப்பான். அந்த சுயநலம் பிடித்த பொறுப்பற்ற மாணிக்கவும் அம்மாவையும் பையனையும் சேர்த்து வைத்து புனிதராக மாற்றியிருப்பார் ஆசிரியர். பக்கத்து வீட்டு அலமேலு கூட குழந்தையை கையில் வாங்குவதுடன் புனிதத்தன்மை அடைந்திருப்பார். 



ஜெயகாந்தனின் உண்மை வாழ்க்கையில்  இரு மனைவிகள், இரு மகள்கள் என  வாழ்ந்து வந்தவருக்கு தங்கத்திற்கு இரண்டாம் கணவர் என்ற விருப்பதை தன் கதையூடாக கரி தேய்த்து பெண் வாழ வேண்டும் என்றால் பெண் ஒழுக்கம் என்றால் முகவரி தெரியாத ஒருவனுக்கு பெற்ற மகனாக இருந்தாலும் மகனுக்கு பணிவிடை செய்து சொச்ச காலத்தை கடந்து போக வேண்டும் என்ற உபதேசத்துடன் கதை முடிகிறது. 

ரஜனிகாந்த் நடிப்பில் தன் திரைப்படங்களில் உரையாடல்கள் வழி எப்படி பெண்களை ஆண்களுக்கு தாழ்ந்த கதாப்பாத்திரங்களாக கட்டமைத்தாரோ அதையே தான் ஜெயகாந்தனும் செய்து வந்துள்ளார். 



Article 0

$
0
0
சரோஜா அத்தை. என் குழந்தைப்பருவத்தில் நான் சிரித்து மகிழ்ந்து தங்கிவிளையாடிய  ஒரே ஒரு இடம் அத்தை வீடு.

அத்தை, நாரயணன் மாமா ராணி, றீனா அக்காக்கள் அருள்  அத்துடன் என் தம்பி தங்கை,சித்தப்பா பிள்ளைகள் மூன்று, பெரியப்பா மகன்கள் 3, சில போது ஊரில் இருந்து  மாமி மகன்கள்,  மாமா வீட்டு சொந்தங்கள் என அத்தை வீடு எப்போதும்  விழாக்கோலம் தான்.

அத்தை கணவர் தேயிலை தோட்ட அதிகாரி என்பதால் காட்டுக்குள் வீடு, வீட்டில் இரு உதவியாளர்கள், 4-5 பசுக்கள், கோழி, வாத்து,  பூனைகள்  டைகர் நாய்,அருள் வளர்க்கும் முயல்,கிளி  என எப்போதும் பெரும் கும்பல்.

உணவு நேரம் என்பது தோட்டத்தில் இருந்து வெட்டிய வாழை இலை, சோறு, கோழிக்கறி, கறிப்பொரியல் அவியல், தைர், சாம்பார் , அப்பளம், ஊறுகாய் பாயசம் என கொண்டாட்டம் தான்.

வீட்டில் பல அறைகள். அதில் ஒரு அறை நாங்கள் எங்கள் உடைகளை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் அங்கு தான் பேய் இருக்கிறது என பேசிக்கொள்வோம். நடு அறை, படுக்கை அறை, முன் விருந்தினர் அறை , தேயிலை வேர் கொண்டு செய்த செருப்பு ஸ்டான்டு, வராந்தாவில் நாய் டைகர் தன் அதிகாரத்தை நினைவு படுத்தி கொண்டு கிடக்கும் இடம் என அந்த வீடு ஒரு  சொர்க்கம் தான்.

மாமாவிற்கு செடிகள் மேல் விருப்பம். அங்கு தான் விதவிதமான ஜீனியா பல வண்ணங்களிலான  டாலியா , கொய்யா மரம்  வீட்டோடு நிற்கும் சாமங்கா மரம் பலா மரம் என வீட்டை சுற்றி செடிகள்.

இத்தனை வேலைக்கு அப்புறம் சாப்பாட்டை முடித்து குட்டி தூக்கம் போட்டு எழுந்ததும் காப்பி பலகாரம் சாப்பிட்டு விட்டு மாமா மதியம் எப்போது மஸ்டர்டு ஆபீஸ் போவார் என காத்திருப்போம்.

அவர் நாலு மணிக்கு கிளம்பி போன பின்பு  அத்தை நரி, நாங்கள் கோழிகள் என வேடம் போட்டு ஓடி விளையாட்டு தான்.. அத்தை நரி என்பதால் மாமாவின் கால் சட்டை,  மழை கோட்டு , தொப்பி அணிந்து எங்களை விரட்டி வருவார்.
 6 மணிக்கு மாமா வீடு திரும்பும் முன் முகம் கழுவி பவுடர் போட்டு   பூவெல்லாம் சூட வைத்து சோபா , கதிரைகளில் கதை புத்தகங்களுமாக இருந்திடுவோம்.

அத்தை சொன்ன எத்தனை எத்தனை கதைகள். அவர் குரல் ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்வதும், நடித்து காட்டுவதும் இன்று நினைத்தால் எவ்வளவு அழகான குழந்தை பருவத்தை என் குழந்தைகளுக்கு கூட கிடைக்க இயலாது இழந்து விட்டேன் என பெரு மூச்சு கொள்கிறேன்.

இரவு படுக்க போகும் முன் ஜெபம் செய்து விட்டு தூங்க வேண்டும். மாமா ஜெபத்தை ஏறெடுத்து, பாட்டு பாடி அது போய் கொண்டிருக்கும். அவர் கண்ணை மூடி ஜெபிக்கிறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் பிள்ளைகள் கண்ணை திறந்து மாறி மாறி நோக்கும் போது எங்களுக்கு முன்னே அத்தையும் கண்ணை திறந்து எப்போது மாமா நெடிய ஜெபத்தை முடிக்க போறாரோ என செய்கை காட்டி கொண்டு இருப்பார்.

அந்த வீட்டில் தான்  எப்போதும் வெற்றிலை செல்லத்துடன் பைபிள் வாசித்து கொண்டிருக்கும் என் அப்பா பாட்டி ரத்னா பாய், என் அத்தையின் மாமியார்: ஒரு வயதான வட்ட வடிவ முகம் கொண்ட பாட்டியையும்  கண்டுள்ளேன். என் அம்மா பாட்டியும் அத்தை வீட்டில் வந்து தங்குவார்.

அத்தை கடைகுட்டி என்பதால்  நாலு அண்ணன்களும் அத்தையை பார்க்க தோட்டத்திலுள்ள பொருட்கள் கொடுக்க வந்து போய் கொண்டு இருப்பார்கள்.
டவுணில் கல்லாப்பெட்டியை விட்டு நகராத என் அப்பாவும் போகும் இடம் அத்தை வீடு தான். 
அத்தை வீட்டிலிருந்து திரும்புதல் என்பது எனக்கு பிடிக்காத விடையம் என்பதால்; ஒரு நாள் பிந்தி என் வீடு  வந்து சேரும் எனக்கு எங்க அம்மா நல்லா வெளக்குமார் பூசையும் வைத்திருப்பார்

ராணி அக்காவிற்கு பூப்பெய்து நிகழ்வில் கல் பட்ட தேனிகளாக அந்த கூடு கொஞ்சம் கலைந்தால் கூட ராணி அக்கா கல்யாணம் வரை அந்த தேனிக்கூட்டம் இருக்கதான் செய்தது.

5 வருடம் முன்பு அத்தையை சந்தித்து வந்த போது
 இப்போதும் அதே குழந்தைத்தனத்துடன்,  அதே குறுகுறுப்புடன் பார்வையுடன்,நோய்களையும் துணைக்கு வைத்து கொண்டு  சிரித்து பேசி அத்தை ஒரு மறக்க இயலா என் தோழி.!

90 ஸ் தோழமை!

$
0
0
27 வருடங்களுக்கு பின்பு சந்தித்த பள்ளி தோழமைகள்.

 நாங்க முகம் பார்த்து பேசினது நாலாம் வகுப்பு வரை தான். ஏழாம் வகுப்பு வரை நீயா நானா என சண்டையிட்டு, மாறி மாறி ஆசிரியர்களிடம் மூட்டி விட்டு அடிவாங்கி கொடுத்த நாட்கள்.

 அடுத்த 3 வருடம் ஒளித்தும் மறைந்து பார்த்தும், பார்த்தும் பார்க்காதது மாதிரி,  கேலி பேசி ரோட்டின் இருவோரம் நடந்து சென்ற நட்புகள்.  பெண்களுக்கு ஒரு வழி என்றால் ஆண் மாணவர்களுக்கு இன்னொரு வழி . அவன் வகுப்பை கடந்து போனால் கூட, கொஞ்சம் கூட எட்டி பார்க்காமா கெத்தா எட்டு வைத்து நடக்க...
என்னடா பெரிய இவளுகளாட்டும் திமிறா போறா,
அவ பாவம்டா, அவ கூட போறா பாரு....
பெரிய உலக அழகிக....
அது விடு உனக்கு கிடைத்த காதல் கடிதத்தை எடு என ஒன்றாய் இருந்து வாசித்து கொண்டு
அந்த ஓட்டை ஓலப்பள்ளியில் இருந்து எட்டி பார்த்து கொண்டிருந்த மாணவர்கள்.

என்னடா இந்திரா காந்தி எப்படி இருக்கா? போம்மா இப்ப இதை கேட்டுகிட்டு. ஏன் பொண்டாட்டிட அடி வாங்கி தராம விட மாட்டே....

ஏய் அந்த தேயிலப்புர ஷெட்டு தானா....
 அப்புறம். என்ன அப்புறம். அவ வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டா
அப்போது அதையும் தெரிந்து வைத்திருக்க
ஏய் துபாயில் இருந்து வந்த சாபு சொன்னாமா
அப்ப நீ கேட்ட
விடுமா தாயே...
 அப்புறம்... நீ என்னடா படிக்கும் போது கிறிஸ்தவ சாமியாரா போகப்போறேன்னே....
யே ...அது விடு.
 இவ தான் என் மனைவி , இரண்டு ஆண் பிள்ளைகப்பா அடுத்து ஒரு பெண் பிள்ளைக்காக ஏங்கிட்டு இருக்கோம்.
என்னடா அனியாயம்... இனியும் ஏங்கிட்டு இருக்கியா ,
 டே கொல்லாதடா  நாங்கல்லாம் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கிட்டு இருக்கோம்.

உன் விரலை காட்டு. எங்க வீட்டுக்கு டுயூஷன் படிக்க வந்த போது தானே தையல் மிஷனில் கைய விட்ட.
ஆமாப்பா இன்னும் அந்த தளும்பு இருக்கு பாரு...

என்ன மோனி ஒல்லி குச்சானா வெள்ளை வேட்டியை  ஒரு பக்க தும்ப மட்டும் பிடித்து கொண்டு ஈ ....ன்னு எங்க வகுப்பையே பார்த்துட்டு நிப்பயே?
நீ போம்மா  அத நினைக்குத மாதிரியா நிலைவரம். பொண்ணு காலேஜுல படிக்கா பையன் + 2 வில். .....
மோனி அந்த ரகசியத்தை தான் சொல்லி தொலையேன்.
அது அந்த உங்க வகுப்புல இருந்தாளே நெற்றில சந்தனம் வச்சு தலை முடியை விரிச்சு போட்டு வருவாளே....
அவ பேரு தான் மறந்திட்டு....

பொய் சொல்லாத அந்த ஷீலப்புள்ளை தானே?

நம்ம வகுப்புல அமர காதலுமா ஒருத்தன் இருந்தானே . சாரிடம் அடி வாங்குனானே..
அவனா....அவந்தான் குடிச்சு குடிச்சே செத்து போயிட்டானே
போன வருடம்.
இஸ்மாயில் தான் என்னன்னா கனவோடு இருந்தான். ரொம்ப கஷ்டபட்டு பட்டம் முடித்து அரசு தேர்வுலையும் தேர்வாகி ....அழகான இரண்டு சின்ன  பிள்ளைகளை விட்டுட்டுல்ல அந்த விபத்துல போயிட்டான்.
உன்னை தான்டா மறக்க முடியாது நீ மொறைக்கா நான் மொறைக்கா அந்த  பள்ளிமாணவர்கள் இலக்ஷன்ல என்ன தோற்கடிக்க என்னமா வேலை பார்த்தே...
அதை விடும்மா
அதை சமரசம் செய்ய தானே ஆரஞ்சு மிட்டாய் கொண்டு உன் கையில தந்தேன்.
இப்பவும் கவிதை எழுதுதையா
காதல்கடிதம் எழுதி கொடுத்து மாட்டினீயே
ஆமாம்மா உங்க கூட்டத்தில இருந்தவா தானே?
அப்புறவும் எழுதி கொடுத்து கொண்டு தான் இருந்தேன்... ஆனால் வேறு பிள்ளைக்கு

என்னம்மா இப்படி குண்டாயிட்டா?
மெலிய வீட்டுல மிஷின் வாங்கி போட்டுருக்காராம் கணவர், துபாய் பயணம் அழைத்து போகிறேன்னு சொல்லியிருக்காராம்.
ஆளுக்கு வேலை அப்புறம் தூக்கமாம்
என்னடி மாயா ஜாலம் 27 வருடத்திற்கு முன்பு பார்த்தது மாதிரியே இருக்கிறீக
என்ன மந்திரம்ப்பா...
உன் பொண்ணு உன்னை விடையும் அழகா பாடுதா
உங்க அப்பா மகிழ்ந்திருப்பாரே
நம்ம டான்ஸ் போட்டிக்கு உங்க அப்பா பாடுவார் பாரு இன்னும் மறக்கல

ஏன் அஜி வரலையாம்
அவனுக்கு லீவ் கிடைக்கலையாம்ப்பா
அன்று யாரிடவும் பேசாது மேரிகூடவே நடந்து போவாளே அவளாப்பா இது...நம்பவ முடியல
 அதுல ஒருத்தன் ஒருத்தியிடம் உனக்கு ஒரு உடாய்பு இருந்ததாமே
இது எவன்டா கிளப்பி விட்டது
யே....உண்மையை சொல்லு...
மனசுல கொஞ்சூண்டு அந்த ஓரத்துல
அவனுக்கு போன போடு கேட்டா போச்சு
அவனும் வீடியோ காள்ல வந்தான்
என்னடா இவனுக எல்லாம் உனக்கு காதல் இருந்துன்னு சொல்லுதானுக...
ஐய்யோ அம்மா அப்படி ஒன்னும் இருந்தது இல்லையேன்னு தலைதெறிக்க ஓட
நாங்ல்லாம் கேட்டவன பார்த்து இப்ப நம்புனையா கேனப்பயலேன்னு திட்ட

றீனா..... நம்ம ஆறாம் வகுப்புல நீ சொன்ன கதை ஞாபகம் இருக்காடி....

எந்த கதை?....அந்த கதையா
விடுப்பா அதை போய் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க...
நம்ம அப்படியே பருந்தன் பாற போவோமா. நம்ம தோழி திரேசாவிற்கு ஆச்சரிய விசிட் கொடுப்போம்.
நீயும் நானும் சண்டை பிடிக்கது கட்சிக்கு தானே
இப்போது எந்த அரசியலில் இருக்கே?

உனக்கு தெரியுமே நான் கேஎஸ்யூன்னு பின்பு
காங்கிரசில் இருந்தேன் இப்போது எந்த கட்சியிலும் இல்லை
நீயும் அஜியும் தானே முகநூலில் சண்டை போடுதீக
அவன் தான் கம்னீஸ்டுன்னு பேசுவான்ப்பா
ஆர்மி அனிலிடவும் வாக்கவாதம் தான்
அவன் சரியான சங்கி வெறியன்ப்பா
மைசூரில் இவனும் பிஜெபி
ஜிம்மி நீ எந்த கட்சி ?
நான் ஜெயிக்குத கட்சியில இருப்பேன்மா
நீ எப்பவும் அப்படி தானே
ஆமாப்பா பிழைத்து போக வேண்டாமா
பள்ளியில் படிக்கே ஒரே சட்டையை வைத்து கொண்டு கலர் பொடியில் முக்கி காய வைத்து கலர் கலரா சட்ட போட்டு வந்தவனாக்கும்
இப்போது நான் இருக்கும் வீடு கோடிக்கு பெறும்
ஷூபா உன்னை பார்த்தால் நம்ம அம்மினிக் குட்டியம்மா டீச்சர் மாலிரி இருக்க....
விடுங்கடி
கடந்த வருடம் இதே நாள் காலையில் இருந்து மாலை வரை 90 Batch  இவ்வாறாக பேசியும் சிரித்தும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

அன்று, நாங்க பிரிந்த போது இருந்த வயதில் இருந்த பிள்ளைகள் நாங்கள் மகிழ்வதை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்

எங்களை கடைசிவரை சூரல் கம்பின் துணையுடன் பேச ஏன் பார்க்கவே அனுமதிக்காது இருந்த லக்ஷ்மி குட்டியம்மா முதன்மை ஆசிரியர் இருந்திருந்தால் இந்த பச்ச பாசமலர் புள்ளைகளையா புரிந்து கொள்ளாமலே இருந்தோம்ன்னு நிச்சயமாக வருந்தியிருப்பார்கள்.

செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள். 1920- 2016

$
0
0

தனதுதாயாரின்நினைவைபேண,மகள்காலச்சுவடுபதிப்பகம்ஊடாகவெளியிட்டபுத்தகம்இது. பதிப்பாசிரியர்அம்பை. 2017 ஆம்ஆண்டுவெளிவந்துள்ளது.கதைஆசிரியைஅமைதியானஒதுங்கியகுணம்படைத்தவர். ஆதலால்தங்களுக்குஅவர்உள்ளக்கிடக்கையைபுரிந்துகொள்ளவில்லைஇன்னும்அங்கீகரித்துஇருந்திருக்கவாம்எனநாலாவதுமகள்குறிப்பிட்டுள்ளார்

ஒருபெண்தனது 16 வதுவயதில்கொஞ்சம்வசதிவாய்ப்புகுறைந்தநாகர்கோயிலில் ( கரமனை) வீட்டில்  இருந்து வசதியானவழக்கறிஞர்வீட்டில்திருமணமாகிதிருவனந்தபுரம்வந்துசேர்கிறார். நாலுகுழந்தைகளுக்குதாயார்பொறுப்பானஅம்மா , மனைவியாகவாழ்ந்தவர்தன்னுடையமணவாழ்க்கையைபற்றிதான்எதிர்கொண்டபிரச்சினைகளைஎழுதிவைத்துள்ளார்.

இப்புத்தகம்ஊடாகநாம்அறிவதுபிராமணர்களின்வாழ்க்கைசூழல் , கூட்டுஜீவிதம், அவர்கள்பண்பாட்டுதளஆசாரங்கள் , உறவுமுறைகள் , குடும்பஅமைப்பின்மேல்சாதாரணபெண்கள்எழுப்பும்கேள்விகள், குடும்பஅமைப்பு,உற்றார்உறவினர்உறவுகளால்  பெண்கள்பாதிக்கும்விதம்.

சுவாரசியமானசிலநிகழ்வுகளைஅறியமுடிகிறது. பருவம்எய்வதற்குமுன்பேதிருமணம்ஆகிகணவர்வீடுசெல்லும்வழக்கம்இருந்துள்ளது. பரும்ஆனபின்புசாந்திமுகூர்த்தம்போன்றஇத்தியாதிசடங்குகள்வைத்துள்ளனர்.அந்த இடைப்பட்ட காலம் கணவரை ஒளிந்து பார்த்து பழகுவது.
திருமணம்ஆனபுதிதில்கணவருக்குகாசநோய்வந்ததுள்ளது. , வீட்டிற்கு விருந்துக்கு வந்த வடிவுஎன்றதோழிவிதவையாகும்நிகழ்வைபற்றிபயமூட்டும்தகவல்கள்சொல்ல சொல்லபயந்தேபோய்விட்டார். வாழ்நாள்முழுதும்விதவைநிலையை பற்றிசிந்திப்பதும்,விதவைநிலைஅவரைதுரத்துவதுமாகஇருக்கிறது.
விதவைகளைபற்றிபலஇடத்தில்குறிப்பிட்டுவிசனப்பட்டுள்ளார். விதவைகளைநடத்தும்விதம்பற்றிபல இடங்களில் எழுதியுள்ளார். தனதுஅம்மா , பாட்டி , தனதுதங்கைவிதவையானதும்அவர்கள்மனப்பாங்கையும்பலஇடங்களில்தெளிவுப்படுத்தியுள்ளார்.  தனதுபாட்டியின்தெளிவான கருத்தும் அவருடைய சுதந்திரமான   சிந்தனைக்கு உதவுகிறது. இருப்பினும் அதுஒருபய மனோபாவமாகவே (போஃபியாகவே)வாழ்க்கை நெடுகதுரத்தியுள்ளது.
நல்லநட்புகளைபேணஇயன்றிருக்கிறது. சினிவாவிற்குநண்பிகளுடன்தனியாக சென்றுவந்ததுதனக்குகிடைத்தபணத்தைதன்னுடனேவைத்திருக்கஇயன்றுள்ளது. ( இன்றையவேலைக்குபோகும்பெண்கள்கணக்கில்பணம்உள்ளதா , என்றும்கேட்டால்விளங்கும்இன்றையநிலைபற்றி)

அடுத்துசெல்லம்மாதிருமணம்முடிந்துவந்தவீடுஒருபெரும்கூட்டுக்குடும்பம். மாமனார்பெயர்பெற்றவழக்கறிஞர்அவர்மனைவிஇறந்ததும்இரண்டாவதுஒருபெண்ணைமணம்முடிக்கிறார். அந்தஇரண்டாம்மனைவிக்கும்மாமனார்மகளுக்கும்ஒரேவயதுஎனசங்கடப்படுகிறார். விதவைநிலைபூண்டதும்ஆண்கள்உடன்திருமணம்முடிப்பதும்பெண்களுக்குசமூககட்டுப்பாடுஉள்ளதையும்கேள்விஎழுப்புகிறார்.
பிரபல பின்னனி பாடகி ஜானகியை முன் நிறுத்தி ஒரு கேள்வி எழுப்புகிறார், பின்பு அவரே ஒரு முடிவிற்கும் வருகிறார்.ஜானகி தனது கணவரை இழந்ததும் வெள்ளைச்சேலை கட்டி கொண்டு  பொட்டு வைக்காது நிகழ்ச்சிகளுக்கு பங்கு பெறுவதை எதனால் என்று சிந்ஹிப்பதும் இந்து மதத்தொல் தான் இது போன்ற பாகுபடு என சாடுகிறார். இவருடைய இந்து மத எதிர்ப்பை இவர் மகன், மகள் ஏற்று கொள்ளவில்லை என்றும் வருந்துகிறார்.

அடுத்துபுகுந்தவீட்டிலுள்ளநாத்தனாரைபிடிக்கவேஇல்லைஇவருக்கு. நாத்திநாத்திஎனபலஇடத்தில்குறிப்பிட்டுள்ளார். நாத்திதான்தன்பெரியமகளையும்மகனையும்வளர்த்ததாகவும்அதனால்அந்தகுழந்தைகள்தன்னைமதிக்கவில்லைஎனும்வருத்தம்கொள்கிறார்.

அடுத்துசெல்லம்மாவின்பிறந்தவீடு .அங்கு 7 பிள்ளைகள். மீனாதிருமணமாகிவிதவையாகிதந்தைவீட்டில்திரும்பிவந்தவர். செல்லம்மாவைதிருமணம்முடித்துகொடுப்பதுமாப்பிள்ளைபெரியபடிப்புபடித்தவர்வெளிநாடு, வெளியூர்போய்மகளுக்குநிறையநகைநட்டுபோட்டுஆடம்பரமாகவைத்திருப்பார்என்பதுதான். தாய்க்குஏமாற்றம்கொடுக்கிறது. மகளைதரம்கிடைக்கையில்எல்லாம்சுதாரித்துதனிக்குடித்தனம்போகபரிந்துரைக்கிறார்கள், புகுந்தவீட்டுஜெனங்களைவசைபாடுகிறார்கள். தன்மருமகன்அப்பாபிள்ளையாகஇருப்பதில்வருத்தம்மட்டுமல்லதன்மகன்இன்னும்சாமர்த்தியமாகவாழவில்லைஎன்றதவிப்பும்உள்ளது. இயன்றளவுமகள்வீட்டிற்குபோவதைதவிற்கின்றனர். குறிப்பாக தனது கணவர்  மரணப்பட்டபின்புமகள்வீட்டிற்குவருவதைகுறிப்பாக,நாத்தனார்சீத்தாமுகத்தைஎதிர்கொள்ளவிரும்பவில்லை.
ஒருமுறைசெல்லம்மாதம்பதிகள்வீட்டில்மகனுக்குபூணூல்இடும்விருந்துவிசேஷம். தன்தாயாரைஅழைக்கிறார். தாயாரோநான்விதவைக்கோலத்தில்உன்வீட்டில்காலெடுத்துவைக்கமாட்டேன். உன்நாததினார்இளக்காரமாகநடத்துவார்என்கிறார். தாயைஎவ்வளவோபரிவாகஅழைத்தும்அவர்பணத்தைகொடுததுஅனுப்பிவிடுவார்.
அடுத்துதன்நாத்தனார்சீத்தாவைஅழைக்கவருவார். அவரோஉன்அம்மாவருவாஎன்னால்வரஇயலாதுஎன்பார். உடனேநாத்தனாரிடம் , எனதுஅம்மாவரமாட்டார்எனஅடித்துசொல்வார்.

அம்மாவும்வரவில்லை.  செல்லம்மா வீட்டில் நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் தூங்க கிளம்புவர்கள். தன் கணவரிடம் என் அம்மா வரவில்லை என்பதை ஏன் நீங்கள் பெரிது படுத்தவில்லை என கணவரிடம்  சண்டைபிடிக்க வருவார். அவரோ பொருட்படுத்தாது என்க்கு தூங்கபோகவேண்டும் நாளை வழக்கு மன்றம செல்ல வேண்டும் என்பதை கூறி ஒதுங்கி கொள்வார்.  அன்றைய இரவு கணவர் எங்கு படுத்து தூங்கினார் என் குறிப்பிடுகிறார்.   அடுத்த ஒரு முறை ஒரே திரைப்படத்தை தோழிகளுடன்  இரண்டாவது முறையும் பார்த்து விட்டு திரும்புகையில் மாமனார் வசைபாடுவார். கணவரிடம் முறை இடுகையில் நீங்கள் ஏன் உங்கள் அப்பாவை திட்டக்கூடாது என்கிற போது நீ திருப்பி அப்பாவை திட்டு என்னால் என் அப்பாவை திட்ட ஏலாது. உங்க அப்பனை என்று கதைக்காதே என் கண்டித்து விட்டு செல்வார்.
செல்லாம்மாவிற்கு கணவர் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்த்தும் நாம் ஏன் தனிக்குடிதனம் போகக்கூடாது என கெடுபிடியாக நிற்பதும் அல்லது தன்னை நாகர்கோயிலில் தனியாக குழந்தைகளுடன்  குடியமர்த்த கூறுகையில் அது ஒரு போதும் சரி அல்ல என்று கணவர் மறுத்து விடுவதும் துக்கம் கொள்ள செய்யும்.

நல்ல துணிமணிகள் இல்லை என ஒருபுறம் கூறுகையில் 1500 ரூபாய் கையில் வைத்திருந்தாலும் 20 ரூபாய்க்கு  உடை எடுக்கும் சிக்கனக்காரி செல்லம்மாவையும் காணலாம்.
நாத்துனார் செய்முறை கேட்டார் என தனது தாயிடம் எனக்கு இரண்டு சவரன் கல் மாலை  செய்து தரக்கூறுவார். தாயோ உனக்கு இளைய பிள்ளைகள் இங்கு உண்டு. என்னால் தர இயலாது எனக்கூறி செல்லம்மாவிடம் உள்ள நகையை உருக்கி கழுத்து மாலை செய்து கொடுப்பதும். சில நேரம் இது என்ன செல்லம்மா? என கேட்க வைத்திடுவார்.   பின்பு செல்லம்மாள் ஒரு தாலியை தொலைக்க,  உருக்கி கல் மாலை செய்தது கணவர் வீட்டில்ல் தெர்ந்து கடிந்து கொண்டாலும் மாமியார்  தனது மாலையை கழுத்தில் அணிய கொடுத்திருப்பார்.  பின்பு செல்லம்மா தாயாரே நாலு சவரனுக்கு மாலை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மகள் திருமணம் முடிந்த் பின்பு தாயார் கற்பவதியாகுவதும் தனக்க மகளுக்கும் தன் தங்கைக்கும் ஓரிரு மாதங்கள் இடவெலியுடன் வள்ர்வதும் சுவாரசியம். செல்லம்மா திருமணம் முடிந்ததும் இரு பிள்ளைகள் பிறக்க அந்த பிள்ளைகளுக்கு 21, உம் 19 உம் வயது இருக்கையில் தனது நாலாவது பிள்ளையை வேண்டும் என்றே பெற்று வளர்ப்பதும் அவருடைய மாற்றத்தை காட்டுகிறது. 16 முழம் மடிசார் சேலையில் இருந்து 9 முழம் தெலுங்கு சேலைக்கு மாறினதை  குடுமப உறுப்பினர்கள் முறுமுறுப்பையும் தாண்டி பெரும் சாதனையாக குறிப்பிட்டுள்ளார். 9 முழம் சேலையை கொள்ளாது தனக்கு வாசிக்க  உள்ளது என் கடந்து சென்றது பெரும் வலியை கொடுக்கிறது.

செல்லம்மாவின் மகள் அணிந்துரையில் தனது அம்மா தனது அத்தையை இத்தனை குறை கூறியிருந்தாலும் உயிருடன் இருக்கையில் தன் செயலில்  வெளிப்படித்தினது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செல்லாம்மாவின் உள் மனதில் வேண்டிய பரிவும் காதலும் அரவளைப்பும் கணவரிடம் கிடைக்காததும்  கணவர் வீட்டார் தன்னை மதிக்காததும் பெரும் துயராகவே இருந்துள்ளது.
40 வயதிற்கு மேல் கார் வசதியான வாழ்க்கையை அம்மா பகிர்ந்து கொள்ளாததையும் மகள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார். செல்லம்மாவிற்கு தான் நல்ல வெள்ளையாகவும் தன் கணவர் கறுப்பாகவும் இருந்ததும் கொஞ்சம் மன் வருத்தம் தான். தன் கணவர் வீட்டாரை தவிர்த்து மற்றவகள் தன்னை அழகு என புகழ்வதையும் ரசிக்கிறார். தன அழகு அடையாளம் சார்ந்து தான் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் கணவர் தான் விரும்பினது மாதிரி தன்னை  மட்டும் நேசிக்கும் தனக்காக வாதாடும் கணவராக இருக்கவிலலி என்பதும் அவருக்கு ஏமாற்றம் தான்.

புத்தகம் முழுக்க செல்லாம்மாவின் மனத்தாங்கல்களூம் கேள்விகலூம் வருத்தங்கலும் தான்.
செல்லாம்மாவிற்கான நல்ல சுதந்திர சூழலும் பரிவான சூழலும் இருந்தும் சில வரட்டு பிடிவாதங்களால் வாழ்க்கையை அன்ய்பவிக்காது கேள்வியோடே நகத்தி சென்ற வாழ்க்கை அத்துணை ஆரோக்கியமான முன்னெடுப்பா என சிந்திக்க வைக்கிறது.
செல்லம்மாவின் அம்மா தன் மகளுக்கு கொடுக்கும் அறிவுரையை குறைத்திருக்கலாம். பல இடங்களில் செல்லம்மாவை ஒரு தோல்வியின் , தியாகத்தின் கதாப்பாத்திரமாக மாற்ற அவருடைய அம்மாவின் பேச்சுக்கள் மறுக்க இயலாது.
செல்லம்மா தனது கணவர் 86 வயதில் மரிக்கும் வரை  கணவருடன் வாழும் சூழலும் கணவர் இறந்த பின் தனியாக தனிமையாக வாழ விருப்பபட்டதும் தனுடைய மகன் தயவில் பாதுகாப்பில் இருக்க விரும்பாது கணவர் சொத்து முழுதும் தன் பெயரில் இருந்ததால் பயணங்கள் , பிடித்த நட்புகள் என வாந்து மறைந்துள்ளார் என்பதை மகளின் எழுத்தில் இருந்து புரிந்து கொள்ள இயலும்.



ஆடும் கூத்து

$
0
0
 அன்னைஅன்னை,ஆடுங்கூத்தைநாடச்செய்தாயென்னை". பாரதியாரின் தெய்வப்பாடல்

"ஆடும்கூத்துமலையாளஇயக்குனர்"டி. விசந்திரன்இயக்கத்தில்சேரனின் தயாரிப்பில்  2005 வெளியான திரைப்படம்.  37 வதுசர்வதேச திரைப்படவிழாவில், 2009 ல்தேசியவிருதுபெற்றது. நவ்யாயர்  மிகமுக்கியகதாப்பாத்திரமாகநடித்திருப்பார்.  


ஒரேகதையில்மூன்றுகாலவெளியில்நடந்த,மூன்றுகதைகள்,ஒரேநேர்கோட்டில்சிலகதாப்பாத்திரங்களுடன்சந்திக்கும்கதை.

கதைதுவக்கத்தில்கொஞ்சம்துவண்டது.அரைப்படத்திற்குமேல்விருவிருப்பாகநகர்ந்தது. டாக்டர்கதாபாத்திரம்-மலையாளநடிகர்ஜகதீஷ்ஸ்ரீகுமார்எரிச்சல்அடையசெய்தது., தேவையேஅற்றஅந்தகல்லூரிதமிழ்பேராசிரியர்கதாப்பாத்திரம்எதற்குஎனஇல்லை.

கதையின்பிரதானபாத்திரம்மணிமேகலைஒருதுணிக்கடைவியாபாரியின்கல்லூரியில்படிக்கும் துடுக்கானபெண்.
மணிமேகலைக்குசிலகதைகள்காட்சிஉருவத்தில்தெரியஆரம்பிக்கிறது.  புத்திபேதலித்ததுஎனஉளவியல்மருத்துவரிடம்கொண்டுசெல்கின்றனர்மணிமேகலையின்பெற்றோர்
அந்தஆள்செயல்பாடுகள்மருத்துவர்மாதிரிஅல்லாதுமந்திரவாதிமாதிரிவடிவமைத்துள்ளனர்.  இயக்குனர்அதைபகடியாககருதினாரோஎன்னவோ.

மணிமேகலைசோற்றைகட்டிக்கொண்டுமலை-மேடுன்னுகிராமசிறார்களுடன்நடந்துதிரிந்துவீடுஅணையும். அவுங்கஅம்மாவாகபழம்பெரும்நடிகைரேகாநடித்திருப்பார்கள். வீட்டுக்குகட்டும்சாறிகள்எல்லாம்கல்லூரிபேராசிரியர்கள்கட்டுவதுமாதிரியானகாட்டன்சேலையில்வலம்வருகிறார். வீட்டுக்குள்ஒரேபெண்கள்பட்டாளம்தான்
சட்டப்போடாதசுகுமாரிபாட்டியிலிருந்துகணவர்அற்றஇருஅத்தைகள்வாழாவெட்டியாகவீட்டிலிருக்கும்மணிமேகலைஅக்கா, அக்காவின்வீணாப்போனகுடிகாரகணவர்பாண்டியராஜன்.பாட்டி, மூன்றுபெண்களும்வீட்டுவேலைகளைசெய்துகொண்டுதட்டுசாமான்கள்மாதிரிவீட்டில்ஒதுங்கிகிடப்பார்கள். பெரியபங்களாவீட்டில் மணிமேகலைமட்டுமேவீட்டின்இளவரசிமாதிரி வாழ்கிறார்.  (காட்சியில்நமக்குவிவரிப்பதைஅப்படியேஎழுதியுள்ளேன்.)
வீட்டுக்குள்ளேமுறைமாப்பிள்ளையும்வளருவார்.

தமிழ்கல்லூரிபேராசிரியர்திருட்டுமுழியுடன்மணிமேகலைவீட்டுக்குவருகிறார். மணிமேகலைகிராமத்தைசுற்றும்பிள்ளைஎன்பதால்பேராசிரியரைஅழைத்துக்கொண்டுசுற்றிவருகிறார். அந்தவயதானபேராசிரியர்வெடித்தபருத்திமாதிரிஇருக்கும்மணிமேகலையிடம்தன்காதலைவெளிப்பெடுத்துவார். மணிமேகலைசிரித்துபோட்டுகடந்துபோயிடுவாள். அடுத்துபேராசிரியரின்ஆயுதமாகநான்ஊரைவிட்டேமாற்றலாகிபோகப்போறேன்என்கிறபோதுநான்கல்லூரிக்குவரலசர், என்முறைமாப்பிள்ளையைகல்யாணம்பண்ணபோறேன்னுபடிப்பைஇடையில்நிறுத்திடுவார்.

கோயில்திருவிழாவில்காதலன்ஒருவளையல்பரிசாகவாங்கி கொடுத்திருப்பார். அந்தவளையலில்இருந்து  பிரத்தியேகஒளிகதைசொல்லஆரம்பிக்கும்.  அந்தகதையின்உறவிடம்தேடிபோகையில் 1971 ல்எடுத்துமுடிக்கஇயலாதபடத்தில்பண்ணையாரா  நடித்திருந்த ஒருபள்ளிஆசிரியரைகண்டுபிடிப்பார்கள். அந்தபடத்தைஎடுத்துமுடிக்கஜமீந்தார்மகன்அனுமதிக்கவில்லைஎன்றுஅறிவார்கள்.. அந்தகதைபண்ணையார்அவமதித்தவெள்ளையம்மாஎன்றஒருதலிதுபெண்ணுடையகதையுடன்நிறைவுபெறும். அந்தபடத்தில்நடித்தகதாநாயகிக்குமபடத்தைஇயக்கும்சேரனுக்கும்ஒருகாதல். அந்தகாதலிதற்கொலைசெய்து 1975 ல்இறந்திருப்பாள். நிகழ்காலகதையில்வருபவள் 1985 ல்பிறந்திருப்பாள். அப்படி ஒருகதையைஇன்னொருகதையுடன்இணைத்துமுழுநீளக்கதையாகவிரிந்திருக்கும்மறைந்தசுகுமாரி, மனோரமாபோன்றவர்களின்நடிப்பையும்இப்படத்தில்ரசிக்கலாம்.  ம்மூன்றாமதலைமுறை ஜமீந்தராகசீமான்ஒரேஒருஷாட்டில்வந்துபோவார். சேரன்நடிப்புசிறப்பு. பழையபெண்கள்தொடர்பானபல பொல்லாதவழக்கங்களைமறுபடியும்ஊன்றல்கொடுத்திருப்பதுதவிர்த்திருக்கலாம்.


மலையாளஒளிப்பதிவாளர்மதுஅம்பாட்அவர்களின்ஒளிப்பதிவுபடத்திற்குதரம்கூட்டுகிறது. ஒரேகதையில்இருகதைகள்இணைவதும்மூன்றுதலைமுறைபெண்கள்கடந்துபோவதுமானதிரைக்கதைஅருமை. பலகதாப்பாத்திரங்கள்மலையாளத்தமிழ்பேசுவதுடம்பிங்படமாஎனசந்தேகம்கொள்ளவைக்கிறது.



பசி - திரைப்படம்

$
0
0
ஆண்களின் பலவகையான பசிகளும் அதனால் காயப்படும் பெண்களும்,  தான் கொண்ட அன்பை மரணம் வரை தூக்கி எறிய விரும்பாத பெண் மனநிலையும், ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்னொரு பெண் கரிசனையாக இருப்பதும் பசிப்படத்தில் காணலாம்.

பல பிற்போக்குத்தனங்களை தாங்கி படம் நகரும் போதும் அதன் பின்னால் இருக்கும் பெண்களின் உளவியலும்,
 தாய்மையுடன்  உலகை நோக்கும்  பரிவும் பகுந்தாய்ந்து 'பசி'என்ற  திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த கதைக்கருவெல்லாம் இன்னும் சில வருடங்களில் மண் மறைந்து போய் விடும்.

ஆண்களுக்கு பெண்கள் நிகர் என்றளவில் ;இன்றைய பெண்கள் எடுக்கும் முடிவுகளும் எதிர் வினையாற்றும் பாங்கும் இன்றைய இயல்பாகி விட்ட நிலையில்; என்னால் இன்னொரு பெண் பாதிக்கப்படக்கூடாது , என் உடன் பிறந்தவர்களை நான் தான் கவனிக்கனும், நான் அவசரத்தில் செய்த தப்புக்காக பிறக்க போகும் குழந்தையை எப்படி அழிப்பது இந்த வகை பெண் சிந்தனைகள் காலவெள்ளத்தில் அடித்து போன கருத்தாக்கமாக இருந்தாலும் அதன் அடிநாதமாக ஒழுகும் அன்பு கருணை எங்கு  போய் ஒளிந்து கொள்ளும்?

வளரும்  ஒரு கதையாசிரியரின் சாதனின் சிறு கதை வாசித்தேன். தன்னை காம இச்சையோடு நோக்கினவனை  ஒரு பெண் என்ன என்ன பாடுகள் படுத்தி விளையாண்டு அவமதிக்கிறாள் என்று கொஞ்சம் அச்ச உணர்வோடு நடுக்கத்தோடு வாசித்து முடித்தேன்.
கதையாசிரியரின் கற்பனையல்ல இன்றைய நிஜம் கூட அதுவே.
என்னால் அந்த கதையூடாக அவ்வளவு எளிதாக கடந்து செல்ல இயலவில்லை. மனித உறவுகளின் அடிநாதமாக ஒழுகும் அன்பு , கரிசனை அங்கு இல்லையே என அங்கலாய்த்து கதையாசிரியரிடம் கேட்டேன்.

கதையாசிரியரின் பதில் இன்றைய   நிலவரம் விளையாட்டு காட்டி  துன்புறுத்தி கடந்து போவது தான் நிஜம் என்றார்..
ஆற அமர சிந்தித்து பார்த்தால் கதாசிரியர் இரு தலைமுறையை  மிகவும் அவதானித்து தான் எழுதி உள்ளார் என்பதை என்னால் மறுக்க இயலாது.

கால ஓட்டத்தில்  காமம், காதல், நேயம் , பாசம் என பல பல உருவகங்களில் வரும்  அந்த ஒரே அன்பு கூட தோய்ந்து போய் விட்டதே?

இதை போன்ற பழைய படங்கள் கடந்து  வந்த  கற்று கொண்ட கலாச்சார வழியை ஏக்கத்துடன் நோக்கவும் தற்போதைய சமூக சூழலுகளை பொதிந்த  கதைகளின் ஓட்டம் இன்றைய அன்பின் பரிமாணங்களை நினைவுப்படுத்துகிறது.

இரு தலைமுறை மாற்றங்களில் எது சரி, எது நல்லது என்பதை விட எது காலத்திற்கு பொருந்துவது என்ற நிலையில்  நமது பூட்டன் , பெற்றோர் கொண்டாடிய பழைய தலைமுறைக்கும் நமது பிள்ளைகள்  வாழப்போகும்( வாழ வேண்டிய) புதிய தலைமுறைக்கும் இடையில் சிக்குண்டு நசுங்கி போனது போல் உள்ளது.
.
(அதில் நடித்திருந்த பிரவீணா, ஷோபா போன்ற நடிகைகள் தற்போது உயிரோடு இல்லை)

நவீன எழுத்தாளர் சாதனா
Viewing all 358 articles
Browse latest View live